திங்கள், 12 அக்டோபர், 2009

மரணம் என்றொரு போதி மரம் !!!


பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தை வாழ்க்கை என்றொரு மிக அர்த்தம் பொதிந்த வார்த்தையால் நாம் அடக்கிவிடுகிறோம் .மண்ணில் முளைத்ததெல்லாம் மீண்டும் மண்ணுக்கே சென்று ஒன்றென கலந்து விடுகிற விந்தையை,ஒரு சுழற்சியை பெரும்பாலோர் யாரும் வாழுகின்ற காலத்தில் அவ்வளாவை நுணுகி ஆராய்ந்து பார்த்ததில்லை எனலாம் !.



போராட்டம் நிறைந்த வாழ்க்கையில் முச்சு முட்ட நாம் ஓடி கொண்டே இருக்கின்றோம் ! கல்வி,திருமணம்,பிள்ளைகளின் படிப்பு, எதிர்கால திட்டங்கள் என பல வித தேடல்களில் நாம் பிறழ்ந்து பொய் எதையோ தேடி கொண்டிருக்கிறோம்,


நிறைந்த பணம் சேர்தவனும், அழுக்கு ஆடை தரித்த பிச்சை காரனும் இறுதியில் ஒரே இடத்திற்கே இறுதியில் சென்று சேர்கிறார்கள் .நிலம்,தோப்பு,வீடுகள்,தொழில் என பலதரப்பட்ட செல்வத்தை குவித்து விட்டு உப்பில்லாத உணவும்,நோயுற்று படுக்கையில்,உணர்வற்று அடங்கி கிடப்போர் இறுதியில் கொண்டு செல்வது எதனை?


மரணம் ஒரு மிக சிறந்த போதி மரம் !!.மரணத்தை குறித்து நன்கு அறிந்தவன்,அதை எதிர் கொள்ள தயங்காதவன் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்தவனாகி விடுகிறான்.






இருபத்தி ஆறு வயதில் ஐ.எ.எஸ் கனவுகளோடு இருந்த ஒரு இளைஞ்சன் காய்ச்சல் என்று சோதனைக்கு சென்ற போது ,புற்று நோய் இருப்பதாக அறிந்து அந்த நொடியில் அவனுடைய வாழ்க்கை எதை உணர்த்தி இருக்கும்?
ஒரு மாத கை குழந்தையை தவிக்க விட்டு மரணம் ஒரு தாய்க்கு எதனை சொன்னது?
மரணம் ஒரு மிக சிறந்த போதி மரம்! அதை நன்கு உணர்ந்தவனும்,சிந்திதவனும் என்றும் வாழ்ந்தபடி உள்ளான்

வெள்ளி, 29 மே, 2009

காலம் கலிகாலம் - தேய்ந்து போகும் வாழ்க்கை !!




உலகில் எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்து ஆடுகிறது அப்போதெல்லாம் மனிதர்கள் உரக்க சொல்லி கொள்வது "கலிகாலம் முத்திபோய் விட்டது "என்பதுதான்.மனித வாழ்க்கை முற்றிலுமாய் தேய்ந்து போய் அதனுடைய அழகிய வடிவம் மறைந்து குருரமம் , அருவருப்பும் வெளிப்படுத்தும் ஒரு இருள் நிறைந்த காலத்தில் நாம் இருக்கிறோம் அதைத்தான் கலிகாலம் என்று கிராமத்து பெரியவர்களும் ,படித்தவனும்,படிக்காதவனும் புலம்பி நிற்க செய்கிறது எனலாம்



அகோர வெளிப்பாடுகள் இந்த நில உலகில் மனித பிறவிகளால் அரங்கேற்றப்படுகிறது.இனபடுகொலை ஒரு பக்கம் மலரும் மொட்டுக்கலலேல்லாம் அழிக்கப்படுகிறது,பதுங்கு குழியில் வாழ்கையின் பாடம் கற்று கொடுக்க படுகிறது.வாழ்க்கை இன்னதென்று விளங்கி கொள்ள இயலாத ஒரு பருவத்தில்,கனவெல்லாம் தோட்டாக்களின் சத்தமும்,ரத்த வாடையும்,அலறல் ஒலிகளும் அந்த சின்னஞ்சிறு குழந்தைகளை மனதளவில் ஊனமாக்கி வந்ததை சர்வதேச உலகம் வேடிக்கை பார்த்தது .



உறவுகள் இன்றி அனாதைகள் ஆன எத்தனையோ மனித ஜீவன்கள் ஊமையாய் கதறும் ஒலிகளுக்கு இடையே உலகம் கள் குடித்த குரங்காய் கும்மாளித்து கூத்தாடுவதை கலிகாலம் என்று சொல்லாமால் வேறு என்ன சொல்வது !!

ஒரு ஜனநாயக நாட்டை அதன் பிரஜைகளை எங்கிரோந்தோ வந்து சர்வசாதரணமாக ஒரு தீவீரவாத கும்பல் சகட்டு மேனிக்கு சுட்டு தள்ளுகிறது. அதை அரசாங்கம் முன்கூட்டியே தடுக்க திராணியில்லாமல் வேடிக்கை பார்த்து கொள்கிறது.கொலை செய்தவனோடு கொஞ்சி கொண்டு வழக்கு விசாரணையில் காலத்தை கடத்துகிறது




நண்பர்கள் ,நட்பு போன்ற வார்த்தைகள் அர்த்தம் அற்று துரோகமும்,வஞ்சகமும் வெளிப்படும் காலம் கலிகாலமாகி விட்டது.

ஊடகங்களால் சிதைக்கப்படுகிறது இளையவர்களின் மனம்,வாழ்கையை தொடங்கும் வயதில் சகல அழுக்கிலும் கறைபட்டு போகிறது அவர்களின் மனம்

தந்தை மகளை கற்பழிக்கிறான் !!,


பெற்ற தாயையும் தந்தையையும் சொத்துக்காக கொன்று போடும் பிள்ளைகள்,!!


கணவன் உறங்கும் பொது மனைவி கொன்று போடுகிறாள்,!!


எல்லாவற்றிலும் லஞ்சம் ,!!

பணத்திற்காக எதையும் செய்ய துணியும் குருர புத்தி !!

கற்பு ,பெண்மை ஒழுக்கம் இவையெல்லாம் இரவு நடன ,மது கேளிக்கையில் ஒழித்து போடும் இளைஞர் கூட்டம்,!!
எல்லைகளை தாண்டி படிக்கும் வயதில் பிள்ளை பெற்றெடுக்கும் சிறுமிகள்,!!
தர்மத்தை அதர்மம் வெல்லும் என்று மாற்றி எழுத இதனால் முடியுமோ ? என்று அச்சம் கொள்ளக்கூடிய காலம் இந்த கலிகாலம் !!

வெள்ளி, 22 மே, 2009

வீரத்தின் மறுபெயர் வேலுபிள்ளை பிரபாகரன் !!


கேவலம் வெறும் வார்த்தை ஜாலங்களில் பதவி சுகத்தை அனுபவித்து கொண்டு தமிழ்,தமிழினத்திற்காக நான் உயிரை கொடுக்கவும் தயார் என பேசும் !! கோழை நம் தம் தமிழ் அரசியல் தலைவர்களை இந்த உலகம் இன்னும் மதித்து மரியாதை கொடுக்குமானால் அது மிக கேவலமான ஒரு விழயம் எனலாம்!



ஏறக்குறைய முப்பத்தி ஐந்து ஆண்டுகள் தமிழினம் அடக்குமுறைக்கு உட்படுதபடுவதை பொறுக்க சகியாமல் ஈழத்தில் மரணத்தை குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் ஆயுதம் ஏந்திய ஒரு சுத்தமான தமிழனைத்தான் இன்றைய இலங்கை அரசு வேட்டையாடி சாய்துவிட்டதாக தம்பட்டம் அடித்துகொள்கிறது.



உண்மையில் பிரபாகரன் அவர்கள் பதவிக்காக ஆசைப்பட்டு அந்த இயக்கத்தை முன்னிறுத்தவில்லை,!!பணத்திற்காக ஆசைப்பட்டு புலிகள் இயக்கத்தை வழிநடத்தவில்லை! .ஆயுதங்கள் மட்டுமே ஈழத்தை கொண்டு வரும் என்ற கனவில் வழி நடத்தியவர்தான் மாவிரன் பிரபாகரன் எனலாம்.



தமிழ் ,தமிழ் என்று முழங்கும் நம் அரசியல் தலைவர்கள் சுயநல பேய்கள் ,அவர்களுடைய பதவியை பாதுகாத்து கொள்ளவும்,பெறவும்,பணத்தை பெருக்கவும் தமிழ் ஒரு வியாபார சொல் எனலாம்


கொண்ட கொள்கையில் உறுதி,அதற்காக தனது உயிரை பணயம் வைப்பவனே ஒரு போராளி.அவ்வகையில் பிரபாகரன் அவர்கள் ஒரு மிக சிறந்த போராளி எனலாம்.பெற்ற மகனை போருக்கு அனுப்பிய செய்திகள் சங்ககால பாடல்களில் காணலாம் அதனை உண்மையில் நிகழ்த்தி காட்டியவர் பிரபாகரன்.
ராஜிவ் காந்தி படுகொலையால் புலிகள் இயக்கத்தின் மீது ஒரு கரை படிந்தது என்பது உண்மை ..எனினும் அது நிகழ பின்புல காரணமாக இருந்த நிகழ்வுகள் அரசியல் ஆய்விற்கு உட்பட்டது.தான் அடையக்கூடிய லட்சியத்திற்கு குறுக்கே வரும் எதனையும் அழித்து போடுவதைத்தான் கண்ணன் குருஷேத்ர யுத்தத்தில் அர்ஜுனனுக்கு கூறினான்.
வீரர்கள் என்றும் வீழ்வதில்லை..வீழ்ந்ததாக கருதினால் அது மடமை.மீண்டும் அத்தகைய வீரம் இந்த மண்ணில் பல உருவில் தோன்றி உயிர்தரிக்கும் ,வரலாறு படைக்கும்

ஒரு தனி இயக்கம் அதனை முற்றிலுமாக அழிக்க ஒரு நாட்டின் மொத்த ராணுவமே வேட்டை நாயாய் அலைகிறது.சர்வதேச நெருக்குதல்கள்,தொப்புள்கொடி உறவு என பெருமை பேசும் நாட்டின் பாராமுகம்..இவை எல்லாவற்றையும் மீறி இந்த இயக்கத்தை வழி நடத்தி காட்டிய மாவிரனாக பிரபாகரன் இந்த நில உலகில் அறியபடுவார்.
வீரத்தின் மறுபெயராக சரித்திரம் ஒரு பெயரை சொல்லுமானால் அது பிரபாகரனகவே இருக்கும்.தமிழினத்திற்காக உண்மையாய் உயிரினை தந்ததாக ஒரு போராளியை,ஒரு வீரனை சரித்திரம் பிரபாகரன் என்றே சொல்லும்!
எத்தனையோ பிஞ்சு பிள்ளைகள் மண்ணோடு மண்ணாகி போனார்கள்,கனவுகளை கொன்று ஒரு இனம் வேட்டையாடப்பட்டது எனில் அது தமிழினம்..ஈழ தமிழினம் மட்டுமே..!! அவர்களுடைய வலியை,இழப்பை,தவிப்பை வார்த்தைகளில் சொல்லுவது இயலாது

வீரம் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை வாழ்த்தாகவே சரித்திரம் உண்டு.!!

வெள்ளி, 8 மே, 2009

விடை தெரியா கேள்விகள்...!


மனிதன் சிந்திக்க தெரிந்த ,பகுத்தறியும் அறிவுகொண்ட உயரிய படைப்பு. நாம் அறிந்த வரையில் மனிதனை காட்டிலும் உயரிய ஒரு உயிர் படைப்பு இந்த நில உலகிலும் பிரபஞ்சத்தில் வேறெங்கிலும் நாம் அறிந்ததில்லை.உலகினை படிப்படியாக தனது அறிவால் சிந்தித்து வடிவமைத்து மனித மூளை.



பல நூற்றாண்டுகளாக இந்த உலகில் பல அறிவியல் ,மனவியல் அற்புதங்களை மனிதன் தனது அறிவால் படைத்து வருகிறான் .பல லட்சகணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நிலவுக்கும்,செவ்வாய்க்கும் இந்த பூமியில் இருந்தபடி பல ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து காட்டிய மனித பராக்கிரமம் வியக்கக்கூடிய ஒன்று.


இருப்பினும் மனித அறிவுக்கும் ,திறனுக்கும் அப்பாற்பட்டு இந்த பூமியில் பல விடை தெரியாத கேள்விகள் மனிதனை சுற்றி வந்தவண்ணம் இருந்து கொண்டிருக்கிறது .மனித அறிவு அழுத்தமான விளக்கங்களை விடைகளாக விளக்க திறனற்றதாக இருக்கின்ற அந்த விடைதெரியாத கேள்விகளே மனிதனுக்கு முன் வைக்கப்பட்டுள்ள சவால் எனலாம்.!


மனித மூளையின் முதல் தோல்வியும் மனித அறிவையும் மீறி ஏதோ ஓர் சக்தி ஆட்டி வைக்கும் வல்லமை கொண்டதாக உள்ளது எனபதற்கு மனித வாழ்வின் மரணம்" விடை தெரியாத பல கேள்விகளில் முதல் கேள்வி எனலாம்.


மனிதனால் ஏன் மரணத்தை தடுக்க இயலுவதில்லை ? முதுமை,நோய் ,விபத்து என பல காரணிகளால் மனிதன் முடிவை நோக்கி செல்லும்போது அதனை முற்றிலுமாக தடுக்க இயலாமல் மனிதன் தனது சிந்தனை,அறிவு என எல்லா உயரிய தன்மைகளின் எல்லை கோட்டில் நிற்கின்றான்.


மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது மனித மூளையின் எல்லை முடிந்து அதற்குமேல் என்ன என்பது மனிதன் அறிதிராத ஒரு நிதர்சனம் எனலாம்.பல மருத்துவர்கள் எங்களால் முயன்றவரை நாங்கள் முயன்றாகிவிட்டது இனி இந்த உயிரை காப்பட்ட்ற வல்லவன் இறைவன் மட்டுமே என்று கூறும் போது மற்றொரு கேள்வி முளைக்கிறது...யார் அந்த இறைவன் ? அவன் எங்குள்ளான் ? இந்த கேள்விகளுக்கு விடை தேடி புறப்பட்டவர்களை இந்த உலகம் கொண்டாடி மகிழ்கிறது. எனினும் முற்றிலும் உறுதியான விடையை இந்த உலகம் இன்று வரை பெறவில்லை !!



பிரம்மனை uஇரகளை படைக்கும் கடவுளாக இந்து புராணங்கள் கூறுகின்றன நவின அறிவியலில் மனிதன் கண்ணாடி குழாய்களில் மனித உயிரினை படைக்க வல்ல பிரம்மனாக இருப்பதை நாம் காண்கிறோம்.


ஆனால் மரணம் என்று வரும் போது அந்த மனித பிரமனும் சவபெட்டிக்குள் ஆணியிட்டு அடைக்கப்பட்டு மண்ணுக்குள் புதைக்கபடுகிறான் .எங்கே சென்றது அவனுடைய பராகிரமம் ?


நாகரிகத்தில் முன்னோடி என்று பறை சாற்றி கொள்ளும் மனித இனத்தில் பலவித அலங்கோலங்களும்,அருவருப்புகளும் விடை இன்றி இன்னும் இருக்கிறது எனலாம் .பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வந்த பின்னும் இன்னும் மனிதன் ஏன் ஆடு,மாடு,கோழி,பாம்பு,பல்லி,பன்னி,எலி,தவளை,குரங்கு,கடல் வாழ் , இன்னும் இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் கொன்று மனிதன் தனது வயிற்றுக்குள் தள்ளுவது எந்த வகை நாகரிகம் ??


பூமியின் ஒரு பகுதி வறுமையாலும்...மற்றொரு பகுதி செழிப்பாகவும் இருக்க காரணம் என்ன ?


வாழ்க்கையில் விதி என்றும் ..இறைவனின் விருப்பம் என்றும் மனிதனை ஏற்று கொள்ள செய்வது எது?


மரணத்தின் முன்னாள் மண்டியிட்டு நிற்க செய்வது எது ?


கனவு போல் கழிந்து செல்லும் செல்லும் வாழ்கை உண்மைதான?



இன்னும் பல கேள்விகள் மகா அறிவு பொருந்திய மனிதனால் விடை காண முடியாததாக உள்ளது விந்தை.ஏனெனில் மனிதன் பிற கோள்களில் தன்னை போல் ஏதேனும் இனம் இருக்கிறதா என விட தேடி செல்லும் தருணத்தில் இந்த எளிய கேள்விகளுக்கு விடை தெரியாமல் பல நூற்றாண்டுகளை கடத்தி வருவது ஏன் என விளங்கி கொள்ள இயலவில்லை



உங்களில் யாருக்கேனும் இதற்கான விடைகள் தெரிந்தால் பாவம் இந்த மனித பதர்களுக்கு உதவுங்களேன் !!







வெள்ளி, 1 மே, 2009

பகவத் கீதையும் - பகவான் கிருஷ்ணனும் !!



குருஷேத்ர மகா யுத்தம் பாண்டவ மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடைபெற்றது மகாபாரதத்தின் ஒரு பகுதி எனலாம். அந்த யுத்தத்தின் போது யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தது பகவான் கிருஷ்ணன் , கலக்கமுற்று ,மனம் பேதலித்து நின்ற அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கூறிய உபதேசங்களே பகவத் கீதையாக போற்றப்பட்டு வருகிறது.  இறைவனின் கானம் என பொருள்படும் கீதை உலகம் போற்றும் வேத நூல்களில் ஒன்று!




சாரதியாக இருப்பவனே அனைத்தையும் அறிந்தவனாகவும்,அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆண்டவனாகவும் தன்னை வெளிபடுத்துகிறான் கிருஷ்ணன்.!!





சராசரியான மானிட மன நிலையில் பந்த பாசங்களுக்கு ,உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தயங்கி நிற்கும் மனிதனாக அர்ஜுனனை யுத்த களத்தில் கீதையில் நாம் காண முடிகிறது.அதே தருணத்தில் தேரோட்டியோ எல்லையில்லா ஞானம் கொண்ட அனைத்தையும் கடந்து நிற்கும் மிக வல்லமை கொண்ட ஞான குருவாய்,என்னையே சரணடை என மந்தகாச மாய புன்னகையில் க்ரிஷனனையும் நாம் காண முடிகிறது.




ஏசுபிரானின் காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கீதை இந்த மண்ணில் தோன்றியிருந்தும்,அதனை தொகுத்து வழங்கிய ஆசிரியர் யார் என்பதும் தெளிவற்றதாகவே வரலாற்று ஆய்வியளாலர்கள் முன்வைக்கப்படுகிறது.



கீதையில் கிருஷ்ணன் பல சத்தியங்களை,உண்மைகளை அர்ஜுனனுக்கு கூறுகிறான்.அந்த உபதேசங்கள் யோகங்களாக பிரிக்கப்பட்டு கீதையில் சீரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது.!!.கர்ம யோகம் , ராஜா யோகம்,பக்தி யோகத்தின் தன்மைகள் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது,மேலும் 

இறைவன்............


மனிதன்.............


கர்மம்...............


காலம்................


தர்மம் .............


என்று பல விழயங்களை ஞானத்தின் முத்துகளாக கிருஷ்ணன் யுத்த களத்தில் உதிர்துள்ளதை கீதை வெளிப்படுத்துகிறது .இந்து சமயத்தின் தத்துவ சித்தாந்தத்தை கீதை வெளிப்படுத்துவதையும் நாம் உணர முடிகிறது.


கீதையின் உந்து சக்தியாக பலராலும் அறியப்படுவது "கடமையை செய் பலன்களை எதிபாராதே  " என்கின்றன முழக்கமே!!



வினை வாழ்வை வகைபடுத்த வல்லது என்பதால் வினை ஆற்றுவதிளிரிந்து மனிதன் ஒதுங்கக்கூடாது என கண்ணன் மிக தெளிவாக அறிவுறுத்துகிறான்.







சம்சார வாழக்கை என்கின்ற யுத்த களத்தில் மனிதன் திறத்துஇடன் வினையாற்றிட வேண்டும் கடமையை செய்வதிலும்,தண்ணிரில் இருக்கும் தாமரை இல்லை எப்படி நீரில் இருந்தும் பந்த படாமல் இருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனும் பந்த படமால் வினையாற்றிடவேண்டும் என்பது கீதையின் பல பொருட்களில் ஒன்று.



கீதையில் கண்ணனின் உபதேசம் கால நிலைகளை கடந்த ஒன்று..எந்த தருணத்திலும்,எந்த தேசத்தவருக்கும் பொதுவான ஒரு உபதேசம் என்பது அதன் தலையாய சிறப்பு !










திங்கள், 27 ஏப்ரல், 2009

"வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் ..."



இந்த நில உலகில் நம்பிக்கை மட்டுமே மனித வாழ்கையை அர்த்தபடுத்தவல்லதாக இருக்கிறது.கடுமையான சோதனைகளிலும் நிதானம் இழக்காமல் தங்களுடைய இலக்கினை நோக்கி நடந்து , அடைந்தவர்களையே உலகம் முன் மாதிரியாகவும் அவர்களுக்கு உரிய அங்கிகாரத்தையும் அளிக்கிறது.



அத்தகைய மனிதர்கள் வாழ்கையை,சாதனைகளை எண்ணும் போதும் ,படிக்கும் போதும் மனம் தளர்ச்சியிளிரிந்து மீண்டு புத்துணர்வை பெறுகிறது.நம்மில் பலருடைய வாழ்க்கையிலும் நம்பிக்கையை வெளிப்படுத்தி வென்ற தருணங்கள் உண்டு.



சென்னை மாநகரத்தின் சேரி பகுதிகளில் இட்லி விற்று ,தன்னுடைய தாய்க்கு ஆதரவாகவும் அதே தருணத்தில் தனது இலக்கினை நோக்கி முன்னேறி சென்று படித்து பட்டம் பெற்று .... பன்னாட்டு நிறுவனங்கள் பல லட்சங்களை சம்பளமாக தர முன்வந்தும் அவற்றை மறுத்து ,தனது உழைப்பால்,திறத்தால் தானே ஒரு நிறுவனத்தை தொடக்கி வெகு குறுகிய காலத்தில் ஏழு கோடி ருபாய் வருமானம் செய்யும் நிறுவனமாக மாற்றி காட்டிய திரு. சரத்பாபு என்கின்ற இளைஞர் இன்றைய தினத்தில் நம்பிக்கையின் அடையாளம்.!!



எண்ணுவது போலே வாழ்க்கை என்பதற்கு பல மனிதர்கள் எடுத்துகாட்டாய் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.மனிதன் உடல் உறுப்புகளை இழந்தால் கூட நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருப்பானாயின் அளப்பரிய சாதனைகளை செய்ய இயலும் .!



ஒரு ரயில் பயணத்தில் இரண்டு பார்வையற்ற சின்னஞ்சிறுவர்கள் "வாழ்க்கை என்னும் ஓடம் வழங்கு கின்ற பாடம் ..." என்று குரலெடுத்து பாடி ...மனதை உருக்கி கடந்து சென்ற போது அவர்களுடைய நம்பிக்கை ஒளி பொருந்தியதாகவும் வாழ்கையை எதிர்கொள்ள அவர்கள் தயக்கம் அற்று இருப்பதும் ஒரு முறை எனக்கு விளங்கியது .ஆனால் கண்,செவி,வாக்கு,படிப்பு எல்லாம் இருந்தும் கோழைகளை போல் தோல்விக்கு அஞ்சி நடுங்கும் தன்னம்பிக்கையட்ட்ற மெத்த படித்தவர்கள் நம்மில் பல பேர் இந்த சமுகத்தில் வாழ்ந்துவருவதையும் நாம் காண்கின்றோம்


தகுந்த சீருடை இல்லாமல் பள்ளிக்கு பல மைல்கல் நடந்து சென்று.....


குறிப்பேடுகளும் ,பாட புத்தகங்களையும் வாங்க பணமற்று.......


சத்து உணவிற்கு நண்பகலில் வரிசையில் நின்று....


மின்சார மற்ற மண் குடிசையில் மண் எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து ...


ஒவ்வொரு ஆண்டும் தேர்வு விடுமுறை நாட்களில் நகை கடைகளிலும்,துணிகடைகளிலும், வேலை செய்து...



தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேறி ...மேற்படிப்பிற்கு யாரிடம் கை ஏந்துவது என்று தடுமாறி நின்றவர்கள் நம்மில் பல பேர்.


அத்தகைய உங்களில் ஒருவராக பலர் இன்று நம்பிக்கையின் ஊற்றாக விளங்குகிறார்கள்.


பல சோதனைகளுக்கு இடையே படித்து,பட்டம் பெற்று..எஞ்சினீயராகவும் ,டாக்டர்களாகவும் இந்த சமுகத்தில் தங்களுடைய நம்பிக்கைகளுக்கு அர்த்தம் கொடுக்கின்ற உங்களில் ஒருவர் பாராட்டப்பட மட்டுமில்ல பின்பற்ற படவேண்டியவரும் கூட !!

தன்னம்பிக்கையற்ற வாழ்க்கை சுருதி பிறழ்ந்த பாடலாக இந்த சமுகத்தில் அங்கேயும் இங்கேயும் இடைஇடையே கேட்டாலும்.இவற்றை எல்லாம் மீறி "வாழ்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் " என்ற பார்வையற்ற அனால் தன்னம்பிக்கை குறையாத அந்த சின்னஞ்சிருவர்களின் பாடல் நீங்காமல் ஒலித்தபடி உள்ளது .

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

பாதை மாறிய பயணங்கள்..!!



பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட ஒரு நீண்ட பயணத்தை வாழ்க்கை என்று நாம் வெகு சுருக்கமாய் நாம் சொல்லிவிடுகிறோம் !. உண்மையில் வாழ்க்கை அத்துனை எளிமையான ஒன்றாக நம்மில் அநேகம் பேருக்கு அமைந்து விடுவதில்லை.


எல்லா நிலைகளிலும் மனிதன் போராடிபோராடி முன்னேறி செல்கிறான் , அன்றாட ஜீவிதத்திற்கு போராடும் மனித கூட்டம் ஒரு புறம் ! வயிற்று பசி தணிக்க வாழ்க்கை என்பது இன்றளவும் கூட நாம் காண கூடிய அவலமாக பிச்சை பாத்திரம் ஏந்திய சிறுவர்களும் முதியவர்களும் சாட்சி !


இளமையில் கனவுகள் சிதைந்து போகின்றன தன்னுடைய வயதை ஒத்த சிறுவன் நல்ல உடை அணிந்து பள்ளிக்கு செல்லும்போது மற்றொரு சிறுவன் தன்னை தாழ்வு நிலையோடு தன்னை தன்னுடைய வாழ்கையை பார்க்கிறான்.

பாதை மாறிய ஒரு பயணம் அங்கே ஆரம்பிக்கிறது .பயணத்தின் இலக்கு அடையவேண்டிய இடம் இருவருக்கும் ஒன்றாகவே இருந்தாலும் அங்கெ பாதை மாறிய ஒரு பயணம் தொடங்குகிறது.உண்மையில் வாழ்க்கை அத்துனை எளிமையான ஒன்றாக நம்மில் அநேகம் பேருக்கு அமைந்து விடுவதில்லை.



துளிர்விடும் சின்னஞ்சிறு ரோஜா செடியின் மீது நெருப்பின் கங்குகள் வீசப்படுகின்றன பாவம் துளிர்விடும் இலைகள் கருகி போகின்றன.இங்கே தளிர்விடும் இலைகள் கனவுகளாகவும், நெருப்பின் கங்குகள் சமுகத்தில் உள்ள பல அவலங்களையும் அடையாளம் காட்டுகிறது



பிள்ளையை பெற்றவனின் குற்றமா ?


கசடேறிய சமுக அமைப்பின் காரணமா..?


தனது குடிமகன்களை கையேந்த செய்கின்ற அரசின் குற்றமா..?



பிறந்த அந்த பிள்ளையின் குற்றமா..?



பொறுப்பற்ற பெற்றோரால் உலகில் அல்லல்படும் பிள்ளைகள் ஏராளம் , குடி ,உழைப்பின்மை,எதிர்கால நோக்கம் ஏதுமற்று வெறும் காமத்தில் உதித்த பிள்ளைகளை நடு தெருவில் விட்டு செல்வதும்,பிச்சை எடுக்க செய்வதும் மிக பெரும் சமுக சீர்கேடாக இன்றளவும் உள்ளது.
கனவுகள் நசுக்கப்பட்டு பல கொடுமைகளுக்கும் ,பாலியல் மிருக தனத்திற்கும் சிக்கி சீரழியும் சிறார்கள் எங்கிருந்து பெறபடுகிறார்கள்...?
இளமையில் வறுமை.....
இளமையில் மறுக்கப்படும் கல்வி......
இளமையில் தவறான வழி காட்டுதல்கள்
இளமையில் குடும்ப சுமை....
இப்படி பல காரணங்கள் பாதை மாறிய ஒரு பயணத்திற்கு ஒரு காரணமாய் போகின்றன.


திறமைகள் குழி தோண்டி புதைக்க பட்டு , மனித பிறப்பின் நோக்கம் இன்னதென்று உணராமலே வாழ்கை பாதையில் முன்னேறி செல்லும் எண்ணற்ற சின்னஞ்சிறு குழந்தைகள் பரிதாபத்திற்கு உரியவர்கள் !
உங்களுடைய ரயில் பயணத்திலும்...பேருந்து பயணத்திலும் நீங்கள் மிக சரியான இடத்தில் நின்று கொண்டிருக்க ...உங்களை சுற்றி கையேந்தி நிற்கும் அந்த சின்னஞ்சிறியவர்கள் உண்மையில் பாதை மாறிய பயணத்தில் உள்ளவர்கள்..!!
பாதை மாறிய பயணத்தில் நாம் சரியான இடத்திலும் அவர்கள் தவறான இடத்திலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சந்திப்பது விதியா? விந்தையா? விடை தெரிந்தால் சொல்லுங்கள் !


செவ்வாய், 7 ஏப்ரல், 2009

நானா மலடி... ?



அரச மரம் சுற்றி,நெய் தீபம் ஏற்றி , மண் சோறு உண்று,பல மருத்துவமனைகள் படியேறி பல செய்யல்கள் செய்தும் மனமிரங்காமல் என்னை வஞ்சிக்கும் தெய்வமே ...நீ என்று மனம் இறங்குவாய் ??



தூக்கம் வற்றிய எனது கண்களும்..
கண்ணீரில் நனைந்த என் தலையணையும் எந்த விடியலில் மாறும்..?



நீ சிரிக்கும் போது நானும் சிரித்து..நீ அழும் போது நானும் அழுது உன்னை கையில் ஏந்தி கொஞ்சி மகிழ என்று நான் உன்னை பெறுவேன் என் செல்லமே ???



குரலெடுத்து அழுகின்ற பக்கத்து வீட்டு குழந்தையின் அழு குரல் கேட்கும் போதும் , சிரித்து விளையாடும் ஒலி கேட்கும் போதும் இனம் புரியாத இரக்கமும் மகிழ்வும் தோன்று எனது தன்மைக்கு மலடி என்றொரு மற்றொரு பெயரா?


இருவரில் யாரிடத்தில் குறைகள் இருப்பினும் மலடி என்று பட்டம் பெறுவது பெண்கள் மட்டும் தானே ?


பிச்சை எடுத்து செல்லும் சின்னஞ்சிறு பிள்ளைகளை பெற்று நடு வீதியில் விட்டு சென்றவள் தாயா??


அந்த பிச்சை எடுத்து செல்லும் பிள்ளைகளை கண்டு மனம் வாடும் நான் மலடியா..?



பிள்ளைகளை வளர்க்க வழி இன்றி தெருவில் விடும் பேதைகளை தாயென்று கொண்டாடும் உலகம் என்னை மலடி என்று கூறி மகிழ்வது என்ன நியாயம்?
பெற்றால் மட்டுமே தாயா ?




தாய் என்பவள் கருணை நிறைந்தவள்...இரக்கம கொண்டு தியாகம் செய்பவள்!
கண்களில் தூசு விழுந்தால் கண்கள் கலங்கும்..தாயவள் கண்கள் போன்றவள்!
கலங்கும் போதும்,மகிழ்வின் போதும் குணங்களை வெளிப்படுத்தும் கண்களை போன்றே தாய் அன்பினை வெளிபடுத்துவாள்..
பிள்ளை பெறாவிட்டாலும் நானும் தாய்தான்..!
கண்ணீரில் நனைத்த எனது தலையனை மட்டுமே அறியும் நானும் தாயென்று !
நீங்கள் இப்போது சொல்லுங்கள்...
நானா மலடி... ?


வெள்ளி, 3 ஏப்ரல், 2009

வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!!


இந்த மானுட சமுகத்தில் வறுமை பல அவலங்களையும்,கொடுமைகளையும் அரங்கேற்றி ஒரு கொடிய நோய் போல பல நாடுகளிலும் சமூகங்களிலும் இன்னும் நீங்காமல் உள்ளது.


விளை நிலங்களில் பச்சை கட்டி வளரும் நிலையில் உள்ள பயிர் பச்சைகளில் ஒட்டுண்ணிகளும்,பூச்சிகளும்,பல வித நோய்களும் தாக்கி சீரழிப்பதை போல் ,வறுமை பல அவலங்களை மனித வாழ்க்கையில் திணிக்கிறது.


இளமையில் வறுமை கொடியது நாளைய நம்பிக்கைகளை வெகு தொடக்கத்திலேயே அழிக்கும் அந்த இளமையில் வறுமை கொடுமையிலும் கொடுமையே !. அந்த வறுமை சின்னசிறு மனதுகளில் ஏக்கத்தை ஏற்படுத்தி ,தாழ்வு கொள்ள செய்கிறது மேலும் ...

அது கனவுகளை சிதைக்கிறது...!


அளப்பரிய திறமைகளை முளையிலேயே அழித்து போடுகிறது...!


உணவுக்கு போராட்டம்...!


உடைக்கும் தங்கும் இடத்திற்கும் போராட்டம்..!

கல்வி மறுக்க படுகிறது ..மேலே படிக்க பொருளாதாரம் இல்லை!.மனித திறமைகள் முனை மழுக்க செய்விக்க படுகிறது.


ஆனால் செல்வம் கற்று கொடுக்கின்ற பாடத்தை காட்டிலும் வறுமை அருமையான பாடத்தை மனிதர்களுக்கு கற்று கொடுக்கும் ஆசானாக ..மிக சிறந்த ஆசானாக விளங்குகிறது.


அப்படி வறுமையின் ஊடே போராடி..வாழ்க்கையில் மனித தன்னம்பிக்கையை தடம் பதித்து காட்டியோர் பலர். அவர்களை நினைவு கூர்வதின் மூலம் இன்றைய சமுகத்தில் தன்னொளி பரவும்.வறுமையை வென்று சாதித்து வரலாற்றின் பக்கங்களில் தங்களையும் தாய் திரு நாட்டையும் உயர்த்தி பிடித்த... பிடிக்க இருக்கின்ற அனைவர்க்கும் இந்த பதிவு ஒரு சமர்ப்பணம் !


கர்ம வீரர் என அழைக்கப்படும் தன்னலமற்ற உண்மையான மக்கள் தலைவர் காமராஜர்.இளைய வயதில் பள்ளிஇணைந்த முதல் வருடத்திலேயே தனது தந்தையை இழந்தார்...குடும்பம் வறுமையில் தத்தளித்தது ...இளைய காமராஜரின் நிலையை நினைத்து பாருங்கள் அருமையானவர்களே..தாயின் சொற்ப தங்க அணிகலன்கள் வட்டி கடையில் வைக்கப்பட்டு குடும்பம் நடத்த வேண்டிய அவல நிலைமை..!!

காலம் மாறியது கர்மவீரர் காமராஜர் தனது அயராத உழைப்பால் தமிழகத்தின் முதல்வர் ஆனார். ஏழைகளுக்கு கல்வியை இலவசம் ஆக்கினார்.இன்றளவும் மக்களுக்காக மக்களின் பொருட்டு வாழ்ந்த அற்புத தலைவர் காமராஜர்.

ஏனெனில் வறுமை அவருக்கு வாழ்க்கை இன்னதென்று விளங்க செய்தது .




வாழும் சரித்திரம் திரு. அப்துல் கலாம் அவர்கள் ராமேஸ்வரத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார் .தனது பள்ளி படிப்பு செலவிற்கு வீடு வீடாக அவர் பத்திரிக்கை போட வேண்டிய நிலைமை. கலாம் அவர்கள் தோய்ந்து போகவில்லை, கனவுகளை ,நம்பிக்கையை இழக்கவில்லை மாறாக உழைத்தார் ,தாய் திரு நாட்டின் கொவ்ரவம் காக்கும் உயரிய பதவிகளை அலங்கரித்தார்..வின்ஞாநியானார்..நாட்டின் ஜனாதிபதியாகி பல இளைய தலைமுறையினருக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறார்.
உண்மையில் செல்வம் கற்று கொடுக்கும் பாடத்தை காட்டிலும் வறுமை அற்புத பாடத்தை மனிதர்களுக்கு கற்று கொடுக்கிறது.அது தன்னம்பிக்கை,கடின உழைப்பு,மனித வாழ்கையின் மதிப்பு சகலத்தையும் கொடுத்து மனிதனை மாமனிதனாக உயர்த்தி காட்ட வல்லதாய் இருக்கிறது !


தெரு விளக்கு வெளிச்சத்தில் கல்வி பயின்று .மேல் நாட்டினறேல்லாம் வியந்து பாராட்டிய வியத்தகு அறிவு திறன் கொண்ட பேரறிஞர் அண்ணா ஒரு சாதரண ஏழை குடும்பத்தில் பிறந்தவரே.
தமிழ் நாட்டின் முதல்வராகி "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்" என கூறியதன் முழு அர்த்தத்தையும் வேறு யார் அறிவர் ?.வாழும் கடைசி காலம் வரை எளிமையோடு வாழ்ந்து வரலாற்றை தனதாக்கி கொண்டார்



எம்.ஜி.ஆர் நாம் எல்லாம் அறிந்த வசிகர தலைவர்..ஏழைகளின் பால் அதிக அன்பு கொண்டதால் மக்கள் திலகம் என அழைக்கபட்டார். தந்தையின் மறைவின் பிறகு அரிதாரம் பூசி நடிக்க வந்தார். தனது புத்தி கூர்மையால்,வசிகரத்தால் மக்களின் இதயங்களில் இடத்தை பிடித்து தமிழகத்தின் முதல்வராகி ..பசி தீர்க்கும் மத்திய உணவு திட்டத்தை அமல் படுத்தினார்.இறக்கும் வரை ஏழை பங்காளனாய் வாழ்ந்தார் எம்.ஜி.ஆர்.





பண்ணயபுரத்தில் ஞானதேசிகனாய் தோன்றிய இளையராஜா ஒரு கிராமத்து ஏழை குடும்பத்தில் பிறந்தார். வறுமை விரட்டியதில் இவரின் இசை செல்வம் இப்போது பட்டிதொட்டிகளில் எல்லாம் ஒலித்தபடி உள்ளது.சிம்பொனி அமைத்து..திருவாசகம் பாடி மனித மனதினை வருடி கொடுக்கும் இசை ஞானி வறுமையை கண்டு அஞ்சிடவில்லை!





அமெரிக்க ஜனாதிபதி அப்ரகாம் லிங்கனை அறியாதவர் யாருமில்லை.அடிமை தனத்தை ஒழிக்க அரும்பாடுபட்ட லிங்கன்.கல்வி அறிவட்ட்ற ஏழை விவசாய பெற்றோர்க்கு மகனாக தோன்றிய வரே !
அமெரிக்க தொழில் மேதை ராக் பெல்லர் வசதியட்ட்ற ஒரு ஏழை குடும்பத்தில் தோன்றியவர்தான் ,படிக்க வசதியற்று வளர்ந்த ராக் பெல்லர் உழைப்பை மூலதனமாக கொண்டு அமெரிக்க பெரும் பணக்காராக மாறினார்.




இந்தியாவை மற்ற உலக நாடுகள் எல்லாம் வியப்போடு பார்க்கின்ற வகையில்.ரிலையன்ஸ் தொழிற்சாலையை அமைத்தவர் அம்பானி அவர்கள்.சாதாரன மனிதராக முன்னுறு ரூபாய் சம்பளத்தில் யேமென் நாட்டில் உழைத்தவர்..இன்று இந்தியாவின் பொருளாதாரத்தை அளகிடகூடிய வகையில் உள்ளது ரிலையன்ஸ் குழுமத்தின் வணிகம்.
இப்படி நீண்ட பட்டியல் சரித்திரம் முழுக்க பதிவு செய்யப்பட்டுள்ளது.
வறுமை கனவுகளை சிதைக்கும் ஆனால் துவண்டு விடாதீர்கள்.மாறாக கடின உழைப்பினால் மீண்டும் பலருக்கு அந்த கனவுகளை நீங்கள் ஏற்படுத்த கூடும் !!
வறுமையால் பண்பட்டு மேலே வந்தவனே உண்மையில் வாழ்கையை உண்மையாக வாழ்ந்தவனாகி போகின்றான்! .அவனுக்கு வாழ்கையின் வலியும்,உழைப்பின் அர்த்தமும் தெரியும்!
வளரும் பருவத்தில் வறுமை கொடியது எனினும் அது பல சரித்திர புருழர்களை உருவாக்கி கொடுத்து சென்றுள்ளது.
உழைப்பு...!
ஒழுக்கம்..!
தன்னம்பிக்கை..!
சோதனையிலும் மனம் தளராத நிதானம் ..!
இவை எல்லாம் வறுமை எனும் நோய்க்கு மருந்தாகும்.
இவர்கள் எல்லோரையும் நினைவு கூர்வதின் மூலம் இன்றைய சமுகத்தில் தன்னொளி பரவும்.வறுமையை வென்று சாதித்து வரலாற்றின் பக்கங்களில் தங்களையும் தாய் திரு நாட்டையும் உயர்த்தி பிடித்த... பிடிக்க இருக்கின்ற அனைவர்க்கும் இந்த பதிவு ஒரு சமர்ப்பணம் !






செவ்வாய், 31 மார்ச், 2009

வள்ளலார் - அற்புத வாழ்கையும் ! அருட்பெருஞ்சோதியும்!!

மனிதர்களாய் அவதரித்து ஞானிகளாய்,சித்தர்களாய்,தங்களை பிற சாமான்ய மனிதர்களிடதிலிரிந்து வேறுபடுத்தி காட்டி அற்புத வாழ்க்கையையும்,போதனைகளையும் இந்த உலகிற்கு நல்கியவர்கள் பலர்!!.





பத்தொன்பதாம் நூற்றாண்டில் அப்படி ஒரு அற்புத அவதரிப்பு நிகழ்ந்தது ,தில்லை எனும் சிதம்பரத்திற்கு அருகே மருதூர் என்னும் கிராமத்தில் ஆயிரத்தி எட்நூற்றி இருபத்தி மூன்றாம் ஆண்டு ராமையா பிள்ளைக்கும் ,சின்னம்மைக்கும் ஐந்தாவது மகவாக அவதரித்தார் ராமலிங்கம் எனும் வள்ளல் பெருமான்.





பசியென கூறி படி அருகே வந்து நின்ற சிவனடியார் ஒருவர்க்கு அமுதளித்த சின்னமையை ,வாழ்த்தி அந்த சிவனடியார்" என் பசியினை போக்கினை அம்மையே இந்த உலகமெலாம் பசியாற வள்ளல் ஒருவன் உன் மணி வயிற்றில் தோன்றுவான் "என்று" கூறி மறைந்தார்.அந்த வாழ்த்துதலை மெய்ப்படுத்தி அவதறித்தவரே வள்ளல் பெருமான்.





இளைய வயது முதலே யாரிடத்திலும் கல்வி பயிலாமலே அற்புத ஞானம் உள்ளவராக விளங்கினர் வள்ளலார் .மிக எளிமையாக மனிதன் தன்னுடைய வாழ்கையை எங்கனம் அமைத்தால் தெய்வ நிலையையும் அடைய கூடும் என்பதனை அற்புதமாக எடுத்துரைத்தவர் வள்ளல் பெருமான் அவர்களே !



"வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் ",என வாடியவர் வள்ளலார். இதன் மூலம் அவருடைய பிற உயிர்களின் மீது கொண்டிரிந்த இரக்கம் ,கருணையை நன்கு அறியலாம்.











இறைவன் ஒருவரே...!


அவன் ஒளி வடிவானவன் அவ்விதமே பூஜிக்க ....!


மாமிசம் உண்ணுதல் பாவம்...!


மிருகங்களை பலியிட்டு படைக்கும் வழிபாட்டு முறைகள் தவறானவை..!!



சாதிகளும் , மதங்களும் உண்மையாய் உணர பயன் படா..!


கருணையும்,பசித்த உயிரின் பிணி போக்குதல் தலையாய கடமையாகும்...!


எல்லாவற்றிலும் தெளிந்த பார்வையும்,கருத்தும் வேண்டும்


புராணங்களும்சாஸ்திரங்களும் உண்மை உனார பயன் படாது ..!


என வெகு எளிமையான மார்க்கத்தை உபதேசித்தார் வள்ளலார்.அவருடைய திரு அருட்பா அற்புத போதனைகளை,பல சூட்சுமங்களை உள்ளடக்கிய ஒன்றாகவே உள்ளது.அற்புத சந்தங்களையும்,பொருட்கருத்தையும் தாங்கி தமிழுக்கும் பெருமை சேர்த்து அழியா புகழ் கொண்டுள்ளது .



பசி பிணி போக்க வள்ளால் பெருமான் தொடங்கி வைத்த தரம் சாலையை நீங்கள்மேலே பார்க்கிறீர்கள் .ஏறக்குறைய இருநூற்றி ஐம்பதாண்டுகளாக அணையா அடுப்பாக பாதுகாக்க பட்டு வரும் தர்ம சாலை இன்றளவும் வள்ளலாரின் கருணையை வையகத்துக்கு தெரிவித்தபடி உள்ளது.



வள்ளலார் சத்ய ஞான சபையை தோற்றுவித்து "தனது மார்கத்துக்கு ஒரு கொடியையும் உண்டாக்கினார்.



ஆயிரத்தி எட்நூற்றி எழுபத்தி நான்காம் ஆண்டு வள்ளலார் பலரறிய ,மேட்டுக்குப்பம் சித்தி வளாக திரு மாளிகையில் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு உள் சென்று தாழிட்டு தன்னை தானே திரு காப்பிட்டு கொண்டார்.யாரும் தன்னை தேட வேண்டாம் என்றும்,அறையை திறந்து நோக்கின் வெற்றிடமே மிஞ்சும் என கூறி உட் புகுந்தார் வள்ளலார் .
பின்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திறந்து பார்கபட்டபோது அறை வெற்றிடமாகவே இருந்தது


கடை விரித்தேன் கொள்வாரில்லை என அன்றைய சமுக சூழலில் தன்னுடைய போதனைகளை பின்பற்ற தவறியவர்களை குறித்து ஆதங்கம் கொண்டார் .
தண்ணிரில் விளக்கேற்றியது,

மாயமாய் மறைந்து பின் தோன்றுவது..

மண்ணை தங்கம்மாக்கி காட்டியது ...

இவரை ஒன்பது மூறை புகை படம் எடுத்தும் அது உருவத்தை வெளிப்படுத்தவில்லை என்பதும் நூற்கள் கூறும் தகவல்.
ஒரே இரவில் அருட் பெருஞ்சோதி அகவல் இயற்றினார் வள்ளலார் ..
புலால் உண்ணுதல் மிக கொடிய மாச்சரியம் என்றும் பாவம் என்றும் போதித்தார் .
மனிதர்கள் ஒழுக்கத்தின் மூலம் தெய்வ நிலயை அடைய இயலும் என வழி காட்டியவர் வள்ளல் பெருமான்
அருட் பெருஞ்சோதி !அருட் பெருஞ்சோதி !
தனி பெருங்கருணை
அருட் பெருஞ்சோதி !



வியாழன், 26 மார்ச், 2009

"ஏன்"-நீங்கள் பயன்படுத்த மறந்த மந்திர சாவி !!



புராணங்களிலும்,இதிகாசங்களிளிலும் பல மந்திர சொல்கள்,வேண்டியதை பெற்றிட பயன்படுத்த பட்டதாக நாம் படித்திரிகிறோம் உண்மையில் அது உண்மையா? சுவராசியதிற்காக சேர்க்கப்பட்ட ஒன்றா? என நமக்கு தெரியாது !



ஆனால் நவின மனித வாழ்கையை புரட்டி போட்ட ஒரு மந்திர சொல் ஒன்று உண்டு..!யார் எல்லாம் இதனை உச்சரித்து உணர்கிறார்களோ அவர்கள் தாங்கள் வேண்டியதை பெற்று கொண்டார்கள்!பெற்று கொள்வார்கள் !நாளை பெறவும் செய்வார்கள்!.இது வரலாறு மட்டுமில்ல நிகழ்கால உண்மையும் கூட!



அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..!

மனிதன் தனக்கு முன் வரும் எல்லா நிகழ்வுகளையும் இதனை கொண்டு ஆராய்ந்து பார்க்கவே இந்த அற்புத மந்திர சொல் தருவிக்க பட்டது.



எங்கெல்லாமோ சுற்றிவிட்டு நம்முடைய வீட்டின் முன் வருகிறோம் ..ஆனால் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருக்கிறது,மலைத்து நிற்கிறோம் ,நம்மிடையே அந்த பூட்டினை திறந்து உள் செல்ல சாவி இருக்கிறது எனினும் நாம் அதனை உபயோக படுத்துவதில்லை.



நம்மிடத்தில் சாவி இருக்கின்றது என்கின்ற விழிப்புணர்வு நம்மிடத்தில் இல்லை.அந்த சாவி போல் தான் 'ஏன் 'என்கின்ற மந்திர சொல்லும்.இதனை பயன் படுத்தியவர்கள் வாழ்கையை அர்த்தப்படுத்தி மற்றவர்களின் வாழ்கையையும் மாற்றி அமைத்தார்கள்


உலகில் தோன்றிய தத்துவ ஞானிகள்..


உலகை மாற்றி அமைத்த அறிவியல் vingnaanikal ..


செல்வத்தை வான் மழையென கொட்ட செய்த தொழில் மேதைகள்..


உடல் நோயை ஒழித்த மருத்துவ மேதைகள் ...


என பலரும் ஒவ்வொரு தருணத்திலும் ஏன் என கேட்டார்கள்...மலைக்கவில்லை..! மீண்டும் ..மீண்டும் ஏன் என கேட்டார்கள். மந்திர வார்த்தை போல் தாங்கள் எண்ணியதை கண்டு கொண்டார்கள்.!



நம்முடைய சாமான்ய வாழ்க்கையிலும் நமக்கு வேதனைகளும், சோதனைகளும் வரும் போது நம்மில் பெரும் பாலோர் இந்த வார்த்தையை பயன் படுத்துவதில்லை மாறாக பரிகாரம் தேடி ஜோதிடர்களையும்,கோவில்களையும் நோக்கி ஓடுகிறோம்!



உண்மையில் நாம் கலங்கும் போது "ஏன் "இந்த நிலை நாம் கேட்கிறோமா?


நாம் தோற்று நிற்கும் போது ஏன் இந்த நிலை என கேட்கிறோமா?



நம்மை மற்றவர்கள் ஏமாற்றி விட்டாதாக ,நம்பிக்கை துரோகம் செய்து விட்டாதாக நாம் புலம்பும் போது -ஏன் இந்த நிலை என கேட்பத்தில்லை !



நாளைய நமது பாதைகளின் இலக்குகளை நாம் தீர்மானிக்க தவறுகிறோம் ..பின் பூட்டிய வீட்டின் கதவின் நிற்பது போல் நாம் செய்வைதயாறியது மலைத்து நிற்கிறோம்


உண்மையில் வரலாற்றின் பக்கங்களிலும்,நிகழ் கால வெற்றிகளையும் கொண்டு வந்த ஒரே ஆதாரம் நிறைந்த மந்திர சொல் "ஏன்"- என்பதேயாகும்.



ஆப்பிள் பழம் மரத்திலிரிந்து விழும் போது நியூட்டன் " ஏன் "விழுகிறது என கேட்டார் அதனால் புவி ஈர்ப்பு குறித்தான சித்தாந்தை கண்டு பிடித்தார்.



ஜி.டி.நாய்டு முதல் ..இன்றைய பல மேதைகள் வரை உபயோகித்து கண்டறிந்த ஒரு மந்திர சொல் ஏன் என்பதேயாகும்.



மீண்டும் உங்கள் முன் எந்த கேள்விக்கும்,சோதனையான தருணத்திற்கும் மலைத்து போய் நின்று விடாதீர்கள் ...மாறாக உரக்க கேளுங்கள்

ஏன்....!!


ஏன்.....!!



வெள்ளி, 20 மார்ச், 2009

கேப்டன் விஜயகாந்தும் - தே.மு.தி.க வும் !!


தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் பல்வேறு காலகட்டங்களில் தோன்றி பின் சுவடே இல்லாமால் போன வரலாறுகள் உண்டு.அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டத்திற்கு ஒப்பிட்டு வழி வழியாக சொல்ல படுவதுண்டு.


நேர்மையான அரசியலும்,அரசியல்வாதிகளும் இன்றைய கால கட்டத்தில் அறவே இல்லாமல் பொய் விட்டார்களோ என்று நாம் அவநம்பிக்கை கொள்ளுகின்ற தருணத்தில் இன்றைய அரசியல் தூர் வாரப்பட வேண்டும் என்பதே இன்றைய அத்தியவாசிய உண்மை !!



திட்டங்களை வகுப்பதோடு மட்டுமில்லாமல் ,நெருக்கடியான கால கட்டத்தில் மிக சரியான தீர்வை,முடிவை எடுப்பது ஒரு சிறந்த தலைவனின் இயல்பாக இருக்கவேண்டும். அப்படி பட்ட தலைவர்களே மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்க தகுதியானவர்கள்.!!


மலிந்துவிட்ட பச்சோந்தி தனமான அரசியலில் யாரேனும் ஒருவர் மாற்றத்தை கொண்டு வர இயலுமெனில் அதனை ஆதரிக்க முயல்வது ஆரோக்கியமான ஒன்றே !!. அவன் சினிமாகாரானாய் இருந்தாலும், செருப்பு தைப்பவனாய் இருந்தாலும் தவறேதும் இல்லை !!.ஒரு அரசியல் தலைவனுக்கு பின் வரும் தகுதிகள் இருந்தால் அதுவே போதும் .


உண்மையில் திறன் படைத்தவன்.....

துணிவோடு முடிவுகளை எடுக்க கூடியவன் ......

உண்மையில் மக்களுக்கு நல்லதை செய்ய விழைபவன் ......

பணத்திற்காக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவன் .....

இப்படி அடிப்படை குணங்களும் தகுதிகளும் இல்லாத சுய நல அரசியல்வாதிகளால் நாடு குட்டி சுவராய் போனதே மிச்சம் எனலாம்!!.


திரு.விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய தருணத்தில் குழப்பம் எதையும் அவர் தன்னுடைய முடிவுகளில் காண்பிக்கவில்லை. மாறாக தனக்கு சவால் விட்ட பச்சோந்தி அரசியல் கட்சிக்கு எதிரே தானும்,தன்னுடைய வேட்பாலார்களையும் நிறுத்தினார்..நின்றார் .தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக தனது கட்சியை உயர்த்தி காட்டினார்.


மக்களிடையே நல்ல மதிப்பை பெற்றிருந்த ,கருப்பு சால்வை அணிந்து மிக மிடுக்காக தமிழ் பேசி வந்த மறுமலர்ச்சி தலைவர் ,'சகோதரியே ' என்று எடுத்த நிலைபாட்டின் காரணத்தால் இன்றைய தேதியில் அவருடைய கட்சியில் உள்ளவர்களுக்கும் அவருக்கும் செல்லும் வழி ஏதும் தெரியவில்லை எனலாம்!


சூது நிறைந்த அரசியல் களத்தில் ,ஒருவனை வீழ்த்தி,ஒருவன் முன்னேற நினைப்பது யாருக்காக ?? மக்களுக்காகவா??.

அத்தகைய அரசியல் வாதிகள் தங்களின்சுயனலத்திற்கென்றே இதனை செய்கிறார்கள் என்பதே உண்மை.!!

திரு.விஜயகாந்த் அவர்கள் நல்ல முடிவினை எடுக்கும்பட்சத்தில் இன்றில்லாவிட்டாலும் நாளைய மாற்றாக இருப்பார் என்பதில் உண்மை உண்டு. அதனாலேயே பெரிய கட்சிகள் அவருக்கு வலை வீசி பார்க்கின்றன
திரு.விஜயகாந்த் அவர்கள் இதுவரை வேறு மொழி படங்களில் நடிக்காதவர் ,தமிழில் மட்டுமே நடித்தவர்.!!
அய்யா என்றோ..! சகோதரியே என்றோ இவர் செல்லும்பட்சத்தில்மக்களின் நன்மதிப்பு இவருக்கு இல்லாமல் போய் விடும். எனினும் கட்சி நடத்த பணம் வேண்டும் கொள்கை வேண்டாம் என்று நினைத்தால் இவரும் பல கோடிகளை பார்க்கலாம்.!!


ஜாதியின் பெயரால் கட்சி நடத்துவோரை...
பச்சோந்தி அரசியல் வாதிகளை, எனக்கு இவளவு சீட்டு கொடு எனக்கு கொள்கைகள்,கோட் பாடுகள் தேவை இல்லை என்போரை...
மொழி,உணர்வு,திராவிடம்,கொள்கை,கோட்பாடு என்று நாவன்மையால் பேசி மக்களை மனநலம் குன்றிய மறதி வாதிகள் என நினைபோரை ..
தயவு செய்து வாக்களித்து மீண்டும் நாம் ellorum வெற்றி பெற செய்ய வேண்டாம் !!


தள்ளாத வயதிலும் பதவியை கெட்டியாக பிடித்து கொண்டு உலா வரும் அரசியல் வாதிகள் இல்லாத புதிய இந்தியா நாளைய விடியலில் உருவாகட்டும்!!
சுய நல அரசியலை இனம் காணுங்கள்..!

ஜாதியின் பெயரால் அரசியல் நடத்துவோரை இனம் காணுங்கள்..

மரம் விட்டு மரம் தாண்டும் குரங்கு போல் கொள்கை ஏதும் இல்லாமல் கட்சி விட்டு கட்சி தாவும் அரசியல் வாதிகளை இனம் காணுங்கள்..!
பச்சோந்தி அரசியல் வாதிகளை,நாவன்மையால் பேசி சுய நல அரசியல் வாதிகளை தயவு செய்து வாக்களித்து மீண்டும் நாம் வெற்றி பெற செய்ய வேண்டாம் !!

திங்கள், 16 மார்ச், 2009

இன்றைய அரசியல்வாதிகளின் நிஜ முகங்கள்...!!!


ஒரு நாட்டின் அரசியலமைப்பின் தன்மையை கொண்டே அந்த நாட்டின் வளர்ச்சி பெருமளவும் சார்ந்திருக்கிறது.லஞ்ச,லவான்யமற்ற ,தொலை நோக்கு பார்வையை கொண்ட அரசு ,நாட்டின் வளர்ச்சியை, மாண்பை உலகின் பிற நாடுகளுக்கு உணர்த்துகிறது.

அரசியல் என்பது மக்களுக்காக, மக்களின் நல் வாழ்வுக்காக என்பதாலேயே அதை பொது வாழ்க்கையாக நாம் கருதுகிறோம்.அன்றைய காமராஜரை மிக சிறந்த அரசியல் தலைவராக நாம் கொண்டாட காரணம் என்ன? மக்களுக்காக ,மக்களின் நல் வாழ்வின் பொருட்டு தன்னுடைய வாழ்கையை மிக வெளிபடையாக அமைத்து கொண்ட அவருடைய பாங்கு..வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இன்றளவும் அவருடைய,எளிமை,கடமையை மட்டுமே கருத்தில் கொண்ட அவருடைய கர்ம சிந்தனை ,மக்களுக்காக அரசியல் என்பதை மிக அழுத்தமாக நிருபித்ததே காரணம்.

இன்றைய அரசியல் தலைவர்களை ,அவர்களின் பொது வாழ்கை முறையை நீங்கள் சற்று ஆராய்ந்து பாருங்கள்....

பல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள்...
பல கோடி பெறுமானமுள்ள வணிக வளாகங்கள்....
திராட்சை தோட்டங்கள்....
பல கோடி மதிப்பில் அசையா சொத்துக்கள்...
மருத்துவ செலவிற்காக மக்களின் வரிபணம்..மகனும்,மகளும்,வளர்ப்பு மகன்களுக்கும் ,பேரன்களும்,தோழிகளும் சேர்ந்து பதவி குளியல்கள்..

அன்றைய காமரஜார் இறக்கும் பொது வெறும் நூற்றைம்பது ரூபாய் மட்டுமே தன்னுடைய சொத்தாக வைத்திருந்தார்...

இன்றைய அரசியல் வாதிகள் நூற்றைம்பது கோடிகளை சர்வ சாதரணமாக தங்களுக்காக,தங்களின் பிள்ளைகள்,பேரன்களுக்காக கொடுத்து விடுகிறார்கள்.எங்கிருந்து வந்தது இவ்ளவு பணம்,சொத்து?

மக்களின் வரிபணம்...
அதிகார துழ்ப்ரயோகம்...
லஞ்சம்...
அரசியல் பேரங்கள்...
கட்சி பணம்...சொந்த பணமாக மாறிவிடுகிறது..
அரசு அரியணையில் அமர்ந்துவிட்டால் பின்னர் தமிழ்நாடு அவர்குளுடைய நாடாகி விடுகிறது..

எல்லா திட்டங்களிலும் தனிப்பட்ட ஓது கீடுகள் இல்லாமல் நடைபெறுவதில்லை. எல்லா நிலைகளிலும் கமிஷன் விளையாடுகிறது..மிஞ்சி இருப்பதில் திட்டம் பெயரளவிற்கு முழுமை பெறுகிறது !

மக்களை ஸொம்பெரிகலாக்க அரிசியும், துணி மணியும்,தொலை காட்சி பெட்டிகளும்,பணமும் அள்ளி வழங்கப்படுகிறது..ஆரோக்கியாமான வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் மக்களை,உழைக்க திராநியற்றவர்கலக்க மாற்றிவிடுகிறது இன்றைய அரசாங்கங்கள்..

சந்தர்ப்பவாத கூட்டணிகள் ...கொள்கைகள்...
கடுமையாக எதிர்க்கும் கட்சிகளும் ஒரு சீட்டு கூட கொடுத்தால் பல்லிலிலித்து பரவசம் காட்டும் பச்சோந்தி அரசியல் தலைவர்கள்..

ஜாதியின் பெயரால் ஒரு கூட்டம்..பகுத்தறிவுவாதிகள் என்று கூறி கொள்ளை அடிக்கும் கூட்டம் ஒரு பக்கம்..

அரசியல் ஒரு லாபகரமான ..மன்னிக்கவும் கொள்ளை லாபகரமான தொழிலாக நம் கண்ணெதிரே நடக்கிறது..நாமும் ஆதரிக்கவே செய்கிறோம்..பணம் கொடுத்து வோட்டுக்கள் வாங்கப்படுகின்றன..அடுத்த ஐந்தாண்டுகள் அவர்கள் கொள்ளை அடிக்க நாம் அவர்களுக்கு மலை அணிவித்து வழி அனுப்புகிறோம்..

மக்களுக்காக,மக்களின் பொருட்டு என்று அரசியல் அமையுமோ அன்று இந்தியா ஒளி பெரும்.




திங்கள், 9 மார்ச், 2009

எல்.கே.அத்வானியும் -மன்மோகன் சிங்கும் ஒரு ஒப்பீடு!!


எல்.கே.அத்வானி ஆயரத்தி தொள்ளயிரத்தி இருபத்தி ஏழில் பிறந்தவர் .


மன்மோகன் சிங் ஆயரத்தி தொள்ளயிரத்தி முப்பத்தி ரெண்டில் பிறந்தவர் .


எல்.கே.அத்வானி பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்தார்.


மன்மோகன் சிங் பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் ஊரில் பிறந்தார்.


எல்.கே.அத்வானி மும்பைஉள்ள அரசு சட்ட கல்லூரியில் பட்டம் பெற்றவர்.


மன்மோகன் சிங் இந்திய அரசியல் வாதிகளிலேயே அதிகம் படித்து பல பட்டங்களை பெற்றவர்.பஞ்சாப் பலகலை கழகம் தொடங்கி,காம்ப்ரிட்ஜ்,oxford, அல்பர்டா என வரிசையாக பட்டங்களை வாங்கி குவித்தவர் மன்மோகன் சிங்!.பொருளாதார மேதை என போற்றபடுபவர்.!


எல்.கே.அத்வானி ஆயரத்தி தொள்ளயிரத்தி நாப்பத்தி ரெண்டில் ஆர் . எஸ் . எஸில் இணைந்து தனது பொது வாழ்கையை தொடங்கினார். பின்னர் ஆயரத்தி தொள்ளயிரத்தி enbathukalil பாரதிய ஜனதா கட்சியில் சக்தி மிக்க தலைவராக உயர்ந்தார். இந்துத்வா கொள்கைகளை கொண்ட அத்வானி பல கடுமையான விமர்சனங்களுக்கு .இணை பிரதம மந்திரி ,உள் துறை அமைச்சர்,தகவல் தொடர்பு துறை அமைச்சர்,என பொறுப்புகளை வகித்தவர் எல்.கே.அத்வானி.


மன்மோகன் சிங் ஆயரத்தி தொள்ளயிரத்தி தொண்ணுற்றி . ஒன்றில் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சாராக காங்கிரஸ் கட்சியில் பொது வாழ்கையை தொடங்கியவர்

எல்.கே.அத்வானி மதவாத தலைவராக அரசியல் அரங்கில் அடையாளம் காட்டப்பட்டுள்ளார் .

மன்மோகன் சிங் ஓர் பொருளாதார வல்லுனராக ,ஓர் மிதவாத காங்க்றேஸ் தலைவராக அறிய படுகிறார்




எல்.கே.அத்வானி பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, முஹம்மத் அலி ஜின்னா கொலை வழக்கு,ஜெயின் ஹவாலா மோசடி வழக்கு, ஹிந்துத்வா தீவிர கொள்கைகள் என பல சர்ச்சைகளுக்கு சொந்தகரார் .
மன்மோகன் சிங் , நாட்டில் நடந்த பல தீவிர வாத தாக்குதல் மன்மோகன் சிங்அரசின் கால கட்டத்தில் நிகழ்ந்தேறிய காலத்தால். மிக பலவீனமான பிரதமர் என அத்வானியால் ,மற்ற அரசியல் பார்வையாளர்களாலும் விமர்சிக்க பட்டார் .
எல்.கே.அத்வானி , மன்மோகன் சிங் இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் .
இவர்களில் அடுத்த பிரதமர் யார் ?

வெள்ளி, 6 மார்ச், 2009

ஆண்டவன் பேசுகிறேன்...!!!


இந்த பிரபஞ்சத்தில் ஓயாமல் சுத்துகின்ற கோள்களும்,பூமிக்கு ஒளியாய் விளங்கும் சந்திரனும்,சூரியனும் ,பல கோடி நட்சத்திரங்களும் .அடர்ந்த காடுகளில் ,ஆழ் கடலில் உயிர் வாழும் ஜீவராசிகளையும், நிலம் ,காற்று,நீர்,ஆகாயம்,நெருப்பு என பஞ்ச பூதங்களின் சமநிலைகளையும் ஆட்கொண்டு..ஆண், பெண் என்று எனது சாயலில் உங்களை படைத்திட்ட ஆண்டவனாகிய நான்.... இந்த கணம் உங்களிடத்தில் பேசுகிறேன் .!!
உங்களை சுற்றி நான் படைத்திட்ட சகலத்திலுமிரிந்து மனிதர்களாகிய நீங்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள்!.
சிந்திக்கின்ற சக்தியை நான் உங்களுக்கு அளித்தாதால் நீங்கள் இந்த பூமியையும் தாண்டி பிரபஞ்சத்தை ஆராய்கிறீர்கள் ,நிலவுக்கும்,செவ்வாய்க்கும் வந்து போக ஆராய்கிறீர்கள் !
நான் உங்களுக்கு சிந்திக்கின்ற சக்தியை அளித்தேன் நீங்கள் என்னட்ட்ற விழயங்களை உண்டாக்கி கொண்டீர்கள் . வாய்மை ,தர்மம்,அஞ்சாமை,ஆண்மை,பெண்மை,அன்பு,பாசம்,கருணை,உதவி தாய்மை,காதல்,கனிமை என்று எனது பல ரூபங்களை நீங்கள் உணரவும் ,வெளிபடுத்தவும் செய்கிறீகள் !.


உள் முகமாய் தேடி என்னை நோக்கி வருகின்றவனுக்கு எனது ரூபத்தின் கீற்றை வெளிபடுதுகிறேன்.சகலத்திலும் படிந்து நிற்கின்ற என்னை நீங்கள் பிரித்துணர முடியாது!.என்னை உருவங்களில் காணுகின்றவனுக்கு உருவமாகவும் !எல்லயட்ட்ற பிரபஞ்சத்தின் ஒலி நிறைந்த வெற்றிடமாக கருதுபவர்களுக்கு வெற்றிடமாகவும் நான் காட்சி தருகிறேன்.
உங்கள் மனதில் ஒலிக்கின்ற எனது குரல் ஒலித்த படி உள்ளது ,எனினும் புற சத்தத்தில் நீங்கள் மெய் மறந்து உள்ள படியால் என்னுடைய குரல் மிக சன்னமாகி போகிறது.!!
என்னை நீங்கள் கருணை மிக்கவனாக கருதுகின்ற அதே நேரத்தில்...உங்களில் ஒரு சாராருக்கு இறக்க மற்ற அநியாய காரனாக நான் தூற்ற படுகிறேன்.செல்வமும்,செழிப்பும்,வேண்டுவதெல்லாம் நீங்கள் பெரும் போது என்னை நீங்கள் புகழ்கிறீர்கள்!
வறுமை,நோய்,இயற்க்கை சீற்றம் ,மரணம் இவைகள் உங்கள் முன் வரும் போது என்னை கடுமையாக நிந்திகிறீர்கள்.!!
உண்மையில் உங்களிடத்தில் இருந்து எதனையும் நான் பறிக்கவில்லை,பறித்ததாக இந்த தருணத்தில் நீங்கள் உணர்ந்ததெல்லாம் ,மீண்டும் உங்கள் வாசல் தேடி வரும்!.அப்போது நீங்கள் வேறு ரூபத்தின் கீற்றாக இருப்பிர்கள்.!! அவ்வளவே.
இந்த பிறவியில் சொல்லேன துயரம் உங்களை துரத்தும் போது நான் இறக்கமட்ட்ற கல் நெஞ்சகாரனாக உங்களால் தூழிக்க பட்டாலும் ...வழி,வழியாக முன்பும்,பின்பும் நான் மிக கருணை மிக்கவனாக உங்களால் புகழபட்டுள்ளேன் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.




என்னுடைய சாயலில் நீங்கள் இருப்பதால், என்னுடைய எல்லயட்ட்ற சக்திகளின் சாயலையும் உங்களால் வெளிபடுத்த இயலும் என்பதை நீங்கள் பல முறை வெளிப்படுத்தி விட்டிர்கள்.!!
அறிவு,நம்பிக்கை,முயற்சி என சிந்தனையின் அடிப்படை தூண்டுதல் கலீல் பல ஆய்வுகளை நீங்கள் மேற்கொண்டு உள்ளிர்கள்.அவற்றில் நான் இருகிறேனா இல்லையா என்பதும் ஒன்று!
என்றேனும் உங்களுக்கு வழங்கப்பட்ட இந்த தருணத்தை உணர்ந்திருக்கிறீர்களா?? உடை உடுத்தி இருக்கிறீர்கள்,உங்களை அழகு படுத்தி கொள்கிறீர்கள்,ஹாஸ்யம் கேட்டு சிரிக்கீரிர்கள் ,ஆலயம் சென்று வழிபடுகிறீர்கள்....இன்னும் பல .
உண்மையில் யோசித்து பாருங்கள் காட்டில் உலாவும் மிருகங்களை காட்டிலும் ..அபுதமான ஒரு வாய்ப்பை உங்களுக்கு அளித்தது எது?




சம நிலை தவறும் போது நான் இறக்க மற்றவனாக உங்களால் தூற்றபடுகின்ற நான்.விபத்துக்களில், இயற்கை சீற்றங்களில் உங்களுடைய உறவுகளை,உடமைகளை இழக்கும் போது கண்னற்றவனாக,கல் நெஞ்சகாரனாக
என்னை நீங்கள் சபிக்கும் போது உங்களின் அறியாமை என்னை வருத்துகிறது.ஏனெனில் நீங்கள் என்னுடைய ரூப கீற்றுகளை தாங்கி உள்ளிர்கள்!
வறுமையில் உதவி தேடி வரும் போது..நீடித்த நோயிலிரிந்து சுக மடையும் போது,என்னுடைய இருப்பை நீங்கள் உணர்கிறீர்கள்.
உண்மையில் நான் எல்லா தருணத்திலும் உங்களோடு இருக்கிறேன்..என்னுடைய குரல் உங்களுக்குள் ஒலித்த படி உள்ளது, மரணமும்,பிறப்பும் ஒன்றென கருதும் என்னுடைய குரல் உங்களுக்குள் ஒலிக்கிறது,செல்வமும்,வறுமையும் கால நிலை போல் நிலையற்றது என்னும் என்னுடய விளக்கம் காட்சிகளாக உங்கள் முன் விரிகிறது.
அன்பினால் என்னை காணுங்கள்!
ஞானத்தினால் என்னை காணுங்கள்!
கருணையினால் என்னை காணுங்கள்!
தாய்மையில் என்னை காணுங்கள்!
கள்ளமில்லா குழந்தையின் சிரிப்பில் என்னை காணுங்கள்!
கடமையினால் என்னை காணுங்கள்!
வாய்மை,தர்மம்,அஞ்சாமை இவற்றில் என்னை காணுங்கள்!

சகலத்தையும் உள்ளடக்கி உங்கள் மனதின் ஆழ்வெளியில் நான் அமைதியாய் அமர்ந்திருக்கிறேன்.உள் நோக்கி வாருங்கள் உங்களை நீங்கள் காணும் போது நான் யார் என்று உங்களுக்கு தெரியும் !!