வெள்ளி, 22 மே, 2009

வீரத்தின் மறுபெயர் வேலுபிள்ளை பிரபாகரன் !!


கேவலம் வெறும் வார்த்தை ஜாலங்களில் பதவி சுகத்தை அனுபவித்து கொண்டு தமிழ்,தமிழினத்திற்காக நான் உயிரை கொடுக்கவும் தயார் என பேசும் !! கோழை நம் தம் தமிழ் அரசியல் தலைவர்களை இந்த உலகம் இன்னும் மதித்து மரியாதை கொடுக்குமானால் அது மிக கேவலமான ஒரு விழயம் எனலாம்!



ஏறக்குறைய முப்பத்தி ஐந்து ஆண்டுகள் தமிழினம் அடக்குமுறைக்கு உட்படுதபடுவதை பொறுக்க சகியாமல் ஈழத்தில் மரணத்தை குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் ஆயுதம் ஏந்திய ஒரு சுத்தமான தமிழனைத்தான் இன்றைய இலங்கை அரசு வேட்டையாடி சாய்துவிட்டதாக தம்பட்டம் அடித்துகொள்கிறது.



உண்மையில் பிரபாகரன் அவர்கள் பதவிக்காக ஆசைப்பட்டு அந்த இயக்கத்தை முன்னிறுத்தவில்லை,!!பணத்திற்காக ஆசைப்பட்டு புலிகள் இயக்கத்தை வழிநடத்தவில்லை! .ஆயுதங்கள் மட்டுமே ஈழத்தை கொண்டு வரும் என்ற கனவில் வழி நடத்தியவர்தான் மாவிரன் பிரபாகரன் எனலாம்.



தமிழ் ,தமிழ் என்று முழங்கும் நம் அரசியல் தலைவர்கள் சுயநல பேய்கள் ,அவர்களுடைய பதவியை பாதுகாத்து கொள்ளவும்,பெறவும்,பணத்தை பெருக்கவும் தமிழ் ஒரு வியாபார சொல் எனலாம்


கொண்ட கொள்கையில் உறுதி,அதற்காக தனது உயிரை பணயம் வைப்பவனே ஒரு போராளி.அவ்வகையில் பிரபாகரன் அவர்கள் ஒரு மிக சிறந்த போராளி எனலாம்.பெற்ற மகனை போருக்கு அனுப்பிய செய்திகள் சங்ககால பாடல்களில் காணலாம் அதனை உண்மையில் நிகழ்த்தி காட்டியவர் பிரபாகரன்.
ராஜிவ் காந்தி படுகொலையால் புலிகள் இயக்கத்தின் மீது ஒரு கரை படிந்தது என்பது உண்மை ..எனினும் அது நிகழ பின்புல காரணமாக இருந்த நிகழ்வுகள் அரசியல் ஆய்விற்கு உட்பட்டது.தான் அடையக்கூடிய லட்சியத்திற்கு குறுக்கே வரும் எதனையும் அழித்து போடுவதைத்தான் கண்ணன் குருஷேத்ர யுத்தத்தில் அர்ஜுனனுக்கு கூறினான்.
வீரர்கள் என்றும் வீழ்வதில்லை..வீழ்ந்ததாக கருதினால் அது மடமை.மீண்டும் அத்தகைய வீரம் இந்த மண்ணில் பல உருவில் தோன்றி உயிர்தரிக்கும் ,வரலாறு படைக்கும்

ஒரு தனி இயக்கம் அதனை முற்றிலுமாக அழிக்க ஒரு நாட்டின் மொத்த ராணுவமே வேட்டை நாயாய் அலைகிறது.சர்வதேச நெருக்குதல்கள்,தொப்புள்கொடி உறவு என பெருமை பேசும் நாட்டின் பாராமுகம்..இவை எல்லாவற்றையும் மீறி இந்த இயக்கத்தை வழி நடத்தி காட்டிய மாவிரனாக பிரபாகரன் இந்த நில உலகில் அறியபடுவார்.
வீரத்தின் மறுபெயராக சரித்திரம் ஒரு பெயரை சொல்லுமானால் அது பிரபாகரனகவே இருக்கும்.தமிழினத்திற்காக உண்மையாய் உயிரினை தந்ததாக ஒரு போராளியை,ஒரு வீரனை சரித்திரம் பிரபாகரன் என்றே சொல்லும்!
எத்தனையோ பிஞ்சு பிள்ளைகள் மண்ணோடு மண்ணாகி போனார்கள்,கனவுகளை கொன்று ஒரு இனம் வேட்டையாடப்பட்டது எனில் அது தமிழினம்..ஈழ தமிழினம் மட்டுமே..!! அவர்களுடைய வலியை,இழப்பை,தவிப்பை வார்த்தைகளில் சொல்லுவது இயலாது

வீரம் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை வாழ்த்தாகவே சரித்திரம் உண்டு.!!