வியாழன், 8 ஜூலை, 2010

நாம் எங்கே தொலைந்தோம் ?

நாம் நன்றாக புரிந்துகொண்டதாக நினைக்கின்ற நமது வாழ்க்கை ,உண்மையில் முற்றிலும் அர்த்தம்மற்று,மனம் மருத்துப்போன,சுயம் இழந்து ,எதனை ? எதற்க்காக?ஏன்? பெற நாம் ஓயாது ஓடி கொண்டிருக்கிறோம் என்று சிந்திக்க கூட விருப்பம் மற்று இந்த வாழ்க்கை அனுதினமும் ஓடி கொண்டிருக்கிறது !

சின்னஞ்சிறு வயதில் நாம் சந்தித்த இனிமையான அற்புதமான மனிதர்களும்,நிகழ்வுகளும் கனவு போல் நமக்கு தோன்றுகிறது.அன்று நாம் பார்த்த தாயும்,தந்தையும் ,பள்ளியும்,தொழர்ர்களும் கூட நமக்கு அந்நியமாய் தோன்றுகிறது,ஏனனில் நாம் மறுத்து போன ஒரு பொருள் பூர்வமான வாழ்கையில் கால் புதைந்து நம்மை தொலைத்து விட்டோம் .



உண்மையில் தொலைந்து போன எத்தனையோ விழயங்களில் அதி முக்கியமான,மனிதர்களின் மீதான அன்பும், விசுவாசமும்,நம்பிக்கையும் மிக முக்கியமானதாகவே எனக்கு தோன்றுகிறது.

பல தேசம் கடந்து,பணம் ஈட்ட சென்றவர்களின் வாழ்கை நிலை மேலும் பரிதாபமானது,இழந்ததும் இழக்க போவதும் ஈடு செய்ய முடியாத ஒன்று எனலாம்.

நம்பிக்கை,வாழ்கையின் மயத்திலிரிந்து விலாகாத ஒரு உறுதி,சுடர் விடும் அறிவு,துன்பம் கண்டு துவளாத தன்மை,போராட்டம் தன வாழ்கை என்று அறிந்தாலும் வாழ்கையின் மயத்திலிரிந்து விலாகாமல்,அதன் அர்த்தம் மாறிடாமல் வாழுகின்ற தன்மை இதுதான் நம்முடைய ஒவொவொரு நாள் சிந்தனயில் இருக்க வேண்டும்!



பணம் மட்டுமே வாழ்கை இல்லை,பணம் இல்லாமலும் இந்த வாழ்கை இல்லை! எனினும் இரண்டின் எல்லைகளையும் உணர்ந்தது வாழ இன்று முதல் சிந்திப்போம்