சனி, 4 அக்டோபர், 2008

அரசியல்- இடி முழக்க கவிதை !!

நாடறிந்த கொள்ளையின்
நவின பெயர் - அரசியல் !

வார்த்தைகளை வீசி
வாக்குகளை பெற்று
மக்களின் வரி பணத்தில்
வலம் சேர்க்கும் திருட்டு
கும்பலின் நிஜ முகம் -அரசியல் !

உடன் பிறப்பே !ரத்தத்தின் ரத்தமே !
கண்மணிகளே !என வெற்று
வார்த்தை ஜாலங்களால் ..
வானுயர மாளிகைகளும் ,
பல கோடி வணிக நிறுவனங்களையும்,
கட்டுக்குள் வைத்துக்கொண்டு
கண்ணீர் விடும் -குள்ள நரித்தனத்தின்
மறுபெயர் அரசியல் !

இன்று ஒரு பேச்சு !
நாளை ஒரு பேச்சு !
இவர்கள் குடித்தது தாய் பாலல்ல
மதுவென்றே சொல்லதோன்றும்
உண்மை குடி மகன்களின்
உறைவிடம் -அரசியல் !

நாட்டின் சாபமே
வரமென நாம் நினைக்கும்
விந்தையின் மறுபெயர்-அரசியல் !

-ராஜ்குமார் -