திரு அன்புமணி ராமதாஸ் மத்திய சுகதரதுரை அமைத்ச்சர் அவர்கள் புகையிலை பயன்பாட்டினை தடுப்பதற்கு முன் நாட்டில் பட்சிலம் ஏழை குழந்தைகளின் தடுப்பு ஊசி மரணங்களை தடுக்க வேண்டும் .அதுவே தலையாய பணியாகும்
ஏழை பெற்றோர்களின் கண்ணிற்கு பதில் சொல்லவேண்டிய பனி அவருடையதே !இந்த நவின காலத்தில் நாம் இன்னும் உயிருக்கு உரிய மரியாதையை தருவதில்லை மாற்ற நாடுகளில் இப்படி ஒரு சம்பவங்கள் நிகழ்ந்தால் அது மிக பெரிய அரசியல் மாற்றங்களை கொண்டு வரும் அனல் இந்தியா ஒரு ஜனநாயக நாடல்லவா அதனால் நம் பார்த்துகொண்டிருக்க வேண்டியதுதான் !!!
புகையிலை இல்லாத இந்தியாவாக மாற்ற வேண்டும்: அன்புமணி!
செவ்வாய், 22 ஜூலை 2008( 16:45 IST )
''இந்தியாவை புகை இல்லாத நாடு என்று மட்டும் அல்லாமல் புகையிலை இல்லாத நாடு என்று மாற்ற வேண்டும்'' என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், சண்டிகரை புகை இல்லாத நகரமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 2010ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்னதாக டெல்லியை புகை இல்லாத டெல்லியாக மாற்ற முதலமைச்சர் ஷீலா தீட்சித் உறுதிக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை, தனியாருக்கு சொந்தமான இடங்களில் புகை பிடிக்க முற்றிலும் தடைவிதிக்க அரசு முடிவு செய்துள்ளதை மீண்டும் நினைவு கூறிய அவர், புகையிலைக்கு எதிரான சட்டவிதிகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.சினிமாவுக்கு நான் எதிரியல்ல. ஆனால் போலியோ ஒழிப்பு போன்ற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளில் நடிகர்கள் வருவதால் அவர்கள் சினிமாவில் புகை பிடிக்கக்கூடாது.சினிமாவில் நடிகர்கள் புகைப்பிடிப்பதைப் பார்த்து 52 விழுக்காட்டினர் இந்தப் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகின்றனர்.
புகைப் பிடிப்பதன் காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்