வியாழன், 22 ஜனவரி, 2009

சுய நல தமிழ் அரசியல்வாதிகளும் - செத்து மடியும் ஈழ தமிழ் இனமும்..!!!


உலகத்தில் இப்பொழுது நடந்து வருகின்ற பல யுத்தங்களும் இரண்டு நாடுகளுக்கிடையே மட்டுமே நடந்து வருகிறது ...! ஆனால் ஈழ தமிழ் யுத்தம் மட்டும் ஒரு இனத்திற்கும் ,ஒரு நாட்டிற்கும் இடையே நடந்து வருகிறது.
வீரமும்,கலாசார பெருமையும் நிறைந்த ஈழ தமிழினம் இப்பொழுது மெல்ல மெல்ல சிங்கள ராணுவ பலத்தால் அழிந்து வருகிறது.


தூய்மையான தமிழுக்கு சொந்த காரர்கள்,சிறந்த உழைப்பாளிகள்,சிறந்த இலக்கிய வாதிகள் நம் ஈழ தமிழ் மக்கள் .
துப்பாக்கி தோட்டக்களாலும், பீரங்கி குண்டுகளாலும் ஒரு இயக்கத்தை அழிப்பதாக கூறி ஒரு இனத்தை அழிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.



சுய நல அரசியல்வாதிகளுக்கு ஈழ பிரச்சினை ஒரு போலி முக மூடியாகும்!.அண்ணா வழியில் வந்தவர்கள்,பெரியாரின் பாசறையில் பயின்றவர்கள் என வெறறு வாய் சவடால் வேறு !எம்.பி க்கள் ராஜினாமா,வித விதமான உண்ணாவிரத போராட்டங்கள்,வேற்று நடந்களாக இப்போது தெரிகிறது.


வார்த்தை ஜாலங்களில் மயங்கி நிற்க நேற்று போல் இன்று தமிழர்கள் இல்லை ! .தமிழினத்தின் காவலர்கள் என்று சொல்லி கொள்ள எந்த அரசியல் வாதிக்கும் அருகதை இல்லை. கோடிகளை சேர்க்க அரசியல் நடத்துபவர்கள் , சுய நல பதவி லாபத்திற்காக நாடகங்களை நடத்தும் கோமாளிகள் இந்த அரசியல் வாதிகள் .இவர்கள் மிக பெரும் கோழைகள்!!




பதுங்கு குழியில் பாடம் பயிலும் எமதருமை தமிழ் மாணவர்கள். நாளைய விடியலில் இன்னும் நம்பிக்கை வைத்துள்ள இளம் ரோஜாக்கள்.இவர்களுக்கு வழி காட்டவும் வழி சொல்லவும் எந்த தமிழின காவலர் வர போகிறார்?


இந்த பதிவினை நான் எழுதுவதால் நான் நாளைய முதல்வராகி விட போவதில்லை.ரத்தம் படிந்த ஈழத்து பதுங்கு குழி மண்ணின் புனிதத்திற்கு இந்த எழுத்துக்கள் ஒரு கண்ணிற் துளி அவ்வளவே !




புலம் பெயர்ந்த தமிழினம் , இலங்கையை வளப்படுத்தியது ..சாலைகளை இட்டும்,கட்டடங்களை எழுப்பியும்,தேயிலை தோட்டங்களை செம்மை செய்தும் வியர்வையால் மெருகேற்றி கொடுத்த தமிழர்கள் இன்று வெறறு மார்பில் தோட்டாக்களை தாங்கி மண்ணில் சாய்கிறது .



வான் புகழ் கண்ட வள்ளுவனை தந்த தமிழினம் ,மொழியினால் ஒன்றுப்பட்ட ஒன்று. அந்த மாண்பு என்றும் அழிந்து விட போவதில்லை !!



நாட்டை ஆளுகின்றவர்கள் பகுத்தறிவை வார்த்தைகளில் மட்டுமே பயன் படுத்தாமல் செயல்களில் காட்டவேண்டும் .நாட்டை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டங்கள் எங்களுக்கு வேண்டாம் கோழைகளே!.காரியங்களை ஆற்றி கொடுங்கள் அதுதான் பகுத்தறிவு !!




உறுதியான முடிவுகளை மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒருமித்து எடுக்க வேண்டும் .இளம் தமிழ் குழந்தைகள் செத்து மடிவதை தடுக்க வேண்டும்.


உலக தமிழ் நண்பர்களே அங்கே செத்து மடிபவர்களின் தியாகங்களையும் ,வலிகளையும் ஆளுகின்றவர்கள் தங்களுடைய மந்த புத்தியில் உணராதவரை விடியல் இல்லை என்பதே நிஜம்.!!

இறந்தவன் பேசுகிறேன்....!!


முடிவற்ற ஒரு நீண்ட பயணத்தின் இடையில் நீங்கள் யார் என்றும் ,நான் யார் என்றும் உங்களுக்கு இப்பொழுது தெரிந்து விடும் !.நான் பலமுறை இறந்திருக்கிறேன் ..ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் கொண்டுவரபட்டிருகிறேன் , நீங்களும் அவ்வாறே பலமுறை இறந்திருக்கிறீர்கள் ஒவ்வொரு முறையும் கொண்டு வரபட்டிருக்கிறீர்கள் !

நீங்கள் பிறப்பதற்கு முன் எங்கிருந்தீர்கள் ? தாயிடமா? தந்தையிடமா? உண்மையில் நீங்களும் , நானும் மட்டற்று பரவி நிற்கிறோம் . தந்தையும் தாயும் நம்முடைய பௌதிக உடலுக்கு வடிவம் கொடுத்தார்கள் !.தாயின் கருமுட்டையும் தந்தையின் விந்து நாதமும் நம்மை பௌதிக உடலுக்கு வடிவத்தை மட்டுமே நல்கியது.

அதிகாலையில் கண் சிமிட்டும் நட்சத்திரங்களை காணும் போதும் ,கோயில் குளக்கரை படிகளிலும், தீண்டி செல்லும் குளிர் தென்றலை உணரும் போதும், மழைக்கு பின் எழும் மண் வாசனையிலும் இவற்றையெல்லாம் நீங்கள் கண்டும், கேட்டும் உணரும் பொழுது என்றோ இவற்றை எல்லாம் நீங்கள் முன்பே கடந்து வந்திருப்பதாக உங்கள் உள் மனது சொல்லும்.

பல நூற்றாண்டுகளாக இவற்றை நீங்கள் அனுபவித்து வருகிறீர்கள் என்பது உண்மை . ஒவ்வொரு முறை நீங்கள் கொண்டுவரப்ப்படும்போதும் இந்த நினைவுகளும், ஆசைகளும் உங்களுக்குள் தேங்கி இருப்பதை நீங்கள் உணர்வீர்கள் !

இன்னும் சற்று உற்று நோக்கினால் நீங்கள் இதுவன்று என்பதை உணர்வீர்கள் ..உங்களுடைய உண்மையான இயல்பு என்னவென்று உங்களுக்கு விளங்கி விடும் .உண்மையில் நீங்கள் இயற்கை எனும் மட்டற்ற சக்தியில் கலந்தே இருக்கிறீர்கள் !



பிறந்து சில மணி நேரங்களில் உங்களுக்கு சிரிக்க யார் கற்று கொடுத்தது ? அந்த உணர்வு எங்கிருந்து வருகிறது ? சற்றே சிந்தித்து பாருங்கள் !.கால்களை பின்னி கொண்டு தூங்குகிறீர்கள் உங்கள் தந்தையை போன்றோ,தாத்தனை போன்றோ !,இது எப்படி நிகழ்கிறது ?

உண்மையில் நீங்களும்,நானும் ,இன்னும் பிறரும் வழி வழியாக கொண்டு வரபடுகிறோம் என்பதே உண்மை .

பௌதிகமான இந்த உடலுக்கு பால்யம்,இளமை, முதுமை என பல வேடங்கள் புனயபடுகிறது. பின்பு அது கலைந்தும் போகிறது ,பின்பு வேறொரு பயணம்,வேறொரு வேடம் ...! நீங்கள் பலமுறை உலகத்தின் பார்வையில் இறந்து போகிறீர்கள் ...மீண்டும் மீண்டும் ஒவொரு முறையும் கொண்டு வரபடுகிறீர்கள் .




வானிலிரிந்து பல கோடி மழை தாரைகள் துளிகளாக பூமியை வந்தடைகிறது...மீண்டும் கடலில் கலந்து ..வான் வெளியை அடைகிறது , மீண்டு மழை துளிகளாக பூமியை அடைகின்றது, இந்த சுழற்சி பல யுகங்களாக நடந்து வருகின்றன!

உண்மையில் நீங்களும் நானும் அந்த மழைத்துளி போன்றவர்கள் தாம் மீண்டும் , மீண்டும் நாம் கொண்டு வரப்பட்டோம் ,கொண்டு வர படுவோம் !!.




முடிவற்ற இந்த நீண்ட பயணத்தில் நீங்கள் யார் என்றும், naan யார் என்றும் இப்பொழுது உணர்ந்திருப்பீர்கள் .அப்படி உணரும் போது உங்களுக்குள் மெல்லிய அமைதி படரும்..அதுவே உங்களுடைய உண்மையான இயல்பு,வடிவம்,ஆழ்ந்த அறிவு எல்லாம்..!

இந்த பயணம் தொடரும்..தொடர்ந்து நாம் பேசுவோம் !!