சனி, 20 செப்டம்பர், 2008

அடுத்த குறி -சென்னை!!! ஷாக்கிங் ரிப்போர்ட்

ஐந்து இடங்களில் அரைமணி நேரத்தில் சுமார் இருபத்தைந்து பேரை காவு வாங்கிவிட்டது. இம்முறை டெல்லியில் அந்த பயங்கரம் நடந்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஜெய்ப்பூர் `பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் இப்போதுதான் குண்டு வெடிப்புகள் நடந்து பல உயிர்களைப் பறித்தன.

நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாக உள்ள அவலநிலை. மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலே பதவி விலக வேண்டும் என்று ஆளுங்கட்சியிலிருந்தே அதிருப்தி ஏற்படும் அளவுக்கு நிலைமை விபரீதமாகியுள்ளது.

குண்டுவெடிப்பு நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் மூளையாகச் செயல்பட்டு வந்தது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ என்று நமது அரசு அடித்துக் கூறியது. பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகாவது இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் குறையும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் டெல்லி சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது.

`ரா'(ஸி.கி.கீ)வில் பணியாற்றிய ஒரு மூத்த அதிகாரியை நாம் சந்தித்தோம். ``பாகிஸ்தானில் ஆட்சிகள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் அந்த நாட்டின் உளவுத்துறையின் ஐ.எஸ்.ஐ. நடவடிக்கை மாறாது. அது அளவிற்கு அதிகமாக வளர்ந்து விட்டது. அதை அந்நாட்டின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களே அடக்க முடியாது. உண்மையில் பாகிஸ்தானை ஆட்சி புரிவது அந்நாட்டின் ஐ.எஸ்.ஐ. தான்.

ஆப்கானிஸ்தானை எப்போது ரஷ்யா ஆக்கிரமித்ததோ அப்போதிலிருந்தே இந்த தீவிரவாதம் ஆரம்பமாகிவிட்டது. ரஷ்யா ஆப்கானிஸ்தானைப் பிடித்தவுடன் எங்கே இந்தியத் துணைக் கண்டத்தின் பிடியும் ரஷ்யாவிடம் சென்றுவிடுமோ என்று அஞ்சியது அமெரிக்கா.

அதனால் அமெரிக்கா, ரஷ்யாவின் பிடியிலிருந்த கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளின் சுதந்திரத்திற்கு உதவியது.ஜியாவுல் ஹக் பாகிஸ்தானின் அதிபராக இருந்த போது ஒரு தீவிர இஸ்லாமியராக தன்னை வெளிப்படுத்தினார். `சமஸ்தே இஸ்லாம்' என்ற அமைப்பை உருவாக்கினார்.

பாகிஸ்தானில் இருந்த பள்ளிவாசல்கள் போல் மூன்று மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக்கினார். பாமரர்கள் அங்கு போய் தொழும் போது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டது. பிறகு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீருக்கு அனுப்பிவைத்தார்.

அங்கு அவர்களுக்கு ஆறுமாதம் துப்பாக்கிச் சுடுதல், வெடிகுண்டு தயாரித்தல், வீசுதல் போன்ற பயிற்சிகளெல்லாம் கொடுக்கப்பட்டது. இதற்குப் பல்வேறு இஸ்லாமிய நாடுகள் பணம் கொடுத்து உதவியதோடு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யும் முழு ஆதரவு தந்தது. இவற்றுக்கும் மேலாக அமெரிக்கா அவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் கொடுத்து உதவியது.
இதன் பலன் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பாகிஸ்தானிலுள்ள ஒரு சிறு பிரிவு கொஞ்சம், கொஞ்சமாக தீவிரவாத பக்கம் திரும்ப ஆரம்பித்தது. அவை கராச்சி, லாகூர் போன்ற இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கின. இப்போது பரபரப்பாக பேசப்படும் `லஸ்கர்_ இ_தொய்பா' இயக்கத்தின் தலைநகரமே `லாகூர்' தான்!'' என்கிறார் அந்த மூத்த அதிகாரி.

லஸ்கர்-இ-தொய்பா, ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கு இரண்டு விதமான வேலைகள் கொடுக்கப்பட்டன என்கிறார் மற்றொரு அதிகாரி. ``ஒரு பிரிவு ஜம்மு காஷ்மீர் பிரச்னையை கிளப்பிக் கொண்டே இருப்பதும், இரண்டாவது பிரிவு இந்தியாவில் மற்ற பகுதிகளில் கலவரத்தைத் தூண்டுவதும் அவர்களது `மாஸ்டர் பிளான்'.

இதற்காக பயிற்சி பெற்ற 600 இளைஞர்களைத் தயார்படுத்தியது. அதில் 70 சதவிகிதம் பேர் பாகிஸ்தானியர்கள். 30 சதவிகிதம் பேர் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த இளைஞர்கள் நன்றாக மூளைச்சலவை செய்யப்பட்டு பத்துப் பேர் கொண்ட குழுவாக இந்தியாவிற்குள் நுழைய விடப்பட்டார்கள்.


பாதுகாப்பு போடப்படாத பனிமலைப் பகுதிகளில் அவர்கள் சாமர்த்தியமாக ஊடுருவினார்கள். அந்த இளைஞர்களுக்குச் சொல்லப்படும் மந்திரச் சொல் என்ன தெரியுமா? `ஜம்மு காஷ்மீர் நமது சொந்தம். அதைக் கைப்பற்ற வேண்டும். இந்தியா நமது முதல் எதிரி.'

முதலில் இவர்களுக்கு ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகளைக் கொடுத்து வந்தது ஐ.எஸ்.ஐ. இது பாகிஸ்தானின் வேலை என்பது `சட்'டென்று இந்தியாவும், பிற நாடுகளும் தெரிந்து கொண்டதால் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளுக்கு அமோனியம் நைட்ரைட், பொட்டாசியம் குளோரேட், ஜெலட்டின் வைத்து வெடிக்கச் செய்கிறார்கள். இதுதான் இவர்களின் சமீபகால செயல்முறை.'' என்கிறார் அந்த அதிகாரி.

``இந்தியாவைப் பொறுத்தவரை சமீபகாலமாக வெடிகுண்டுத் தாக்குதல் அனைத்தும் சிமி (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்)யின் ஒரு பிரிவான `ஜமாத் இஸ்லாமி-இ-ஹிந்த்'' என்கிறார் இந்திய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர். ``இந்த அமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை; தேசியவாதம் இந்த மூன்றுக்கும் எதிரி.

ஆனால் இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டதுதான் இந்தியா. இப்பொழுது தெரிகிறதா நம் மேல் ஏன் இந்தத் தீவிரவாதிகளுக்குக் கோபம் என்று? இவர்களுக்கென்று சில கட்டளைகள் வைத்திருக்கிறார்கள். அவை : `அல்லா ஒருவரே கடவுள். நபிகள் நாயகம் நமது தலைவர். குரான் நமது சட்டதிட்டம். ஜிகாத் தான் நமது வழி!

இந்த அமைப்பிற்கு வெளி நாட்டிலும், இஸ்லாமிய நாடுகளுடனும் தொடர்பு உண்டு. ஹவாலா மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது.'' என்கிறார் அவர்.

``இஸ்லாமிய மாணவர்களின் இயக்கமான சிமியிலிருந்து பிரிந்த ஓர் அமைப்புதான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தன் கைவரிசையைக் காட்டியது. இப்போது அதன் தொடர்ச்சியாக ஹைதராபாத், ஜெய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத், டெல்லி என தங்கள் கோரத் தாண்டவத்தை நடத்தி இருக்கின்றன.

இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமிக்கும் பாகிஸ்தான் உளவுத்துறை தனது முழு உதவிகளையும் செய்து வருகிறது என்பதுதான் வேதனை என்கிறார் அதே அதிகாரி. ``முஷாரஃப் பாகிஸ்தானின் அதிபராக இருக்கும் போது `தீவிரவாத இயக்கங்கள் உங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் பயிற்சி பெற்று வருகிறார்கள்' என்று நமது உளவுத்துறை சொன்னால்,

`அப்படியா உடனே அதனை தடுத்து, ஒடுக்கி விடுகிறேன்' என்று சொல்லிவிட்டு முஷாரஃப் அந்தத் தீவிரவாதிகளின் முகாமை வேறொரு இடத்திற்கு புத்திசாலித்தனமாக மாற்றிவிடுவதாகச் சொல்வார் என நீண்ட மௌனத்திற்குப்பின் ஆரம்பித்தார் ஒரு பெண் அதிகாரி.

``பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகள் தற்போது தனது முழு கவனத்தையும், தென் இந்தியாவை குறிப்பாக சென்னையை நோக்கிக் குறி வைத்துள்ளன'' என்று ஒரு திடுக்கிடும் தகவலைக் கூறியவர்,

``இந்தியா உலகத்தில் வளர்ந்து வரும் முக்கிய நாடுகளில் ஒன்று. அதன் வளர்ச்சியை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். ஹைதராபாத், பெங்களூர், சென்னை இந்த மூன்று இடங்களில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. போதாக்குறைக்கு தங்கள் மதத்திற்கும் கொள்கைக்கும் எதிரான அமெரிக்காவோடு தொடர்பு வைத்திருக்கிறது. அதை ஆட்டம் காண வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறார்கள்'' என்கிறார் அவர் அழுத்தமாக.

தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றால் இப்போது இருக்கிற இந்தியச் சட்டம் பயன்படாது. `பொடா' போன்ற கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தால்தான் இந்த தீவிரவாதிகளின் கொட்டம் அடங்கும் என்கிறார்கள் நாம் சந்தித்த அதிகாரிகள் அனைவரும் ஒரே குரலில்.

மத்திய அரசு என்ன செய்யப் போகிறது!? அரசியல், சொந்த லாப நஷ்ட கணக்குகள் கட்சியைக் காப்பாற்றலாம். ஆனால் நாட்டைக் காப்பாற்ற முடியாது. இரும்புக்கரம் கொண்டு தீவிரவாதக் கும்பலை விரட்டியடிக்க வேண்டிய நேரமிது!

கெட்டு சீரழியும் தமிழ் கலாசாரம் !!-பகீர் ரிப்போர்ட்

வேளச்சேரி அபார்ட்மெண்ட். பத்தாவது தளம். டி.வி.யின் மெகா ஸ்கிரீனில் இரைச்சலாய் ஹாலிவுட் நடிகர்கள் சண்டைபோட்டுக் கொண்டிருக் கிறார்கள். ``அரேன்ஜ் பண்ணிட்டியா ராகுல்...'' சோப்புநுரையுடன் பாத்ரூமிலிருந்து குரல் கொடுக்கிறாள் அந்த இளம்பெண்.

``ம்... சொல்லியாச்சு லேகா. இப்போ வந்துடும்.'' லேப்டாப்பை தட்டிக் கொண்டே `கோக்' உறிஞ்சுகிறான் அந்த மீசை மழித்த இளைஞன்.

``ஏண்டா வரும்போதே `காண்டம்ஸ்' வாங்கணும்னு தெரியாதா?'' ஃப்ரிட்ஜில் பீர் பாட்டில்களை எடுத்துக்கொண்டு விளையாட்டாக இன்னொருவன் அடிக்கப் பாய்கிறான்.

செல்போனில் தீவிரமாய்ப் பேசிக்கொண்டே கதவைத் திறக்கிறாள் நைட்டி அணிந்த இன்னொரு யுவதி. வெளியே வாட்ச்மேன் பல் தெரிய சிரிக்கிறார். காண்டம்ஸ் பாக்கெட்டுகள் கைமாறுகின்றன. அழுக்குப் பாக்கெட்டில் ஐநூறு ரூபாயை பத்திரப்படுத்துகிறார் அந்தக் கிழட்டு வாட்ச்மேன். கதவு சாத்தப்படுகிறது. கொண்டாட்டங்களுக்கு அறிகுறியாய் மெல்லியதாய் உள்ளே சில சில `கிளுகிளு' சப்தங்கள்.

சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. நாற்பதாயிரத்துக்கும் அதிகமான சம்பளம். ஃப்ரீயா இருக்கணும். முடிஞ்சவரை என்ஜாய் பண்ணணும். இரண்டு இளம்பெண்கள். கூடவே அலுவலக ஆண் நண்பர்கள். ஒன்றாகச் சேர்ந்து அபார்ட்மெண்ட்டில் `குடும்பம்' அமைக்கிறார்கள்.

லிவிங் டூகெதர். `தாலியே தேவையில்ல... நீதான் எம் பொஞ்சாதி'னு ஒரு பாட்டு வருமே. அதே சங்கதிதான். எதையும் ருசி பார்க்கத் துடிக்கும் சாஃப்ட்வேர் ஊழியர்களின் இந்த `ஜஸ்ட் லைக் தட்' செக்ஸ் வாழ்க்கைதான் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு.

``லேடீஸ் ஹாஸ்டல் செம போர். நமக்குன்னு டி.வி. வச்சுக்க முடியாது. சத்தமா பாட்டுக் கேட்க முடியாது. `லேப்டாப்' மாதிரியான காஸ்ட்லி பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்ல.

நைட்டுல சீக்கிரமா வந்துரணும், பாய் ஃப்ரெண்ட்ஸுங்க பார்க்க வரக்கூடாதுனு ஏகப்பட்ட கண்டிஷன். முப்பதாயிரம் சம்பளம் வாங்கி எதுக்காக இப்படி கஷ்டப்படணும்? ஸோ... அபார்ட்மெண்ட்தான் வசதி. இருபதாயிரம் வாடகை.

நாலு லட்சம் அட்வான்ஸ். ஆபிஸ் நண்பர்களோட ஷேர் பண்ணிகிட்டு ஒண்ணா தங்குறோம். இதுல தப்பு என்ன இருக்கு?'' என்கிறார் பூரணி. பிரபல ஐ.டி கம்பெனிகளின் சாஃப்ட்வேர் டெவலப்பர்.

வேளச்சேரியில் கொத்துக் கொத்தாய் நிறைய அடுக்குமாடிக் கட்டங்கள். அதிகபட்சமாய் பதினைந்து மாடிகள் கூட உண்டு. அங்குள்ள ஒரு அபார்ட்மெண்டில் சுகந்திக்கு துணி துவைப்பது, வீடு கழுவுவது என வீட்டு வேலை. ``எல்லாமே பெரிய எடத்துப் புள்ளைங்க சார்... பொண்ணுங்க. பசங்கனு கும்பலா குடும்பம் நடத்திக் கிட்டிருக்காங்க'' என்கிறார் அதிர்ச்சியாக.

பெரும்பாலும் இந்த சாஃப்ட்வேர் குடும்பங்கள் பத்தாவது மாடியைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வளவு சீக்கிரம் யாருமே வந்து பார்க்க சிரமப்படுகிற உயரம் என்பதால் இந்த வசதி. பக்கத்து குடும்பங்களுக்கு பகலில் வேலையென்றால் இவர்களின் வேலையோ இரவு நேரத்தில். இந்த ஷிஃப்ட் முறையும் சாஃப்ட்வேர் ஊழியர்களின் சல்லாபங்களுக்கு நிறையவே கை கொடுக்கிறது.

வீட்டு உரிமையாளர்கள் வெகுதூரத்தில் இருக்கிறார்கள். மாத வாடகை இருபதாயிரமாக சுலபத்தில் கிடைப்பதால் பிரச்னைகள் ஏதுமில்லை.
வீடு பார்ப்பதில்தான் இந்த `லிவிங் டூகெதர்' வில்லங்கம் முளைக்கிறதா என்றால் அதைத் தவிரவும் வேறு காரணங்களைச் சொல்லி நம்மை மிரள வைக்கிறார்கள்.

``எங்கள்ல பல பேருக்கு ட்ரிங்ஸ் சாப்பிடுற பழக்கம் இருக்கு. இதுல பொண்ணுங்களும் தண்ணி சாப்பிடுவாங்க. பாய் ஃப்ரெண்ட்ஸ் வச்சுக்கறது, கேர்ள் ஃப்ரெண்ட்ஸோட `டேட்டிங்' போறதுனு எல்லாமே உண்டு. தனியா இருந்தா எதையுமே அனுபவிக்க முடியாது. அதனாலதான் இந்த அபார்ட்மெண்ட் டெக்னிக்.

வீக் என்ட் சமயத்துல யாரும், யாரையும் கூட்டி வரலாம். பார்ட்டி வைச்சுப்போம். உங்ககூட என்னால தாலிகட்டி வாழ முடியுமான்னு தோணலை. இதுவே சந்தோஷமா இருக்கு. இப்படியே கொஞ்ச நாளைக்கு இருப்போம்''னு பொண்ணுங்களே சொல்றாங்க.

ஸோ... அவளுக்கு கல்யாணம் ஆகுற வரை அல்லது எனக்கு பொண்ணு பார்க்குற வரையில ஒன்னா இருக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கோம்.'' கூலாகச் சொல்கிறார் கௌதம்.

மதுரையைச் சேர்ந்த வைத்தியநாதனை இந்தக் கலாச்சாரம் ரொம்பவே பாதித்திருக்கிறது. காரணம் அவரது இளைய பெண் அனுஷா. அனுஷாவுக்கு சென்னை சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. திடுதிப்பென்று மகளைப் பார்க்க சென்னையில் உள்ள வேளச்சேரிக்கு போயிருக்கிறார் அந்த அன்பு அப்பா. வீட்டிற்குள் பீர் பாட்டில்கள் உருண்டு கிடக்கின்றன. ஒரு இளைஞன் அரை மயக்கத்தில் இடுப்பிலிருந்து நழுவின பேண்ட் சகிதமாய் கட்டிலில். அப்பா முகத்தில் அதிர்ச்சி.

அனுஷாவிடம் பதட்டம். ``நம்ம சுகுணாவோட தம்பிதான். இவன்... இண்டர்வியூக்காக வந்திருக்கான்...'' ``பார்த்து இருந்துக்கோ அனு...'' அவ்வளவுதான். அவர் புறப்பட்டு விட்டார். அதே வருடத்தின் இறுதியில் ``அப்பா எனக்கு கல்யாண மாயிடுச்சு...'' என்று ஒரு இளைஞனுடன் ஜோடியாக வந்து நின்றிருக்கிறாள் அந்த செல்ல மகள். முன்பு, கட்டிலில் அரை குறையாய்க் கிடந்த அதே இளைஞன்தான் மாப்பிள்ளை.

``லிவிங் டூ கெதர்' விஷயத்துல நடவடிக்கை எடுக்க வாய்ப்பே இல்ல. ரெண்டு பேருமே மேஜர். இது தவிர பணிமாற்றம், கல்யாணம் நடக்கிற வரை என சில `லிமிட்ஸ்' வைச்சுகிட்டு ஒண்ணா இருக்காங்க. ப்ளாக்மெயில் நடக்கும் போதுதான் இதுல நிறையப் பிரச்னைகள் ஏற்படுது. `பொஸஸிவ்' காரணமா இதுல நடக்குற தற்கொலைகளும் அதிகம்'' என்கிறார் அடையாறு துணை கமிஷனர் ஷ்ரீதர்..

டாக்டர் ஷாலினி (மனநல மருத்துவர்)
ஆண்களும் பெண்களும் கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதர்&ஆக இருப்பது இப்போது பெருகிவர ஆரம்பித்துவிட்டது. இதற்கு மூலகாரணமாக இருப்பது ஆண்கள்தான்.

இந்த விஷயத்தில் பெண் மூளைச்சலவை செய்யப்படுகிறார். தன்னோடு நெருங்கிப் பழகும் ஒரு பெண்ணிடம் ``எனக்குக் கல்யாணத்தில் நம்பிக்கையில்லை. உன்னிடம் நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன். தாலி என்கிற சம்பிரதாயமும் கல்யாணம் என்ற சடங்கும் நமக்கு எதற்கு? என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா? நம்மால் ஒரே வீட்டில் எந்தத் தப்பும் செய்யாமல் நண்பர்களாக வாழ முடியும்'' என்றெல்லாம் பேசி சம்மதம் பெற்று விடுகிறார்கள்.

அதற்குப்பின் ஆடம்பர வாழ்க்கை மோகத்தில் பெண்கள் தண்ணி அடிப்பதும், பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்வதும், பின்னர் இன்னொரு நண்பர் கிடைத்ததும் பழைய ஆண்/பெண் நண்பர்களைக் கழற்றி விடுவதும் சகஜமாகி விடுகிறது