செவ்வாய், 31 மார்ச், 2009

வள்ளலார் - அற்புத வாழ்கையும் ! அருட்பெருஞ்சோதியும்!!

மனிதர்களாய் அவதரித்து ஞானிகளாய்,சித்தர்களாய்,தங்களை பிற சாமான்ய மனிதர்களிடதிலிரிந்து வேறுபடுத்தி காட்டி அற்புத வாழ்க்கையையும்,போதனைகளையும் இந்த உலகிற்கு நல்கியவர்கள் பலர்!!.





பத்தொன்பதாம் நூற்றாண்டில் அப்படி ஒரு அற்புத அவதரிப்பு நிகழ்ந்தது ,தில்லை எனும் சிதம்பரத்திற்கு அருகே மருதூர் என்னும் கிராமத்தில் ஆயிரத்தி எட்நூற்றி இருபத்தி மூன்றாம் ஆண்டு ராமையா பிள்ளைக்கும் ,சின்னம்மைக்கும் ஐந்தாவது மகவாக அவதரித்தார் ராமலிங்கம் எனும் வள்ளல் பெருமான்.





பசியென கூறி படி அருகே வந்து நின்ற சிவனடியார் ஒருவர்க்கு அமுதளித்த சின்னமையை ,வாழ்த்தி அந்த சிவனடியார்" என் பசியினை போக்கினை அம்மையே இந்த உலகமெலாம் பசியாற வள்ளல் ஒருவன் உன் மணி வயிற்றில் தோன்றுவான் "என்று" கூறி மறைந்தார்.அந்த வாழ்த்துதலை மெய்ப்படுத்தி அவதறித்தவரே வள்ளல் பெருமான்.





இளைய வயது முதலே யாரிடத்திலும் கல்வி பயிலாமலே அற்புத ஞானம் உள்ளவராக விளங்கினர் வள்ளலார் .மிக எளிமையாக மனிதன் தன்னுடைய வாழ்கையை எங்கனம் அமைத்தால் தெய்வ நிலையையும் அடைய கூடும் என்பதனை அற்புதமாக எடுத்துரைத்தவர் வள்ளல் பெருமான் அவர்களே !



"வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் ",என வாடியவர் வள்ளலார். இதன் மூலம் அவருடைய பிற உயிர்களின் மீது கொண்டிரிந்த இரக்கம் ,கருணையை நன்கு அறியலாம்.











இறைவன் ஒருவரே...!


அவன் ஒளி வடிவானவன் அவ்விதமே பூஜிக்க ....!


மாமிசம் உண்ணுதல் பாவம்...!


மிருகங்களை பலியிட்டு படைக்கும் வழிபாட்டு முறைகள் தவறானவை..!!



சாதிகளும் , மதங்களும் உண்மையாய் உணர பயன் படா..!


கருணையும்,பசித்த உயிரின் பிணி போக்குதல் தலையாய கடமையாகும்...!


எல்லாவற்றிலும் தெளிந்த பார்வையும்,கருத்தும் வேண்டும்


புராணங்களும்சாஸ்திரங்களும் உண்மை உனார பயன் படாது ..!


என வெகு எளிமையான மார்க்கத்தை உபதேசித்தார் வள்ளலார்.அவருடைய திரு அருட்பா அற்புத போதனைகளை,பல சூட்சுமங்களை உள்ளடக்கிய ஒன்றாகவே உள்ளது.அற்புத சந்தங்களையும்,பொருட்கருத்தையும் தாங்கி தமிழுக்கும் பெருமை சேர்த்து அழியா புகழ் கொண்டுள்ளது .



பசி பிணி போக்க வள்ளால் பெருமான் தொடங்கி வைத்த தரம் சாலையை நீங்கள்மேலே பார்க்கிறீர்கள் .ஏறக்குறைய இருநூற்றி ஐம்பதாண்டுகளாக அணையா அடுப்பாக பாதுகாக்க பட்டு வரும் தர்ம சாலை இன்றளவும் வள்ளலாரின் கருணையை வையகத்துக்கு தெரிவித்தபடி உள்ளது.



வள்ளலார் சத்ய ஞான சபையை தோற்றுவித்து "தனது மார்கத்துக்கு ஒரு கொடியையும் உண்டாக்கினார்.



ஆயிரத்தி எட்நூற்றி எழுபத்தி நான்காம் ஆண்டு வள்ளலார் பலரறிய ,மேட்டுக்குப்பம் சித்தி வளாக திரு மாளிகையில் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு உள் சென்று தாழிட்டு தன்னை தானே திரு காப்பிட்டு கொண்டார்.யாரும் தன்னை தேட வேண்டாம் என்றும்,அறையை திறந்து நோக்கின் வெற்றிடமே மிஞ்சும் என கூறி உட் புகுந்தார் வள்ளலார் .
பின்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திறந்து பார்கபட்டபோது அறை வெற்றிடமாகவே இருந்தது


கடை விரித்தேன் கொள்வாரில்லை என அன்றைய சமுக சூழலில் தன்னுடைய போதனைகளை பின்பற்ற தவறியவர்களை குறித்து ஆதங்கம் கொண்டார் .
தண்ணிரில் விளக்கேற்றியது,

மாயமாய் மறைந்து பின் தோன்றுவது..

மண்ணை தங்கம்மாக்கி காட்டியது ...

இவரை ஒன்பது மூறை புகை படம் எடுத்தும் அது உருவத்தை வெளிப்படுத்தவில்லை என்பதும் நூற்கள் கூறும் தகவல்.
ஒரே இரவில் அருட் பெருஞ்சோதி அகவல் இயற்றினார் வள்ளலார் ..
புலால் உண்ணுதல் மிக கொடிய மாச்சரியம் என்றும் பாவம் என்றும் போதித்தார் .
மனிதர்கள் ஒழுக்கத்தின் மூலம் தெய்வ நிலயை அடைய இயலும் என வழி காட்டியவர் வள்ளல் பெருமான்
அருட் பெருஞ்சோதி !அருட் பெருஞ்சோதி !
தனி பெருங்கருணை
அருட் பெருஞ்சோதி !



வியாழன், 26 மார்ச், 2009

"ஏன்"-நீங்கள் பயன்படுத்த மறந்த மந்திர சாவி !!



புராணங்களிலும்,இதிகாசங்களிளிலும் பல மந்திர சொல்கள்,வேண்டியதை பெற்றிட பயன்படுத்த பட்டதாக நாம் படித்திரிகிறோம் உண்மையில் அது உண்மையா? சுவராசியதிற்காக சேர்க்கப்பட்ட ஒன்றா? என நமக்கு தெரியாது !



ஆனால் நவின மனித வாழ்கையை புரட்டி போட்ட ஒரு மந்திர சொல் ஒன்று உண்டு..!யார் எல்லாம் இதனை உச்சரித்து உணர்கிறார்களோ அவர்கள் தாங்கள் வேண்டியதை பெற்று கொண்டார்கள்!பெற்று கொள்வார்கள் !நாளை பெறவும் செய்வார்கள்!.இது வரலாறு மட்டுமில்ல நிகழ்கால உண்மையும் கூட!



அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..!

மனிதன் தனக்கு முன் வரும் எல்லா நிகழ்வுகளையும் இதனை கொண்டு ஆராய்ந்து பார்க்கவே இந்த அற்புத மந்திர சொல் தருவிக்க பட்டது.



எங்கெல்லாமோ சுற்றிவிட்டு நம்முடைய வீட்டின் முன் வருகிறோம் ..ஆனால் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருக்கிறது,மலைத்து நிற்கிறோம் ,நம்மிடையே அந்த பூட்டினை திறந்து உள் செல்ல சாவி இருக்கிறது எனினும் நாம் அதனை உபயோக படுத்துவதில்லை.



நம்மிடத்தில் சாவி இருக்கின்றது என்கின்ற விழிப்புணர்வு நம்மிடத்தில் இல்லை.அந்த சாவி போல் தான் 'ஏன் 'என்கின்ற மந்திர சொல்லும்.இதனை பயன் படுத்தியவர்கள் வாழ்கையை அர்த்தப்படுத்தி மற்றவர்களின் வாழ்கையையும் மாற்றி அமைத்தார்கள்


உலகில் தோன்றிய தத்துவ ஞானிகள்..


உலகை மாற்றி அமைத்த அறிவியல் vingnaanikal ..


செல்வத்தை வான் மழையென கொட்ட செய்த தொழில் மேதைகள்..


உடல் நோயை ஒழித்த மருத்துவ மேதைகள் ...


என பலரும் ஒவ்வொரு தருணத்திலும் ஏன் என கேட்டார்கள்...மலைக்கவில்லை..! மீண்டும் ..மீண்டும் ஏன் என கேட்டார்கள். மந்திர வார்த்தை போல் தாங்கள் எண்ணியதை கண்டு கொண்டார்கள்.!



நம்முடைய சாமான்ய வாழ்க்கையிலும் நமக்கு வேதனைகளும், சோதனைகளும் வரும் போது நம்மில் பெரும் பாலோர் இந்த வார்த்தையை பயன் படுத்துவதில்லை மாறாக பரிகாரம் தேடி ஜோதிடர்களையும்,கோவில்களையும் நோக்கி ஓடுகிறோம்!



உண்மையில் நாம் கலங்கும் போது "ஏன் "இந்த நிலை நாம் கேட்கிறோமா?


நாம் தோற்று நிற்கும் போது ஏன் இந்த நிலை என கேட்கிறோமா?



நம்மை மற்றவர்கள் ஏமாற்றி விட்டாதாக ,நம்பிக்கை துரோகம் செய்து விட்டாதாக நாம் புலம்பும் போது -ஏன் இந்த நிலை என கேட்பத்தில்லை !



நாளைய நமது பாதைகளின் இலக்குகளை நாம் தீர்மானிக்க தவறுகிறோம் ..பின் பூட்டிய வீட்டின் கதவின் நிற்பது போல் நாம் செய்வைதயாறியது மலைத்து நிற்கிறோம்


உண்மையில் வரலாற்றின் பக்கங்களிலும்,நிகழ் கால வெற்றிகளையும் கொண்டு வந்த ஒரே ஆதாரம் நிறைந்த மந்திர சொல் "ஏன்"- என்பதேயாகும்.



ஆப்பிள் பழம் மரத்திலிரிந்து விழும் போது நியூட்டன் " ஏன் "விழுகிறது என கேட்டார் அதனால் புவி ஈர்ப்பு குறித்தான சித்தாந்தை கண்டு பிடித்தார்.



ஜி.டி.நாய்டு முதல் ..இன்றைய பல மேதைகள் வரை உபயோகித்து கண்டறிந்த ஒரு மந்திர சொல் ஏன் என்பதேயாகும்.



மீண்டும் உங்கள் முன் எந்த கேள்விக்கும்,சோதனையான தருணத்திற்கும் மலைத்து போய் நின்று விடாதீர்கள் ...மாறாக உரக்க கேளுங்கள்

ஏன்....!!


ஏன்.....!!



வெள்ளி, 20 மார்ச், 2009

கேப்டன் விஜயகாந்தும் - தே.மு.தி.க வும் !!


தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் பல்வேறு காலகட்டங்களில் தோன்றி பின் சுவடே இல்லாமால் போன வரலாறுகள் உண்டு.அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டத்திற்கு ஒப்பிட்டு வழி வழியாக சொல்ல படுவதுண்டு.


நேர்மையான அரசியலும்,அரசியல்வாதிகளும் இன்றைய கால கட்டத்தில் அறவே இல்லாமல் பொய் விட்டார்களோ என்று நாம் அவநம்பிக்கை கொள்ளுகின்ற தருணத்தில் இன்றைய அரசியல் தூர் வாரப்பட வேண்டும் என்பதே இன்றைய அத்தியவாசிய உண்மை !!



திட்டங்களை வகுப்பதோடு மட்டுமில்லாமல் ,நெருக்கடியான கால கட்டத்தில் மிக சரியான தீர்வை,முடிவை எடுப்பது ஒரு சிறந்த தலைவனின் இயல்பாக இருக்கவேண்டும். அப்படி பட்ட தலைவர்களே மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்க தகுதியானவர்கள்.!!


மலிந்துவிட்ட பச்சோந்தி தனமான அரசியலில் யாரேனும் ஒருவர் மாற்றத்தை கொண்டு வர இயலுமெனில் அதனை ஆதரிக்க முயல்வது ஆரோக்கியமான ஒன்றே !!. அவன் சினிமாகாரானாய் இருந்தாலும், செருப்பு தைப்பவனாய் இருந்தாலும் தவறேதும் இல்லை !!.ஒரு அரசியல் தலைவனுக்கு பின் வரும் தகுதிகள் இருந்தால் அதுவே போதும் .


உண்மையில் திறன் படைத்தவன்.....

துணிவோடு முடிவுகளை எடுக்க கூடியவன் ......

உண்மையில் மக்களுக்கு நல்லதை செய்ய விழைபவன் ......

பணத்திற்காக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவன் .....

இப்படி அடிப்படை குணங்களும் தகுதிகளும் இல்லாத சுய நல அரசியல்வாதிகளால் நாடு குட்டி சுவராய் போனதே மிச்சம் எனலாம்!!.


திரு.விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய தருணத்தில் குழப்பம் எதையும் அவர் தன்னுடைய முடிவுகளில் காண்பிக்கவில்லை. மாறாக தனக்கு சவால் விட்ட பச்சோந்தி அரசியல் கட்சிக்கு எதிரே தானும்,தன்னுடைய வேட்பாலார்களையும் நிறுத்தினார்..நின்றார் .தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக தனது கட்சியை உயர்த்தி காட்டினார்.


மக்களிடையே நல்ல மதிப்பை பெற்றிருந்த ,கருப்பு சால்வை அணிந்து மிக மிடுக்காக தமிழ் பேசி வந்த மறுமலர்ச்சி தலைவர் ,'சகோதரியே ' என்று எடுத்த நிலைபாட்டின் காரணத்தால் இன்றைய தேதியில் அவருடைய கட்சியில் உள்ளவர்களுக்கும் அவருக்கும் செல்லும் வழி ஏதும் தெரியவில்லை எனலாம்!


சூது நிறைந்த அரசியல் களத்தில் ,ஒருவனை வீழ்த்தி,ஒருவன் முன்னேற நினைப்பது யாருக்காக ?? மக்களுக்காகவா??.

அத்தகைய அரசியல் வாதிகள் தங்களின்சுயனலத்திற்கென்றே இதனை செய்கிறார்கள் என்பதே உண்மை.!!

திரு.விஜயகாந்த் அவர்கள் நல்ல முடிவினை எடுக்கும்பட்சத்தில் இன்றில்லாவிட்டாலும் நாளைய மாற்றாக இருப்பார் என்பதில் உண்மை உண்டு. அதனாலேயே பெரிய கட்சிகள் அவருக்கு வலை வீசி பார்க்கின்றன
திரு.விஜயகாந்த் அவர்கள் இதுவரை வேறு மொழி படங்களில் நடிக்காதவர் ,தமிழில் மட்டுமே நடித்தவர்.!!
அய்யா என்றோ..! சகோதரியே என்றோ இவர் செல்லும்பட்சத்தில்மக்களின் நன்மதிப்பு இவருக்கு இல்லாமல் போய் விடும். எனினும் கட்சி நடத்த பணம் வேண்டும் கொள்கை வேண்டாம் என்று நினைத்தால் இவரும் பல கோடிகளை பார்க்கலாம்.!!


ஜாதியின் பெயரால் கட்சி நடத்துவோரை...
பச்சோந்தி அரசியல் வாதிகளை, எனக்கு இவளவு சீட்டு கொடு எனக்கு கொள்கைகள்,கோட் பாடுகள் தேவை இல்லை என்போரை...
மொழி,உணர்வு,திராவிடம்,கொள்கை,கோட்பாடு என்று நாவன்மையால் பேசி மக்களை மனநலம் குன்றிய மறதி வாதிகள் என நினைபோரை ..
தயவு செய்து வாக்களித்து மீண்டும் நாம் ellorum வெற்றி பெற செய்ய வேண்டாம் !!


தள்ளாத வயதிலும் பதவியை கெட்டியாக பிடித்து கொண்டு உலா வரும் அரசியல் வாதிகள் இல்லாத புதிய இந்தியா நாளைய விடியலில் உருவாகட்டும்!!
சுய நல அரசியலை இனம் காணுங்கள்..!

ஜாதியின் பெயரால் அரசியல் நடத்துவோரை இனம் காணுங்கள்..

மரம் விட்டு மரம் தாண்டும் குரங்கு போல் கொள்கை ஏதும் இல்லாமல் கட்சி விட்டு கட்சி தாவும் அரசியல் வாதிகளை இனம் காணுங்கள்..!
பச்சோந்தி அரசியல் வாதிகளை,நாவன்மையால் பேசி சுய நல அரசியல் வாதிகளை தயவு செய்து வாக்களித்து மீண்டும் நாம் வெற்றி பெற செய்ய வேண்டாம் !!

திங்கள், 16 மார்ச், 2009

இன்றைய அரசியல்வாதிகளின் நிஜ முகங்கள்...!!!


ஒரு நாட்டின் அரசியலமைப்பின் தன்மையை கொண்டே அந்த நாட்டின் வளர்ச்சி பெருமளவும் சார்ந்திருக்கிறது.லஞ்ச,லவான்யமற்ற ,தொலை நோக்கு பார்வையை கொண்ட அரசு ,நாட்டின் வளர்ச்சியை, மாண்பை உலகின் பிற நாடுகளுக்கு உணர்த்துகிறது.

அரசியல் என்பது மக்களுக்காக, மக்களின் நல் வாழ்வுக்காக என்பதாலேயே அதை பொது வாழ்க்கையாக நாம் கருதுகிறோம்.அன்றைய காமராஜரை மிக சிறந்த அரசியல் தலைவராக நாம் கொண்டாட காரணம் என்ன? மக்களுக்காக ,மக்களின் நல் வாழ்வின் பொருட்டு தன்னுடைய வாழ்கையை மிக வெளிபடையாக அமைத்து கொண்ட அவருடைய பாங்கு..வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இன்றளவும் அவருடைய,எளிமை,கடமையை மட்டுமே கருத்தில் கொண்ட அவருடைய கர்ம சிந்தனை ,மக்களுக்காக அரசியல் என்பதை மிக அழுத்தமாக நிருபித்ததே காரணம்.

இன்றைய அரசியல் தலைவர்களை ,அவர்களின் பொது வாழ்கை முறையை நீங்கள் சற்று ஆராய்ந்து பாருங்கள்....

பல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள்...
பல கோடி பெறுமானமுள்ள வணிக வளாகங்கள்....
திராட்சை தோட்டங்கள்....
பல கோடி மதிப்பில் அசையா சொத்துக்கள்...
மருத்துவ செலவிற்காக மக்களின் வரிபணம்..மகனும்,மகளும்,வளர்ப்பு மகன்களுக்கும் ,பேரன்களும்,தோழிகளும் சேர்ந்து பதவி குளியல்கள்..

அன்றைய காமரஜார் இறக்கும் பொது வெறும் நூற்றைம்பது ரூபாய் மட்டுமே தன்னுடைய சொத்தாக வைத்திருந்தார்...

இன்றைய அரசியல் வாதிகள் நூற்றைம்பது கோடிகளை சர்வ சாதரணமாக தங்களுக்காக,தங்களின் பிள்ளைகள்,பேரன்களுக்காக கொடுத்து விடுகிறார்கள்.எங்கிருந்து வந்தது இவ்ளவு பணம்,சொத்து?

மக்களின் வரிபணம்...
அதிகார துழ்ப்ரயோகம்...
லஞ்சம்...
அரசியல் பேரங்கள்...
கட்சி பணம்...சொந்த பணமாக மாறிவிடுகிறது..
அரசு அரியணையில் அமர்ந்துவிட்டால் பின்னர் தமிழ்நாடு அவர்குளுடைய நாடாகி விடுகிறது..

எல்லா திட்டங்களிலும் தனிப்பட்ட ஓது கீடுகள் இல்லாமல் நடைபெறுவதில்லை. எல்லா நிலைகளிலும் கமிஷன் விளையாடுகிறது..மிஞ்சி இருப்பதில் திட்டம் பெயரளவிற்கு முழுமை பெறுகிறது !

மக்களை ஸொம்பெரிகலாக்க அரிசியும், துணி மணியும்,தொலை காட்சி பெட்டிகளும்,பணமும் அள்ளி வழங்கப்படுகிறது..ஆரோக்கியாமான வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் மக்களை,உழைக்க திராநியற்றவர்கலக்க மாற்றிவிடுகிறது இன்றைய அரசாங்கங்கள்..

சந்தர்ப்பவாத கூட்டணிகள் ...கொள்கைகள்...
கடுமையாக எதிர்க்கும் கட்சிகளும் ஒரு சீட்டு கூட கொடுத்தால் பல்லிலிலித்து பரவசம் காட்டும் பச்சோந்தி அரசியல் தலைவர்கள்..

ஜாதியின் பெயரால் ஒரு கூட்டம்..பகுத்தறிவுவாதிகள் என்று கூறி கொள்ளை அடிக்கும் கூட்டம் ஒரு பக்கம்..

அரசியல் ஒரு லாபகரமான ..மன்னிக்கவும் கொள்ளை லாபகரமான தொழிலாக நம் கண்ணெதிரே நடக்கிறது..நாமும் ஆதரிக்கவே செய்கிறோம்..பணம் கொடுத்து வோட்டுக்கள் வாங்கப்படுகின்றன..அடுத்த ஐந்தாண்டுகள் அவர்கள் கொள்ளை அடிக்க நாம் அவர்களுக்கு மலை அணிவித்து வழி அனுப்புகிறோம்..

மக்களுக்காக,மக்களின் பொருட்டு என்று அரசியல் அமையுமோ அன்று இந்தியா ஒளி பெரும்.




திங்கள், 9 மார்ச், 2009

எல்.கே.அத்வானியும் -மன்மோகன் சிங்கும் ஒரு ஒப்பீடு!!


எல்.கே.அத்வானி ஆயரத்தி தொள்ளயிரத்தி இருபத்தி ஏழில் பிறந்தவர் .


மன்மோகன் சிங் ஆயரத்தி தொள்ளயிரத்தி முப்பத்தி ரெண்டில் பிறந்தவர் .


எல்.கே.அத்வானி பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்தார்.


மன்மோகன் சிங் பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் ஊரில் பிறந்தார்.


எல்.கே.அத்வானி மும்பைஉள்ள அரசு சட்ட கல்லூரியில் பட்டம் பெற்றவர்.


மன்மோகன் சிங் இந்திய அரசியல் வாதிகளிலேயே அதிகம் படித்து பல பட்டங்களை பெற்றவர்.பஞ்சாப் பலகலை கழகம் தொடங்கி,காம்ப்ரிட்ஜ்,oxford, அல்பர்டா என வரிசையாக பட்டங்களை வாங்கி குவித்தவர் மன்மோகன் சிங்!.பொருளாதார மேதை என போற்றபடுபவர்.!


எல்.கே.அத்வானி ஆயரத்தி தொள்ளயிரத்தி நாப்பத்தி ரெண்டில் ஆர் . எஸ் . எஸில் இணைந்து தனது பொது வாழ்கையை தொடங்கினார். பின்னர் ஆயரத்தி தொள்ளயிரத்தி enbathukalil பாரதிய ஜனதா கட்சியில் சக்தி மிக்க தலைவராக உயர்ந்தார். இந்துத்வா கொள்கைகளை கொண்ட அத்வானி பல கடுமையான விமர்சனங்களுக்கு .இணை பிரதம மந்திரி ,உள் துறை அமைச்சர்,தகவல் தொடர்பு துறை அமைச்சர்,என பொறுப்புகளை வகித்தவர் எல்.கே.அத்வானி.


மன்மோகன் சிங் ஆயரத்தி தொள்ளயிரத்தி தொண்ணுற்றி . ஒன்றில் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சாராக காங்கிரஸ் கட்சியில் பொது வாழ்கையை தொடங்கியவர்

எல்.கே.அத்வானி மதவாத தலைவராக அரசியல் அரங்கில் அடையாளம் காட்டப்பட்டுள்ளார் .

மன்மோகன் சிங் ஓர் பொருளாதார வல்லுனராக ,ஓர் மிதவாத காங்க்றேஸ் தலைவராக அறிய படுகிறார்




எல்.கே.அத்வானி பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, முஹம்மத் அலி ஜின்னா கொலை வழக்கு,ஜெயின் ஹவாலா மோசடி வழக்கு, ஹிந்துத்வா தீவிர கொள்கைகள் என பல சர்ச்சைகளுக்கு சொந்தகரார் .
மன்மோகன் சிங் , நாட்டில் நடந்த பல தீவிர வாத தாக்குதல் மன்மோகன் சிங்அரசின் கால கட்டத்தில் நிகழ்ந்தேறிய காலத்தால். மிக பலவீனமான பிரதமர் என அத்வானியால் ,மற்ற அரசியல் பார்வையாளர்களாலும் விமர்சிக்க பட்டார் .
எல்.கே.அத்வானி , மன்மோகன் சிங் இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் .
இவர்களில் அடுத்த பிரதமர் யார் ?

வெள்ளி, 6 மார்ச், 2009

ஆண்டவன் பேசுகிறேன்...!!!


இந்த பிரபஞ்சத்தில் ஓயாமல் சுத்துகின்ற கோள்களும்,பூமிக்கு ஒளியாய் விளங்கும் சந்திரனும்,சூரியனும் ,பல கோடி நட்சத்திரங்களும் .அடர்ந்த காடுகளில் ,ஆழ் கடலில் உயிர் வாழும் ஜீவராசிகளையும், நிலம் ,காற்று,நீர்,ஆகாயம்,நெருப்பு என பஞ்ச பூதங்களின் சமநிலைகளையும் ஆட்கொண்டு..ஆண், பெண் என்று எனது சாயலில் உங்களை படைத்திட்ட ஆண்டவனாகிய நான்.... இந்த கணம் உங்களிடத்தில் பேசுகிறேன் .!!
உங்களை சுற்றி நான் படைத்திட்ட சகலத்திலுமிரிந்து மனிதர்களாகிய நீங்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள்!.
சிந்திக்கின்ற சக்தியை நான் உங்களுக்கு அளித்தாதால் நீங்கள் இந்த பூமியையும் தாண்டி பிரபஞ்சத்தை ஆராய்கிறீர்கள் ,நிலவுக்கும்,செவ்வாய்க்கும் வந்து போக ஆராய்கிறீர்கள் !
நான் உங்களுக்கு சிந்திக்கின்ற சக்தியை அளித்தேன் நீங்கள் என்னட்ட்ற விழயங்களை உண்டாக்கி கொண்டீர்கள் . வாய்மை ,தர்மம்,அஞ்சாமை,ஆண்மை,பெண்மை,அன்பு,பாசம்,கருணை,உதவி தாய்மை,காதல்,கனிமை என்று எனது பல ரூபங்களை நீங்கள் உணரவும் ,வெளிபடுத்தவும் செய்கிறீகள் !.


உள் முகமாய் தேடி என்னை நோக்கி வருகின்றவனுக்கு எனது ரூபத்தின் கீற்றை வெளிபடுதுகிறேன்.சகலத்திலும் படிந்து நிற்கின்ற என்னை நீங்கள் பிரித்துணர முடியாது!.என்னை உருவங்களில் காணுகின்றவனுக்கு உருவமாகவும் !எல்லயட்ட்ற பிரபஞ்சத்தின் ஒலி நிறைந்த வெற்றிடமாக கருதுபவர்களுக்கு வெற்றிடமாகவும் நான் காட்சி தருகிறேன்.
உங்கள் மனதில் ஒலிக்கின்ற எனது குரல் ஒலித்த படி உள்ளது ,எனினும் புற சத்தத்தில் நீங்கள் மெய் மறந்து உள்ள படியால் என்னுடைய குரல் மிக சன்னமாகி போகிறது.!!
என்னை நீங்கள் கருணை மிக்கவனாக கருதுகின்ற அதே நேரத்தில்...உங்களில் ஒரு சாராருக்கு இறக்க மற்ற அநியாய காரனாக நான் தூற்ற படுகிறேன்.செல்வமும்,செழிப்பும்,வேண்டுவதெல்லாம் நீங்கள் பெரும் போது என்னை நீங்கள் புகழ்கிறீர்கள்!
வறுமை,நோய்,இயற்க்கை சீற்றம் ,மரணம் இவைகள் உங்கள் முன் வரும் போது என்னை கடுமையாக நிந்திகிறீர்கள்.!!
உண்மையில் உங்களிடத்தில் இருந்து எதனையும் நான் பறிக்கவில்லை,பறித்ததாக இந்த தருணத்தில் நீங்கள் உணர்ந்ததெல்லாம் ,மீண்டும் உங்கள் வாசல் தேடி வரும்!.அப்போது நீங்கள் வேறு ரூபத்தின் கீற்றாக இருப்பிர்கள்.!! அவ்வளவே.
இந்த பிறவியில் சொல்லேன துயரம் உங்களை துரத்தும் போது நான் இறக்கமட்ட்ற கல் நெஞ்சகாரனாக உங்களால் தூழிக்க பட்டாலும் ...வழி,வழியாக முன்பும்,பின்பும் நான் மிக கருணை மிக்கவனாக உங்களால் புகழபட்டுள்ளேன் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.




என்னுடைய சாயலில் நீங்கள் இருப்பதால், என்னுடைய எல்லயட்ட்ற சக்திகளின் சாயலையும் உங்களால் வெளிபடுத்த இயலும் என்பதை நீங்கள் பல முறை வெளிப்படுத்தி விட்டிர்கள்.!!
அறிவு,நம்பிக்கை,முயற்சி என சிந்தனையின் அடிப்படை தூண்டுதல் கலீல் பல ஆய்வுகளை நீங்கள் மேற்கொண்டு உள்ளிர்கள்.அவற்றில் நான் இருகிறேனா இல்லையா என்பதும் ஒன்று!
என்றேனும் உங்களுக்கு வழங்கப்பட்ட இந்த தருணத்தை உணர்ந்திருக்கிறீர்களா?? உடை உடுத்தி இருக்கிறீர்கள்,உங்களை அழகு படுத்தி கொள்கிறீர்கள்,ஹாஸ்யம் கேட்டு சிரிக்கீரிர்கள் ,ஆலயம் சென்று வழிபடுகிறீர்கள்....இன்னும் பல .
உண்மையில் யோசித்து பாருங்கள் காட்டில் உலாவும் மிருகங்களை காட்டிலும் ..அபுதமான ஒரு வாய்ப்பை உங்களுக்கு அளித்தது எது?




சம நிலை தவறும் போது நான் இறக்க மற்றவனாக உங்களால் தூற்றபடுகின்ற நான்.விபத்துக்களில், இயற்கை சீற்றங்களில் உங்களுடைய உறவுகளை,உடமைகளை இழக்கும் போது கண்னற்றவனாக,கல் நெஞ்சகாரனாக
என்னை நீங்கள் சபிக்கும் போது உங்களின் அறியாமை என்னை வருத்துகிறது.ஏனெனில் நீங்கள் என்னுடைய ரூப கீற்றுகளை தாங்கி உள்ளிர்கள்!
வறுமையில் உதவி தேடி வரும் போது..நீடித்த நோயிலிரிந்து சுக மடையும் போது,என்னுடைய இருப்பை நீங்கள் உணர்கிறீர்கள்.
உண்மையில் நான் எல்லா தருணத்திலும் உங்களோடு இருக்கிறேன்..என்னுடைய குரல் உங்களுக்குள் ஒலித்த படி உள்ளது, மரணமும்,பிறப்பும் ஒன்றென கருதும் என்னுடைய குரல் உங்களுக்குள் ஒலிக்கிறது,செல்வமும்,வறுமையும் கால நிலை போல் நிலையற்றது என்னும் என்னுடய விளக்கம் காட்சிகளாக உங்கள் முன் விரிகிறது.
அன்பினால் என்னை காணுங்கள்!
ஞானத்தினால் என்னை காணுங்கள்!
கருணையினால் என்னை காணுங்கள்!
தாய்மையில் என்னை காணுங்கள்!
கள்ளமில்லா குழந்தையின் சிரிப்பில் என்னை காணுங்கள்!
கடமையினால் என்னை காணுங்கள்!
வாய்மை,தர்மம்,அஞ்சாமை இவற்றில் என்னை காணுங்கள்!

சகலத்தையும் உள்ளடக்கி உங்கள் மனதின் ஆழ்வெளியில் நான் அமைதியாய் அமர்ந்திருக்கிறேன்.உள் நோக்கி வாருங்கள் உங்களை நீங்கள் காணும் போது நான் யார் என்று உங்களுக்கு தெரியும் !!

செவ்வாய், 3 மார்ச், 2009

"பாரின் "- கற்றதும் ! பெற்றதும் ! இழந்ததும்!




கனவுகள் மெய்பட வாழ்க்கையில் பணம் மிக முக்கியமான ஒன்றாகி விடுகிறது.ஒவ்வொரு மனிதனும் செல்வந்தானாக வேண்டும் என்று விழைகிறான்.குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க ஒரே ஒரு நேர்வழியாக அயல் நாட்டு வாழ்கையை அவன் தேர்ந்தெடுக்கிறான். பாரின் வாழ்க்கையில் அவன் கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன?.இவற்றை யதார்த்தமாய் பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.




சிறு வயதில் வானத்தை அண்ணாந்து பார்த்து சிறு குருவி போல் கடந்து செல்லும் விமானங்களை அதிசயமாக நாம் பார்த்ததுண்டு. அப்போதைக்கு அது எங்கு செல்கிறது ? ஏன் செல்கிறது நாம் யோசிப்பதில்லை,சிறு வயதில் நாம் அதனை வியப்போடு பார்க்க மட்டுமே செய்கிறோம்.



நாம் வளர்கிறோம் ,படிக்கிறோம்,கனவுகளும் நம்மோடு சேர்ந்து வளர்கிறது.வாழ்கையின் அடிப்படை தேவைகளுக்கு கூட கடின படும் எண்ணிலடங்காத குடும்பங்கள் இருக்கின்றன.செய்து முடிக்கவேண்டிய கடமைகள் கனவுகளை காட்டிலும் அதிகமாகி போகிறது.!


தங்கையின் திருமணம்...
படிக்க வாங்கிய கடன்...
விளையாத பூமி....
அப்பாவின் மருத்துவ செலவு...
ஏழ்மையில் உதாசின படுத்தும் சுற்றம்....
கட்டி முடிக்க வேண்டிய வீடு.....


இன்னும் இப்படி பல அயல் நாடு நோக்கி படை எடுப்போரின் பின்புல காரணங்கள் நீண்டு போகிறது.



அற்புதமான தனது தாய் நாட்டை ,அதன் கலாச்சாரத்தை கடந்து ,சொந்தம் ,பந்த பாசங்கள் மறந்து ,அடைய வேண்டிய உலக பூர்வமான இலக்குகளுக்காக ஒரு பயணம் ஆரம்பிக்கிறது.



படித்தவன், படிக்காதவன் எல்லோரும் இந்த எதிர் நீச்சலுக்கு தயாராகிறார்கள்.மிக சாதாரன கல்வி அறிவு இல்லாதவர்கள் கூட தங்களுடைய உடல் உழைப்பை நம்பி வளைகுடா நாடுகளில் பணம் ஈட்ட செல்கிறார்கள்.


உண்மையான போராட்டம் அவர்களுடயதாகவே தெரிகிறது..பாஸ்போர்ட் எடுப்பது தொடங்கி..ஏஜெண்டுகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் நம்பி கொடுமைகளுக்கு ஆளாகி வாழ்கையை இழந்து திரும்பியவர்களும் , திரும்பாமல் அயல் மண்ணில் மறைந்து போனவர்களும் உண்டு.


மிக கடுமையான சீதோழன நிலைகள் வெயிலும் ,குளிரும் மிக உச்சத்தில் ...வயிற்றை நிரப்ப ஏதோ உணவு..மூர்க்க மான பல மனிதர்களை முதல் முறையாக காணுகின்ற எவரும் புதுமையான அந்த கற்றல் தேவைதானா? என எண்ணுவதில் வியப்பேதுமில்லை!


பறந்து விரிந்த பாலைவனங்களில்,ஓயாமல் இயங்கும் தொழிற்சாலைகளில்,சமையல் கூடங்களில், ஓட்டுனர் இருக்கையில்,மருத்துவ மனையில்,பெட்ரோல் பங்குகளில்,அலுவலகங்களில்,வணிக வளாகங்களில்,சாலையோர கடைகளில்......இப்படி எல்லா இடங்களிலும் கனவுகளை நெஞ்சில் சுமந்த படி ஒவ்வொரு மனிதனும், நெஞ்சில் நினைவுகளை அசை போட்டு கடமைகளுக்காக வாழ்கையை அடகு வைக்கிறார்கள்.




மாதா மாதம் அவரவருடைய சம்பள பணம் இந்தியா வந்தடைகிறது. காயும் செடிகளுக்கு தன்னிற் போல குடும்பம் தழைக்கிறது. அங்கு சுட்டெரிக்கும் வெயிலில் அவன் வாடும் போது அவனுடைய குடும்பம் குளுமையை உணர்கிறது.

பணம் சேர ,சேர ஒரு கட்டத்தில் தன்னையும் அறியாமல் மனிதன் மனதளவிலும், உடல் அளவிலும் மாற்றங்களை பெறுகிறான்.நீடித்த தனிமை அவனை ஆரோக்கிய சிந்தனைகளிளிரிந்து தள்ளி வைக்கிறது. கடுமையான கால நிலைகள் அவனுடைய உடலில் நீரிழிவாகவும்,ரத்த அழுத்தமாகவும் மாறி உள்ளுக்குள் அமர்ந்து கொள்கிறது.

மனிதனுக்கு ஆசைகள் கட்டுக்குள் நிற்பதில்லை காலம் கூடினாலும் அவனுடைய புதிது புதிதான ஆசைகளும் கூடி போகிறது. வாழ்கை நீடித்த அடமானமாக அவன் வைத்து விடுகிறான்..அல்லது வைக்க நிர்பந்திக்க படுகிறான்.





பாளை வனமாக இருந்தாலும் பரவாயில்லை பாரின் வாழ்கையே சிறந்தது என அறை மனதோடு ஏற்க காரணம்? விடைகளை சராசரியான மனித மனதிற்கே விடுகிறேன் !
தாய் நாட்டில் சுற்றமும்,சொந்தமும் இவனுடைய வியர்வையின் முக்கியம் உணராமல் ,தங்களுக்கு என்ன கிடைக்கும் என நோட்டம் விடதொடன்குகிறார்கள்.காலம் கடந்து அதனை உணர்ந்து கொள்பவர்களே அதிகம்.





குழந்தையின் மழலை மொழி இழந்து...
நல்லதும் கெட்டதும் அவனை விலக்கி....
நாக்கின் சுவை இழந்து, ....
இளமை கடந்து....
உள்ளுக்குள் நோய் கண்டு...
ரசனை மிக்க மனம் இழந்து...
இன்னும் எத்தனையோ விழயங்களை வாழ்க்கையில் இழந்து கடல் கடந்து வாழும் பல கோடி மனிதர்களின் நிஜ முகத்தின் ஒரு தோற்றம் இது.
அவர்கள் கற்றதும்,பெற்றதும்,இழந்ததும் வெகு நிறைய.இந்த பதிவு அத்தகைய மனிதர்களுக்கு சமர்ப்பணம் !