சனி, 20 ஜூலை, 2013

உன்னை யார் அறிவார் ...?


இந்த வாழ்க்கை நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் மிக தறிகெட்டு ஓடி கொண்டிருக்கிறது.இதனை நம்மில் யாரும் உணர்ந்து கொள்ளவோ ,நேர் படுத்தவோ  முயல்வதில்லை .நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் தன்னுடைய மனிதத்தை இழந்து இலக்கற்ற ,உறவுகளின்  உன்னதம் உணராமல் ,பணம் ,பொருள்  என ஓடி கொண்டே இருக்கிறான் .





பற்றை விடு ! தன்னை தான் உணர்!கடமையை செய் !வாழும் வரை நல்லவனாய் இரு நம்மை வழிபடுத்த எத்தனை போதனைகள் !இந்த மானுடம் எல்லாவற்றையும் உண்மையான கண் கொண்டு காணமல் .தன்னை ஏமாற்றி விட்டில் பூச்சி போல மாய்ந்து போகிறது .

சமுக ஏற்றத்தாழ்வு ,சீர் கேட்ட சட்டம் ஒழுங்கு,வரை முறையற்ற பணத்தாசை ,பால் மனம் மாறாத சின்னஞ்சிறு மொட்டுகளைகூட சீரழிக்கும் மிருக பாலுணர்வு ,நாட்டை சுரண்டி வீட்டை காக்கும் சாக்கடை அரசியல் ,என எதற்கும் குறைவில்லாத நீடித்த அவலம் இங்கு !




பெற்ற தாய் தந்தையர்கள் புறந்தள்ளபடுகிரார்கள்,வறுமை கல்வியை மறுக்கிறது,நம்பிக்கையற்று தற்கொலைகள் நித்தமும் ,எங்கு செல்கிறது இந்த உலகம்?

விடை தரவும் ,விடை காணவும் நாம் முயன்றால் நாம் நம்மையும் ,சீர் கேட்ட இந்த புறத்தையும் கட்டுக்குள் கொண்டு வர இயலும் !