செவ்வாய், 26 ஆகஸ்ட், 2008

முத்துவேல் கருணாநிதி தெரிந்து கொள்ளுங்கள் !!


முத்துவேல் கருணாநிதி
தமிழ்நாட்டு முதலமைச்சர்
Constituency
சேப்பாக்கம்
பிறப்பு
ஜூன் 3 1924திருக்குவளை, தமிழ்நாடு
அரசியல் கட்சி
தி.மு.க.
பிள்ளைகள்
4 மகன்கள் 2 மகள்கள்
வதிவிடம்
சென்னை
மே 31 இன் படியான தகவல், 2006மூலம்: Government of Tamil Nadu
கலைஞர் முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) (பிறப்பு - ஜூன் 3, 1924)


திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர். 1969 முதல் அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். மே 13, 2006 முதல் ஐந்தாவது முறையாகத் தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இவருடைய எழுத்து வன்மை, பேச்சாற்றலின் காரணமாக கலைஞர் எனப் பலராலும் அழைக்கப்படுகிறார்.
ஆரம்ப காலத்தில் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக எதிர்த்த இவர், பிற்காலத்தில் அதே கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, ஊடகங்களாலும் எதிர்க்கட்சிகளாலும் விமர்சிக்கப்பட்டது


அரசியல்
தி.மு.க.வின் ஆரம்பகால உறுப்பினர்.1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்த பெருமை இவருக்கு உரியது.
1969-1971 -- அண்ணாதுரை மறைவிற்கு பின் முதல் முறை ஆட்சி
1971-1974 -- இரண்டாவது முறையாக காங்கிரசை வீழ்த்தி ஆட்சி
1989-1991 -- நீண்ட நாள் இடைவேளைக்கு பின் மூன்றாம் முறை ஆட்சி
1996-2001 -- நான்காம் முறை ஆட்சி
2006-இன்றுவரை -- ஐந்தாம் முறையாக ஆட்சி


குடும்பம்
மனைவிகள்
திருமதி. பத்மாவதி
திருமதி. இராசாத்தி அம்மாள
திருமதி. தயாளு அம்மாள்
மகன்கள்
மு. க. முத்து
மு. க. அழகிரி
மு. க. ஸ்டாலின்
மு. க. தமிழரசு
மகள்கள்
கனிமொழி
செல்வி
மு.க. ஸ்டாலின் தற்பொழுதைய (2007) தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார். கனிமொழி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார். [1]
திரைப்படப் பணி

கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்
கண்ணம்மா
மண்ணின் மைந்தன்
பராசக்தி
புதிய பராசக்தி
மந்திரிகுமாரி
பாலைவனப்பூக்கள்
மனோகரா
உளியின் ஓசை' '
மேலும் பல...

மேடை நாடகங்கள்
சிலப்பதிகாரம்
மணிமகுடம்
ஒரே ரத்தம்
பழனியப்பன்
தூக்கு மேடை
காகிதப்பூ
நானே அறிவாளி
வெள்ளிக்கிழமை
உதயசூரியன்
மேலும் பல...

புத்தகங்கள்
குறளோவியம்
நெஞ்சுக்கு நீதி
தொல்காப்பிய உரை
சங்கத் தமிழ்
ரோமாபுரி பாண்டியன்
தென்பாண்டி சிங்கம்
வெள்ளிக்கிழமை
இனியவை இருபது
சங்க தமிழ்
பொன்னார் சங்கர்
திருக்குறள் உரை
மேலும் பல...