செவ்வாய், 30 செப்டம்பர், 2008

பிரமிடுகள் -அற்புத படங்கள் அதிசய தகவல்கள் !!!!

தற்கால எகிப்து தலை நகர் கைரோவின் புற பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை .

உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான,இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத விழயங்களை உள்ளடக்கியது


ஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் ,இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது .

இவ்வளவு எடை கொண்ட கற்களை ஐநூறு அடி உயரத்திற்கு கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர்.

சுண்ணாம்பு கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செயப்பட்ட க்ரநிடே சுண்ணாம்பு கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டன .பின்னர் இக்கற்கள் (வெளிப்புற) பின்னர் வந்த அரப் சுல்தானால் பெயர்த்தெடுக்கப்பட்டு ,மசூதிகள் கட்ட கொண்டு செல்லப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

இருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்பு கற்கள் எவ்வாறு அவளவு உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கபட்டன் என்பதும், அத்தகைய பாலைவன பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று.


புற கற்களில் வித்தியாசமான எழுத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன இவை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வராலாற்று அய்ய்வலர்கள் கருத்து .
இத்தகைய புற கற்களை அராபிய கொள்ளையர்கள் கொள்ளயடிதத்தின் விளைய்வாக அதனுடைய விழயங்கள் உலகத்திற்கு தெரியாமலே போய்விட்டன.


கிசவில் உள்ள மூன்று பிரமிடுகளும் .பைதொகராஸ் என்கிற கணித விதிகளிபடியும் ,பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின் நட்சத்திரங்களை குறிக்கின்ற துல்லிய கோட்பாட்டில் அமைக்கபட்டுலத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மற்றுமொரு அதிசய விழயம் என்னவென்றால் .உள்ளே வைக்கப்பட்ட உடல்கள் கேட்டு போகாமல் இருப்பதின் விந்தை தான். உள்ளே வைக்கப்பட்டிருந்த உடல்கள் கெடாமல் மாறாக முற்றிலும் உலர்ந்த நிலைக்கு உள்ளது .ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்கு பெருந்தினியாக உள்ளது !

இன்னும் முற்றிலுமாக பயன் பாடுகளை கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள் ,குஉருக்கும் நெடுக்குமாக செல்கின்ற சதுர துளைகளின் பயன் பாடுகள் மர்மங்கலகவே உள்ளன.
இரண்டாயிரத்தி நான்காம்
ஆண்டு இத்தகைய சதுர துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ள ரோபோட்களை உள் செலுத்தி உலகம் முழும் முழுதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக கண்டபோது.
உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கபட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது .இவற்றை திறக்கவும் அதற்கு பின்புறம் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வு குழுக்கள் மும்முரமாக
மனிதனின் அதிசய தக்க ஆற்றல் ,அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும்..இன்னும் பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும் பிரமிடுகளை எண்ணி நாம் ஆச்சரியபடுவதில் தவறு ஒன்றும் இல்லை.






திங்கள், 29 செப்டம்பர், 2008

சுனாமி என்கிற ...ஆழிப்பேரலை!!!


சுனாமி அல்லது ஆழிப்பேரலை (ஜப்பானிய மொழியில் சுனாமி )"துறைமுக அலை") என்பது கடல் அல்லது குளம் போன்ற பாரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைக் தொடர்களைக் குறிக்கும்.


பூமி அதிர்ச்சி, மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, வின்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.




பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என் பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது.


பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாயின. இந்த பிளேட்கள் மீது தான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள் தான். இதைத் தான் 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள்

கூறுகின்றனர்.


யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமாக்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது.



1. கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும்.

2. கடலாழ பூகம்பத்தினால் வரும்

3. கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.

4. மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.

5. வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)6. கடலில் பவுதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.



ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு., 365ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


1. சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.


2. 1883ம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத் துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.


3. அதன் பின்னர் தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964ம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.



அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய்.


1946 ஏப்ரல் 1ல் ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின.அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது.


அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் 'சுனாமி மிதவை கருவி'.1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின.


இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது.


1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.



சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்:கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும்.


நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும்.


அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள். இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும்.


ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும். நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம், சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும்.




இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆப்ரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும்.


எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்

ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

மனிதா ..விழித்துகொள்!!

மனித வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம் , அதனுடைய மதிப்பை நம்மில் பெரும்பாலோர் நினைத்துகூட பார்ப்பதில்லை !.

சிந்திக்கின்ற திறன் படைத்த ,சிந்தனைகளை செயல்காளக்கி வியக்க வைக்கும் இந்த மனித பிறப்பின் உயர்ந்த நோக்கத்தை நம்மில் பலரும் மறந்து வெற்று ஜடமாய் வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கிறோம் !

தாயின் கர்பத்தில் பத்து மாதம் உள் தங்கி உயிர் தாங்குகின்ற அற்புதம் தான் என்ன!,இது தாய், இதுதந்தை, இது அக்கா ,இது தம்பி, அண்ணன் ,மாமன் என உறவுகள் கொண்டாடி ,பாசம் எது நேஅசம் எது உணரக்கூடிய உயிர் கூட்டம் வேறு ஒன்றும் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதாக நாம் இதுவரை அறிய பெறவில்லை .

கண்மூடி அமர்ந்து தன்னை தான் உணர்ந்த சுகத்தை பட்டியளிடோர் பலர்,

மனித வாழ்க்கையில் வறுமை என்றும் , வலி என்றும் தடைகளை தாண்டி சிகரங்களை தொட்டவர்கள் பலர்!.

தன்னுடைய அற்புத அறிவாற்றலை பயன் படுத்தி இந்த மானிட சமுதாயம் பயனுற பல அறிய கண்டுபிடுப்புகளை கண்டு அளித்தோர் பலர் !

மக்களின் உள்ள உணர்ச்சிகளை தட்டி எழுப்பி அவர்களின் மட்டற்ற சக்தியை வெளி கொண்டு வந்த கவிஞ்சர் பெருமக்கள் பலர்!

அற்புதமான இந்த மானிட பிறவியின் இன்றைய நிலை என்ன ?..

கோரமான தீவிரவாத தாக்குதல்கள், மிக கேவலமான இழிசெயல்கள்,பாசம் நேசம் என மறந்து மனிதன் மரமாக வாழுகின்ற அவலம்..

அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில மனித நேய உயர் எடுத்து காட்டுக்கள் ! செல்வன் யிதேந்திரனின் இதய தானம் .இறந்தும் உயிர் வாழுகின்ற உன்னதம் என கொஞ்சம் அறுதல் கொண்டாலும்..சிந்திக்க வேண்டிய தருணமிது !!

நம்மை நாம் உணர்வோம் !!

புதன், 24 செப்டம்பர், 2008

இசை ஞானி இளையராஜா !!-வாழ்க்கை குறிப்பு

இளையராஜா ( Ilayaraaja ) (பி. ஜூன் 2, 1943) என்ற பரவலாக அழைக்கப்படும் ராசய்யா, இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற தமிழ்த் திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1970 களின் பிற்பகுதியில் அறிமுகமானார். இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்பிற்கும் பெயர் பெற்றவர்.

வாழ்க்கைச் சுறுக்கம்

இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.
இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர், பவதாரிணி ஆகிய ஐவரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவயதிலேயே ஹார்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.

1969 ஆம் ஆண்டு தன் 29ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ்.ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதை தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் கிராமிய மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.

நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு மேலும் புகழினை தேடித்தந்தன.

ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.


திரைப்படமல்லாத மற்ற
இசையாக்கங்கள்
இளையராஜா, "பஞ்சமுகி" என்ற கர்னாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.

"How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.

"Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.
"India 24 Hours" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.


1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.

"ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.

"இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

"மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.


சாதனைகள்

இளையராஜா, இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். எழுநூற்றியைம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசை கோர்த்துள்ளார்.

ஆசிய கண்டத்திலிருந்து ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்த முதல் இசையமைப்பாளர் இளையராஜா. (அந்த சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இன்னும் வெளியடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது)

தமிழக அரசின் கலைமாமணி விருதினையும், 1988ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருதினையும், 1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருதினையும், இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைகழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைகழகத்தினாலும் முனைவர் பட்டம் (டாக்டர் - Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.

இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை மூன்று முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :
1985இல் - சாகர சங்கமம் (தெலுங்கு)
1987இல் - சிந்து பைரவி (தமிழ்)
1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு)

இளையராஜா புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிய புத்தகங்கள் :

சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
வழித்துணை
துளி கடல்
ஞான கங்கா
பால் நிலாப்பாதை
உண்மைக்குத் திரை ஏது?
யாருக்கு யார் எழுதுவது?
என் நரம்பு வீணை
நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
இளையராஜாவின் சிந்தனைகள்

ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி -ரஜினி டிவி !!

எந்திரன்' படப்பிடிப்புக்காக `பெரு' நாட்டிற்குச் சென்றிருக்கும் தங்களின் தலைவர் எப்போது சென்னை திரும்புவார் என ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும், மன்றப் பொறுப்பாளர்களும் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வருகிற 27 அல்லது 30-ம் தேதி சென்னை திரும்பும் ரஜினி, வரும் மஹாளய அமாவாசைக்குப் (28-ம் தேதி) பிறகு புரட்டாசி மாத வளர்பிறையில் முப்பது மாவட்ட மன்ற நிர்வாகிகளையும் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனியே சந்திக்க இருக்கிறாராம்.

புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை என்பது, `தொட்டது துலங்கும்' அம்சம் கொண்டதாம். அப்போது எடுக்கும் எந்த ஒரு புது முயற்சியும் மிகப் பெரிய அளவில் வெற்றியையும், திருப்புமுனையையும் ஏற்படுத்தித் தருமாம்.

அதனாலேயே புரட்டாசி மாத வளர்பிறை நாட்களை தன் ரசிகர்களைச் சந்திப்பதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் சூப்பர் ஸ்டார், அப்போது ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்யும் அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட இருப்பதாகத் தகவல்.

கூடவே, தான் திட்டமிட்டிருக்கும் மற்றொரு மெகா பிளான் குறித்து ரசிகர்களின் கருத்துக்களைக் கேட்டறியவும் அவர் திட்டமிட்டிருக்கிறாராம். தனது தலைமையின் கீழ் பொதுவான அமைப்பு(!) ஒன்றைத் தொடங்குவதுதான் ரஜினியின் அதிகாரபூர்வமான முதல் அறிவிப்பாக இருக்குமாம்.

அடுத்ததாக, தங்களுக்கென்றே தனி டி.வி. சேனல் ஒன்றையும் ரஜினி தொடங்கப் போகிறாராம். இந்த டி.வி. சேனலை நிர்வகிக்கப் போவது யார் தெரியுமா? சூப்பர் ஸ்டாரின் இரண்டாவது மகளான சௌந்தர்யா!
புது அமைப்பு, தனி சேனல், இந்த இரண்டு விஷயங்களைப் பற்றித்தான் தலைவர் தங்களை அழைத்து ஆலோசனை செய்யப் போகிறார் என்பதை உறுதியாக அறிந்து கொண்ட சில மாவட்டப் பொறுப்பாளர்கள், ரஜினியை அசத்தும் விதமாக, அந்த அமைப்புக்கும், சேனலுக்கும் என்ன பெயர் வைக்கலாம் என்பதையெல்லாம் கிட்டத்தட்ட முடிவு செய்து விட்டார்களாம்.

அதாவது, சேனலுக்கு `ரஜினி டி.வி'. என்றும் பொது அமைப்புக்கு மக்கள், ஜனநாயகம், குரல் என்று ஏதாவதொரு பெயர் வைக்கலாம் என்பதும் அவர்கள் ஐடியா. சேனலுக்கு ரஜினி டி.வி. என்று பெயர் வைப்பதை தலைவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால் அப்படி பெயர் வைத்தால்தான் மக்கள் மத்தியில் எடுபடும் என்பதை எடுத்துக்கூறி ரஜினியை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும் என்பதில் மாவட்டப் பொறுப்பாளர்கள் உறுதியாக இருக்கிறார்களாம்.

அமைப்புக்கு `குரல்' என்று தாங்கள் வைத்திருக்கும் பெயர் ரஜினியை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணும் என்றும் நம்புகிறார்கள் மன்றப் பொறுப்பாளர்கள். காரணம், `தமிழக அரசியலைப் பொறுத்தவரை `வாய்ஸ்' (குரல்) என்றாலே, அது ரஜினி சொல்வதை மட்டும்தான் குறிக்கும். ஆகவே, தலைவர் தொடங்கப் போகும் அமைப்புக்கு `வாய்ஸ்' என்ற பெயரே பொருத்தமாக இருக்கும்' என்கிறார்கள்.

இதைத் தாங்கள் தலைவரை நேரில் சந்திக்கும் போதும் வலியுறுத்தப் போகிறார்களாம், அவர்கள்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவர்களிடம் நாம் கேட்டபோது, ``தலைவர் நேரடி அரசியலில் இப்போதைக்கு ஈடுபடமாட்டார். கட்சி ஆரம்பிப்பது பற்றியும் எங்களிடம் இப்போதைக்கு அவர் பேசப் போவதில்லை. புது அமைப்புக்கு மட்டும் `ஓகே' சொல்லப் போகிறார். ஒழுங்கில்லாமல் சிதறிக் கிடக்கும் மன்றங்களையும், ரசிகர்களையும் புது அமைப்பின் கீழ் ஒருங்கிணைப்பதுதான் தலைவரின் தற்போதைய நோக்கம்.

புதுஅமைப்பிற்கான உறுப்பினர் கார்டு கூட மிக விரைவிலேயே எங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. மாநில நிர்வாகிகளையும் தலைவர் விரைவில் அறிவிப்பார். இப்போது பொது அமைப்பாகவே அறிவிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் இந்த அமைப்பே அரசியல் இயக்கமாகவும் அவதரிக்கலாம்'' என்று அடித்துச் சொன்ன அவர்கள்,

``தமிழக அளவில் எங்கள் தலைவர் பொது அமைப்பு ஆரம்பிக்கும் அளவுக்கு இறங்கி வந்திருப்பதே எங்களுக்குக் கிடைத்த வெற்றிதான். இந்த அமைப்பு மூலம் நாகரிகமாக அரசியல் நடத்துவதற்கான பயிற்சியையும் எங்களுக்கு அவர் தரப் போகிறார். பொதுப் பிரச்னைகள், மக்களின் தேவைகள் குறித்த போராட்டங்கள் போன்றவற்றையும் இந்தப் புது அமைப்பு மூலம் தலைவரே நேரடியாகக் களத்தில் இறங்கி நடத்துவார். தனிக்கட்சி தொடங்க சில வருடங்கள் ஆனாலும், இந்த அமைப்பு மூலமாகவே எங்கள் தலைவரின் கட்டளைகளை நாங்கள் நிறைவேற்றுவோம்!'' என்கிறார்கள் அந்த நிர்வாகிகள்.

மற்றொரு விஷயத்திலும் இந்த மாவட்ட நிர்வாகிகள் ரொம்பவே உஷாராக இருக்கிறார்கள். அதாவது, அடுத்த மாதம் ரஜினியை நேரில் சந்திக்கும்போது தவறியும்கூட, `தலைவா, உங்க கூட போட்டோ எடுத்துக்கறோம்' என்றோ, `நீங்க நேரடி அரசியல்ல இறங்குங்க தலைவா' என்றோ கேட்பதில்லை என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இது போன்ற விஷயங்கள் ரஜினிக்குத் துளியும் பிடிப்பதில்லையாம். இதனை மன்றத்தலைவர் சத்தியநாராயணாவே தனக்கு நெருக்கமான மாவட்ட நிர்வாகிகளிடம் கூறி எச்சரித்தாராம். இதன் பின்னணியில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றும் சொல்லப்படுகிறது.

பல்வேறு சமயங்களில் ரஜினியை நேரில் சந்தித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக சில மாவட்ட நிர்வாகிகள் ராகவேந்திரா மண்டபத்தில் குவியும்போது, அந்தத் தகவலை ரஜினியிடம் அப்படியே சொல்வாராம் சத்தியநாராயணா.

அப்போதெல்லாம் ரஜினி சற்றுக் கடுமையாகவே, ``எதுக்காக என்னைப் பார்க்கணுமாம்? அங்கே போய் நின்னா, `தலைவா! உங்க கூட நின்னு ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கணும். தலைவா, கட்சியை ஆரம்பி' என்று பக்குவமில்லாமல் குழந்தைத்தனமாக கோஷம் போடுறாங்க. இருபத்தஞ்சு வருடங்களா மாவட்ட நிர்வாகிகளா இருக்கற இவங்களே இப்படிச் செய்தா எப்படி சத்தி? உணர்ச்சிவசப்படக் கூடிய இவங்களை நம்பி நான் எப்படி அரசியலில் இறங்க முடியும்? அவங்க பக்குவப்படட்டும். தங்களை நம்பி எவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைக்கப் போறான் இந்த சிவாஜிராவ் என்பதை முழுமையாக அவர்கள் உணரட்டும். அதுவரை நான் பொறுமையாக இருக்கேன்'' என்பாராம் ரஜினி.

அந்தப் பக்குவம் இப்போது தன் ரசிகர்களுக்கு வந்துவிட்டதாகவும் நம்புகிறாராம் சூப்பர் ஸ்டார்.

`குசேலன்' பட விவகாரம் மீடியாக்களில் பற்றியெரிந்த போது, தனது ரசிகர்கள் காட்டிய அசாத்திய மௌனமும், பொறுமையும் சூப்பர் ஸ்டாரையே கொஞ்சம் மிரட்டி விட்டதாம். அவர்களின் அந்த மௌனமும் பொறுமையும் ரசிகர்களின் பக்குவத்தை மட்டுமல்ல... `தன்னை அரசியலில் இறக்கிவிடாமல் இவர்கள் ஓயவே மாட்டார்கள்' என்பதையும் ரஜினிக்குத் தெளிவாகவே உணர்த்தி விட்டதாம்.

அதன் விளைவுதான் அடுத்தமாதம் சூப்பர் ஸ்டார் அறிவிக்கப் போகும் புது பொது அமைப்பின் தொடக்க விழா அறிவிப்பு என்று அடித்துச் சொல்கிறார்கள்.

அடுத்ததாக ரஜினி டி.வி.! தனது அரசியல் வாழ்க்கைக்கும் சரி, சினிமா வாழ்க்கைக்கும் சரி தனி சேனல் மிகவும் அவசியம் என்று நினைக்கிறாராம் ரஜினி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டு சேனல் தொடங்குவது குதிரைக் கொம்பான விஷயம் என்பதை வைகோ, விஜயகாந்த் ஆகியோர் படும்பாட்டின் மூலம் நன்றாகவே உணர்ந்திருக்கும் ரஜினி, இப்போதே அந்தத் தனி சேனலை தொடங்கும் பணியில் நேரடியாக ஈடுபடப் போகிறாராம்.

மத்தியிலும் மாநிலத்திலும் தனக்கு சுமுகமான சூழல் இருக்கும் போதே சேனல் அனுமதியை வாங்கிவிடுவதில் ரஜினி முனைப்பாக இருப்பதாகவும் கேள்வி.

இதற்காக கலைஞர், ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களை தனது பொது அமைப்பு அறிவிப்புக்குப் பிறகு சந்திக்க முடிவு செய்திருக்கிறாராம் ரஜினி.
ஹாலிவுட் சினிமா பட நிறுவனமான வார்னர் பிரதர்ஸுடன் இணைந்து ரஜினி மகள் சௌந்தர்யா, தொடர்ந்து தமிழ்ப்படங்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

நிர்வாக மேலாண்மையில் தன் மனைவி லதாவையே விஞ்சிய தன் அன்பு மகள் சௌந்தர்யாவிடமே ரஜினி டி.வி. நிர்வாகத்தையும் ஒப்படைக்கப் போகிறாராம் சூப்பர் ஸ்டார்.

தான் முழுமையாக அரசியலில் ஈடுபடுவதை இன்னும் சில வருடங்கள் தள்ளி வைத்துவிட்ட ரஜினி, அதுவரை சேனலில் புது அமைப்பு குறித்த செய்திகளையும் செயல்பாடுகளையும் ஒளிபரப்புச் செய்து அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் திட்டமிட்டிருக்கிறாராம்.தவிர, சௌந்தர்யா தனது படத் தயாரிப்பு குறித்த விஷயங்களையும் தான் தயாரிக்கும் படங்களைப் பற்றியும், தனது அப்பா நடித்து சூப்பர் ஹிட்டான படங்களையும் ரஜினி டி.வி.யின் நிகழ்ச்சிகளாக ஒளிபரப்ப இருக்கிறாராம்.

மேற்கண்ட தகவல்களையெல்லாம் உறுதிப்படுத்திக் கொண்ட மாவட்ட நிர்வாகிகள், குஷியோடு ரஜினி தங்களைச் சந்திக்கும் அந்தத் திருநாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சனி, 20 செப்டம்பர், 2008

அடுத்த குறி -சென்னை!!! ஷாக்கிங் ரிப்போர்ட்

ஐந்து இடங்களில் அரைமணி நேரத்தில் சுமார் இருபத்தைந்து பேரை காவு வாங்கிவிட்டது. இம்முறை டெல்லியில் அந்த பயங்கரம் நடந்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஜெய்ப்பூர் `பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் இப்போதுதான் குண்டு வெடிப்புகள் நடந்து பல உயிர்களைப் பறித்தன.

நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாக உள்ள அவலநிலை. மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலே பதவி விலக வேண்டும் என்று ஆளுங்கட்சியிலிருந்தே அதிருப்தி ஏற்படும் அளவுக்கு நிலைமை விபரீதமாகியுள்ளது.

குண்டுவெடிப்பு நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் மூளையாகச் செயல்பட்டு வந்தது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ என்று நமது அரசு அடித்துக் கூறியது. பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகாவது இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் குறையும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் டெல்லி சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது.

`ரா'(ஸி.கி.கீ)வில் பணியாற்றிய ஒரு மூத்த அதிகாரியை நாம் சந்தித்தோம். ``பாகிஸ்தானில் ஆட்சிகள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் அந்த நாட்டின் உளவுத்துறையின் ஐ.எஸ்.ஐ. நடவடிக்கை மாறாது. அது அளவிற்கு அதிகமாக வளர்ந்து விட்டது. அதை அந்நாட்டின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களே அடக்க முடியாது. உண்மையில் பாகிஸ்தானை ஆட்சி புரிவது அந்நாட்டின் ஐ.எஸ்.ஐ. தான்.

ஆப்கானிஸ்தானை எப்போது ரஷ்யா ஆக்கிரமித்ததோ அப்போதிலிருந்தே இந்த தீவிரவாதம் ஆரம்பமாகிவிட்டது. ரஷ்யா ஆப்கானிஸ்தானைப் பிடித்தவுடன் எங்கே இந்தியத் துணைக் கண்டத்தின் பிடியும் ரஷ்யாவிடம் சென்றுவிடுமோ என்று அஞ்சியது அமெரிக்கா.

அதனால் அமெரிக்கா, ரஷ்யாவின் பிடியிலிருந்த கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளின் சுதந்திரத்திற்கு உதவியது.ஜியாவுல் ஹக் பாகிஸ்தானின் அதிபராக இருந்த போது ஒரு தீவிர இஸ்லாமியராக தன்னை வெளிப்படுத்தினார். `சமஸ்தே இஸ்லாம்' என்ற அமைப்பை உருவாக்கினார்.

பாகிஸ்தானில் இருந்த பள்ளிவாசல்கள் போல் மூன்று மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக்கினார். பாமரர்கள் அங்கு போய் தொழும் போது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டது. பிறகு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீருக்கு அனுப்பிவைத்தார்.

அங்கு அவர்களுக்கு ஆறுமாதம் துப்பாக்கிச் சுடுதல், வெடிகுண்டு தயாரித்தல், வீசுதல் போன்ற பயிற்சிகளெல்லாம் கொடுக்கப்பட்டது. இதற்குப் பல்வேறு இஸ்லாமிய நாடுகள் பணம் கொடுத்து உதவியதோடு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யும் முழு ஆதரவு தந்தது. இவற்றுக்கும் மேலாக அமெரிக்கா அவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் கொடுத்து உதவியது.
இதன் பலன் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பாகிஸ்தானிலுள்ள ஒரு சிறு பிரிவு கொஞ்சம், கொஞ்சமாக தீவிரவாத பக்கம் திரும்ப ஆரம்பித்தது. அவை கராச்சி, லாகூர் போன்ற இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கின. இப்போது பரபரப்பாக பேசப்படும் `லஸ்கர்_ இ_தொய்பா' இயக்கத்தின் தலைநகரமே `லாகூர்' தான்!'' என்கிறார் அந்த மூத்த அதிகாரி.

லஸ்கர்-இ-தொய்பா, ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கு இரண்டு விதமான வேலைகள் கொடுக்கப்பட்டன என்கிறார் மற்றொரு அதிகாரி. ``ஒரு பிரிவு ஜம்மு காஷ்மீர் பிரச்னையை கிளப்பிக் கொண்டே இருப்பதும், இரண்டாவது பிரிவு இந்தியாவில் மற்ற பகுதிகளில் கலவரத்தைத் தூண்டுவதும் அவர்களது `மாஸ்டர் பிளான்'.

இதற்காக பயிற்சி பெற்ற 600 இளைஞர்களைத் தயார்படுத்தியது. அதில் 70 சதவிகிதம் பேர் பாகிஸ்தானியர்கள். 30 சதவிகிதம் பேர் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த இளைஞர்கள் நன்றாக மூளைச்சலவை செய்யப்பட்டு பத்துப் பேர் கொண்ட குழுவாக இந்தியாவிற்குள் நுழைய விடப்பட்டார்கள்.


பாதுகாப்பு போடப்படாத பனிமலைப் பகுதிகளில் அவர்கள் சாமர்த்தியமாக ஊடுருவினார்கள். அந்த இளைஞர்களுக்குச் சொல்லப்படும் மந்திரச் சொல் என்ன தெரியுமா? `ஜம்மு காஷ்மீர் நமது சொந்தம். அதைக் கைப்பற்ற வேண்டும். இந்தியா நமது முதல் எதிரி.'

முதலில் இவர்களுக்கு ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகளைக் கொடுத்து வந்தது ஐ.எஸ்.ஐ. இது பாகிஸ்தானின் வேலை என்பது `சட்'டென்று இந்தியாவும், பிற நாடுகளும் தெரிந்து கொண்டதால் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளுக்கு அமோனியம் நைட்ரைட், பொட்டாசியம் குளோரேட், ஜெலட்டின் வைத்து வெடிக்கச் செய்கிறார்கள். இதுதான் இவர்களின் சமீபகால செயல்முறை.'' என்கிறார் அந்த அதிகாரி.

``இந்தியாவைப் பொறுத்தவரை சமீபகாலமாக வெடிகுண்டுத் தாக்குதல் அனைத்தும் சிமி (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்)யின் ஒரு பிரிவான `ஜமாத் இஸ்லாமி-இ-ஹிந்த்'' என்கிறார் இந்திய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர். ``இந்த அமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை; தேசியவாதம் இந்த மூன்றுக்கும் எதிரி.

ஆனால் இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டதுதான் இந்தியா. இப்பொழுது தெரிகிறதா நம் மேல் ஏன் இந்தத் தீவிரவாதிகளுக்குக் கோபம் என்று? இவர்களுக்கென்று சில கட்டளைகள் வைத்திருக்கிறார்கள். அவை : `அல்லா ஒருவரே கடவுள். நபிகள் நாயகம் நமது தலைவர். குரான் நமது சட்டதிட்டம். ஜிகாத் தான் நமது வழி!

இந்த அமைப்பிற்கு வெளி நாட்டிலும், இஸ்லாமிய நாடுகளுடனும் தொடர்பு உண்டு. ஹவாலா மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது.'' என்கிறார் அவர்.

``இஸ்லாமிய மாணவர்களின் இயக்கமான சிமியிலிருந்து பிரிந்த ஓர் அமைப்புதான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தன் கைவரிசையைக் காட்டியது. இப்போது அதன் தொடர்ச்சியாக ஹைதராபாத், ஜெய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத், டெல்லி என தங்கள் கோரத் தாண்டவத்தை நடத்தி இருக்கின்றன.

இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமிக்கும் பாகிஸ்தான் உளவுத்துறை தனது முழு உதவிகளையும் செய்து வருகிறது என்பதுதான் வேதனை என்கிறார் அதே அதிகாரி. ``முஷாரஃப் பாகிஸ்தானின் அதிபராக இருக்கும் போது `தீவிரவாத இயக்கங்கள் உங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் பயிற்சி பெற்று வருகிறார்கள்' என்று நமது உளவுத்துறை சொன்னால்,

`அப்படியா உடனே அதனை தடுத்து, ஒடுக்கி விடுகிறேன்' என்று சொல்லிவிட்டு முஷாரஃப் அந்தத் தீவிரவாதிகளின் முகாமை வேறொரு இடத்திற்கு புத்திசாலித்தனமாக மாற்றிவிடுவதாகச் சொல்வார் என நீண்ட மௌனத்திற்குப்பின் ஆரம்பித்தார் ஒரு பெண் அதிகாரி.

``பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகள் தற்போது தனது முழு கவனத்தையும், தென் இந்தியாவை குறிப்பாக சென்னையை நோக்கிக் குறி வைத்துள்ளன'' என்று ஒரு திடுக்கிடும் தகவலைக் கூறியவர்,

``இந்தியா உலகத்தில் வளர்ந்து வரும் முக்கிய நாடுகளில் ஒன்று. அதன் வளர்ச்சியை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். ஹைதராபாத், பெங்களூர், சென்னை இந்த மூன்று இடங்களில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. போதாக்குறைக்கு தங்கள் மதத்திற்கும் கொள்கைக்கும் எதிரான அமெரிக்காவோடு தொடர்பு வைத்திருக்கிறது. அதை ஆட்டம் காண வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறார்கள்'' என்கிறார் அவர் அழுத்தமாக.

தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றால் இப்போது இருக்கிற இந்தியச் சட்டம் பயன்படாது. `பொடா' போன்ற கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தால்தான் இந்த தீவிரவாதிகளின் கொட்டம் அடங்கும் என்கிறார்கள் நாம் சந்தித்த அதிகாரிகள் அனைவரும் ஒரே குரலில்.

மத்திய அரசு என்ன செய்யப் போகிறது!? அரசியல், சொந்த லாப நஷ்ட கணக்குகள் கட்சியைக் காப்பாற்றலாம். ஆனால் நாட்டைக் காப்பாற்ற முடியாது. இரும்புக்கரம் கொண்டு தீவிரவாதக் கும்பலை விரட்டியடிக்க வேண்டிய நேரமிது!

கெட்டு சீரழியும் தமிழ் கலாசாரம் !!-பகீர் ரிப்போர்ட்

வேளச்சேரி அபார்ட்மெண்ட். பத்தாவது தளம். டி.வி.யின் மெகா ஸ்கிரீனில் இரைச்சலாய் ஹாலிவுட் நடிகர்கள் சண்டைபோட்டுக் கொண்டிருக் கிறார்கள். ``அரேன்ஜ் பண்ணிட்டியா ராகுல்...'' சோப்புநுரையுடன் பாத்ரூமிலிருந்து குரல் கொடுக்கிறாள் அந்த இளம்பெண்.

``ம்... சொல்லியாச்சு லேகா. இப்போ வந்துடும்.'' லேப்டாப்பை தட்டிக் கொண்டே `கோக்' உறிஞ்சுகிறான் அந்த மீசை மழித்த இளைஞன்.

``ஏண்டா வரும்போதே `காண்டம்ஸ்' வாங்கணும்னு தெரியாதா?'' ஃப்ரிட்ஜில் பீர் பாட்டில்களை எடுத்துக்கொண்டு விளையாட்டாக இன்னொருவன் அடிக்கப் பாய்கிறான்.

செல்போனில் தீவிரமாய்ப் பேசிக்கொண்டே கதவைத் திறக்கிறாள் நைட்டி அணிந்த இன்னொரு யுவதி. வெளியே வாட்ச்மேன் பல் தெரிய சிரிக்கிறார். காண்டம்ஸ் பாக்கெட்டுகள் கைமாறுகின்றன. அழுக்குப் பாக்கெட்டில் ஐநூறு ரூபாயை பத்திரப்படுத்துகிறார் அந்தக் கிழட்டு வாட்ச்மேன். கதவு சாத்தப்படுகிறது. கொண்டாட்டங்களுக்கு அறிகுறியாய் மெல்லியதாய் உள்ளே சில சில `கிளுகிளு' சப்தங்கள்.

சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. நாற்பதாயிரத்துக்கும் அதிகமான சம்பளம். ஃப்ரீயா இருக்கணும். முடிஞ்சவரை என்ஜாய் பண்ணணும். இரண்டு இளம்பெண்கள். கூடவே அலுவலக ஆண் நண்பர்கள். ஒன்றாகச் சேர்ந்து அபார்ட்மெண்ட்டில் `குடும்பம்' அமைக்கிறார்கள்.

லிவிங் டூகெதர். `தாலியே தேவையில்ல... நீதான் எம் பொஞ்சாதி'னு ஒரு பாட்டு வருமே. அதே சங்கதிதான். எதையும் ருசி பார்க்கத் துடிக்கும் சாஃப்ட்வேர் ஊழியர்களின் இந்த `ஜஸ்ட் லைக் தட்' செக்ஸ் வாழ்க்கைதான் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு.

``லேடீஸ் ஹாஸ்டல் செம போர். நமக்குன்னு டி.வி. வச்சுக்க முடியாது. சத்தமா பாட்டுக் கேட்க முடியாது. `லேப்டாப்' மாதிரியான காஸ்ட்லி பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்ல.

நைட்டுல சீக்கிரமா வந்துரணும், பாய் ஃப்ரெண்ட்ஸுங்க பார்க்க வரக்கூடாதுனு ஏகப்பட்ட கண்டிஷன். முப்பதாயிரம் சம்பளம் வாங்கி எதுக்காக இப்படி கஷ்டப்படணும்? ஸோ... அபார்ட்மெண்ட்தான் வசதி. இருபதாயிரம் வாடகை.

நாலு லட்சம் அட்வான்ஸ். ஆபிஸ் நண்பர்களோட ஷேர் பண்ணிகிட்டு ஒண்ணா தங்குறோம். இதுல தப்பு என்ன இருக்கு?'' என்கிறார் பூரணி. பிரபல ஐ.டி கம்பெனிகளின் சாஃப்ட்வேர் டெவலப்பர்.

வேளச்சேரியில் கொத்துக் கொத்தாய் நிறைய அடுக்குமாடிக் கட்டங்கள். அதிகபட்சமாய் பதினைந்து மாடிகள் கூட உண்டு. அங்குள்ள ஒரு அபார்ட்மெண்டில் சுகந்திக்கு துணி துவைப்பது, வீடு கழுவுவது என வீட்டு வேலை. ``எல்லாமே பெரிய எடத்துப் புள்ளைங்க சார்... பொண்ணுங்க. பசங்கனு கும்பலா குடும்பம் நடத்திக் கிட்டிருக்காங்க'' என்கிறார் அதிர்ச்சியாக.

பெரும்பாலும் இந்த சாஃப்ட்வேர் குடும்பங்கள் பத்தாவது மாடியைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வளவு சீக்கிரம் யாருமே வந்து பார்க்க சிரமப்படுகிற உயரம் என்பதால் இந்த வசதி. பக்கத்து குடும்பங்களுக்கு பகலில் வேலையென்றால் இவர்களின் வேலையோ இரவு நேரத்தில். இந்த ஷிஃப்ட் முறையும் சாஃப்ட்வேர் ஊழியர்களின் சல்லாபங்களுக்கு நிறையவே கை கொடுக்கிறது.

வீட்டு உரிமையாளர்கள் வெகுதூரத்தில் இருக்கிறார்கள். மாத வாடகை இருபதாயிரமாக சுலபத்தில் கிடைப்பதால் பிரச்னைகள் ஏதுமில்லை.
வீடு பார்ப்பதில்தான் இந்த `லிவிங் டூகெதர்' வில்லங்கம் முளைக்கிறதா என்றால் அதைத் தவிரவும் வேறு காரணங்களைச் சொல்லி நம்மை மிரள வைக்கிறார்கள்.

``எங்கள்ல பல பேருக்கு ட்ரிங்ஸ் சாப்பிடுற பழக்கம் இருக்கு. இதுல பொண்ணுங்களும் தண்ணி சாப்பிடுவாங்க. பாய் ஃப்ரெண்ட்ஸ் வச்சுக்கறது, கேர்ள் ஃப்ரெண்ட்ஸோட `டேட்டிங்' போறதுனு எல்லாமே உண்டு. தனியா இருந்தா எதையுமே அனுபவிக்க முடியாது. அதனாலதான் இந்த அபார்ட்மெண்ட் டெக்னிக்.

வீக் என்ட் சமயத்துல யாரும், யாரையும் கூட்டி வரலாம். பார்ட்டி வைச்சுப்போம். உங்ககூட என்னால தாலிகட்டி வாழ முடியுமான்னு தோணலை. இதுவே சந்தோஷமா இருக்கு. இப்படியே கொஞ்ச நாளைக்கு இருப்போம்''னு பொண்ணுங்களே சொல்றாங்க.

ஸோ... அவளுக்கு கல்யாணம் ஆகுற வரை அல்லது எனக்கு பொண்ணு பார்க்குற வரையில ஒன்னா இருக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கோம்.'' கூலாகச் சொல்கிறார் கௌதம்.

மதுரையைச் சேர்ந்த வைத்தியநாதனை இந்தக் கலாச்சாரம் ரொம்பவே பாதித்திருக்கிறது. காரணம் அவரது இளைய பெண் அனுஷா. அனுஷாவுக்கு சென்னை சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. திடுதிப்பென்று மகளைப் பார்க்க சென்னையில் உள்ள வேளச்சேரிக்கு போயிருக்கிறார் அந்த அன்பு அப்பா. வீட்டிற்குள் பீர் பாட்டில்கள் உருண்டு கிடக்கின்றன. ஒரு இளைஞன் அரை மயக்கத்தில் இடுப்பிலிருந்து நழுவின பேண்ட் சகிதமாய் கட்டிலில். அப்பா முகத்தில் அதிர்ச்சி.

அனுஷாவிடம் பதட்டம். ``நம்ம சுகுணாவோட தம்பிதான். இவன்... இண்டர்வியூக்காக வந்திருக்கான்...'' ``பார்த்து இருந்துக்கோ அனு...'' அவ்வளவுதான். அவர் புறப்பட்டு விட்டார். அதே வருடத்தின் இறுதியில் ``அப்பா எனக்கு கல்யாண மாயிடுச்சு...'' என்று ஒரு இளைஞனுடன் ஜோடியாக வந்து நின்றிருக்கிறாள் அந்த செல்ல மகள். முன்பு, கட்டிலில் அரை குறையாய்க் கிடந்த அதே இளைஞன்தான் மாப்பிள்ளை.

``லிவிங் டூ கெதர்' விஷயத்துல நடவடிக்கை எடுக்க வாய்ப்பே இல்ல. ரெண்டு பேருமே மேஜர். இது தவிர பணிமாற்றம், கல்யாணம் நடக்கிற வரை என சில `லிமிட்ஸ்' வைச்சுகிட்டு ஒண்ணா இருக்காங்க. ப்ளாக்மெயில் நடக்கும் போதுதான் இதுல நிறையப் பிரச்னைகள் ஏற்படுது. `பொஸஸிவ்' காரணமா இதுல நடக்குற தற்கொலைகளும் அதிகம்'' என்கிறார் அடையாறு துணை கமிஷனர் ஷ்ரீதர்..

டாக்டர் ஷாலினி (மனநல மருத்துவர்)
ஆண்களும் பெண்களும் கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதர்&ஆக இருப்பது இப்போது பெருகிவர ஆரம்பித்துவிட்டது. இதற்கு மூலகாரணமாக இருப்பது ஆண்கள்தான்.

இந்த விஷயத்தில் பெண் மூளைச்சலவை செய்யப்படுகிறார். தன்னோடு நெருங்கிப் பழகும் ஒரு பெண்ணிடம் ``எனக்குக் கல்யாணத்தில் நம்பிக்கையில்லை. உன்னிடம் நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன். தாலி என்கிற சம்பிரதாயமும் கல்யாணம் என்ற சடங்கும் நமக்கு எதற்கு? என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா? நம்மால் ஒரே வீட்டில் எந்தத் தப்பும் செய்யாமல் நண்பர்களாக வாழ முடியும்'' என்றெல்லாம் பேசி சம்மதம் பெற்று விடுகிறார்கள்.

அதற்குப்பின் ஆடம்பர வாழ்க்கை மோகத்தில் பெண்கள் தண்ணி அடிப்பதும், பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்வதும், பின்னர் இன்னொரு நண்பர் கிடைத்ததும் பழைய ஆண்/பெண் நண்பர்களைக் கழற்றி விடுவதும் சகஜமாகி விடுகிறது

வெள்ளி, 19 செப்டம்பர், 2008

மதுரை வரலாற்று தகவல்கள் !!


மதுரை (ஆங்கிலம்:Madurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். மதுரை நகரம் 2500 ஆண்டுகள் பழமையானது

புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 9.93° N 78.12° E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 136 மீட்டர் (446 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வரலாறு

தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய இடம் மதுரைக்கு உண்டு. முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தது இம்மதுரை நகரம்.

பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன.

மதுரை ஆட்சியாளர்களின் காலவரிசை

வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும்போது மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம் தான் மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கிறது.

கிபி 1 முதல் 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் வசமும், 5 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள் வசமும் இருந்த மதுரை 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் கொடுங்கோல் வசம் இருந்தது.

விஜயநகரப் பேரரசு மூலம் அந்த முஸ்லிம் ஆட்சி முறியடிக்கப்பட்டு 1520ல் விஜயநகரர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நாயக்கர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்கள் ஆட்சியாண்டில் 1623முதல் 1659வரையிலான மன்னர் திருமலையின் ஆட்சி மீனாட்சியம்மன் கோயிலுக்கும் மதுரைக்கும் ஒரு பொற்காலமாக இருந்திருக்கிறது. 1736ல் நாயக்கர்கள் வீழ்ச்சியுற, 1801ல் ஆங்கிலேயரிடம் சென்றது.

ஆங்கிலேயர்கள் இவ்விடத்தின் கலைப் பொருட்களை வளர்க்காவிட்டாலும், அழிக்கவில்லை.
தற்போதைய மதுரையின் மையப்பகுதி பெரும்பாலும் நாயக்கர்களால் கட்டப்பட்டதாகும். கோயில், மன்னர் அரண்மனை நடுவிலிருக்க, அதனைச் சுற்றி வீதிகளையும் குடியிருப்புகளையும் அமைக்கும், இந்து நகர அமைப்பான "சதுர மண்டல முறை" மதுரையில் பின்பற்றப்பட்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 922,913 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுரை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கல்வி
இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனங்களுல் சில மதுரையில் அமைந்துள்ளன. தியாகராசர் கலைக்கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, மதுரைக்கல்லூரி, போன்றவை நகரின் முக்கிய கல்லூரிகளாகும். யாதவர் கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி ஆகியவையும் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளன.

இது தவிர மதுரை மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி, வேளாண் கல்லூரியும் நகருக்கு பெருமை சேர்க்கின்றன. நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள நாடார் மகாஜன சங்கம் சா.வெள்ளைச்சாமி நாடார். கல்லூரி 1965ம் ஆண்டு தொடங்கப்பட்டது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1966ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

லேடி டோக் கல்லூரி, பாத்திமா கல்லூரி, மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி, இ.எம்.ஜி. யாதவர் பெண்கள் கல்லூரி ஆகியவை மதுரையில் அமைந்திருக்கும் பெண்கள் கல்லூரிகளாகும்.

இந்நகரில் இருக்கும் சேதுபதி மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
மதுரையில் புகழ் பெற்ற பொறியியல் கல்லூரி தியாகராஜர் பொறியியல் கல்லூரி

போக்குவரத்து
சென்னை-நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்நகரம், தென்னிந்திய இரயில்வேயின் மிக முக்கிய சந்திப்பாகும். அதனுடன் நாட்டின் மற்ற முக்கிய நகரங்களை இணைக்கும் விமான நிலையமும் உண்டு.

சுற்றுலா
மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் தெப்பக்குளம், காந்தி அரண்மனை என்று சுற்றுலா பயணிகளைக் கவரும் அம்சங்கள் இந்நகரில் நிறைய உண்டு. தூங்கா நகரமான மதுரையிலிருந்து அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், காளையார் கோயில், புதுக்கோட்டை, ஆவுடையார்கோயில், இராமேஸ்வரம், குமுளி (தேக்கடி), கொடைக்கானல், தேனி(சுருளி), திருநெல்வேலி என்று சரித்திர மற்றும் பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் உண்டு

கேரளா முதலிடம் -நாளிதழ்கள், புத்தகங்கள் படிப்பதில்

நாளிதழ்கள், புத்தகங்கள் படிப்பதில் கேரளா முதலிடம்

நாட்டிலேயே உயர்ந்த கல்வியறிவு விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ள கேரள மாநிலம், செய்தித்தாள்கள், வார இதழ்கள், புத்தகங்கள் படிப்பதிலும் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

கேரள மாநில மக்களில் 90 சதவீதம் பேர் செய்தித் தாள்கள், புத்தகங்கள், வார, மாத இதழ்களைப் படிக்கின்றனராம்.இதுதொடர்பாக கேரள மாநில நூலக கவுன்சில் சர்வே ஒன்றை நடத்தியது.

இந்த கருத்துக் கணிப்பில் 15 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இவர்களில் 90 சதவீதம் பேர் தினசரிகளையும், பிற நூல்கள், புத்தகங்களையும் தொடர்ந்து படிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், டிவி மூலம் வரும் பல்வேறு உப்புச் சப்பில்லாத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை என்றும் ஆச்சரியத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஐந்து மாநகராட்சிள், 53 நகராட்சிகள், 63 தாலுகாக்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துக்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 900 குடும்பங்கள் கலந்து கொண்டன.7 வயதுடையவர்களில் 7.9 சதவீதம் பேரே படிப்பறிவற்றவர்களாக உள்ளனர்.ஆண்களில் 91.62 சதவீதம் பேர் படிப்பறிவுடையவர்களாக உள்ளனர்.

6.48 சதவீதம் பேரே படிப்பறிவற்றவர்கள்.பெண்களின் படிப்பறிவு விகிதம் 88.66 சதவீதம் ஆகும். படிப்பறிவற்றவர்களின் எண்ணிக்கை 9.41 சதவீதமாகும்.

படிக்கும் பழக்கத்தில் முதலிடத்தில் இருப்பது பத்தனம்திட்டா (95%)மாவட்டமாகும். எர்ணாகுளம் மாவட்டம் (94%) 2வது இடத்தில் உள்ளது. வயநாடு மாவட்டம்தான் கடைசி இடத்தில் உள்ளது. அதன் விகிதாச்சாரம் - 81.34 சதவீதமாகும்

வியாழன், 18 செப்டம்பர், 2008

ஒசாமா பின் லேடன்- வாழ்கை குறிப்பு !!

ஒசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லேடன் (அரபு மொழி: أسامة بن محمد بن عوض بن لادن, (பிறப்பு மார்ச் 10, 1957[1])

பொதுவாக ஒசாமா பின் லேடன் அல்லது உசாமா பின் லேடன் என் அறியப்படும் இவர் சவூதி அரேபியாவில் பிறந்த இசுலாமிய போராளியாவர். இவர் அல் கைடாவை தொடக்கியவராக கருதப்படுகிறார்.
இவர் செல்வந்தக் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் ஏனைய இசுலாமிய போராளிகளுடன் சேர்ந்து 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இசுரேலுக்கான தமது ஆதரவை விலக்கி இசுலாமிய நாடுகளில் இருந்து தமது படையணிகளை வாபஸ் பெறுமளவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிகளையும் அதன் இராணுவத்தினரையும் கொலை செய்யுமாறு முஸ்லிம்களை வேண்டி இரண்டு படாவா எனப்படும் அறிக்கைகளை விடுத்தார்.
ஒசாமாவின் தந்தை முகம்மது பின் லேடனுக்கு மொத்தம் எத்தனைப் பிள்ளைகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன எனினும் சில தகவல்களின் படி அவர் மொத்தம் 55 குழந்தைகளுக்கு தந்தை என் கூறப்படுகிறது.

அவர் மொத்த 22 பெண்களை மணந்துள்ளார் ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இசுலாமிய சட்டப்படி 4 மனைவிகளை மட்டுமே கொண்டிருந்தார். ஒசாமா இவரது 10 வது மனைவி அமிதியா அல் அட்டாஸ் என்பவருக்கு ஒரே மகனாக பிறந்த்தார். சில கணிப்பீடுகளின் படி ஓசாமா அவரது தந்தைக்கு 7 வது மகனாவார்

இவரது படிப்பை குறித்து பல்வேறு தகவல்கள் உள்ளன .இவர் வணிக மேலாண்மை மற்றும் கட்டிடவியல் படித்தவர் என்றும் கூறப்படுகிறது.

தன்னுடைய பதினேழாவது வயதில் நஜ்வா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.மேலும் நான்கு பெண்களை திருமணம் செய்து இருவரை விவாகரத்தும் செய்தார் . ஏறக்குறைய பனிரெண்டு முதல் இருபத்தி நான்கு பிள்ளைகளுக்கு தந்தையாக இவர் இருக்ககூடும் என தகவல் .

ஷரியத் சட்ட திட்டங்களை மீண்டும் இஸ்லாமிய மதத்தில் கொண்டுவருவதை தீவிரமாக ஆதரித்தார் !

ஆப்கான் மட்டுமே உலகத்தில் முழுமையான முஸ்லீம் நாடு என்று அறிவித்தார் !

அமெரிக்காவும் ,இஸ்ரேலும் இஸ்லாத்தின் எதிரிகள் என்றும் அவர்களை அழிப்பதே இஸ்லாத்திற்கு செய்யும் தொண்டு என்றும் கருதியேஅல்கைதா இயக்கத்தை தொடங்கினார்சூடான்,எகிப்து, ஆப்கான் என அல்கைதா இயக்கத்தின் வேர்கள் பரவி உள்ளன.

அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தகர்த்து .அல்கைதாவின் கோர முகத்தை உலகுக்கு உணர்த்தினர்

இவரை பிடிக்க அமெரிக்கா பலவாராக முயற்சித்து கொண்டிருக்கிறது.....

புதன், 17 செப்டம்பர், 2008

உளவு துறையா ? உறங்கும் துறையா !!.டெல்லி குண்டு வெடிப்பு

கடந்த சனிக்கிழமை நடந்த டெல்லி குண்டு வெடிப்புகளில் அதிக பாதிப்பு இருந்த இடம் கரோல் பாக். பதின்மூன்று உயிர்ப்பலிகளையும், நாற்பது பேருக்கு உயிர்ப்பலியைவிடக் கொடுமையான காயங்களையும் ஏற்படுத்திய ஆறு குண்டுகளில் இரண்டு இங்கே வெடித்ததுதான். வெடிக்காத இன்னும் மூன்று குண்டுகளை கன்னாட் ப்ளேஸிலும் இந்தியா கேட் பகுதியிலும் கைப்பற்றியிருக்கிறார்கள்.

இறந்து போனவர்கள் மொத்தம் இருபது பேர். இருந்து, பயந்து சாகிறவர்கள் நூறு கோடி.

பெங்களூரு, அகமதாபாத்தைத் தொடர்ந்து எப்படியும் டெல்லிதான் அடுத்த குறி என்று கடந்த மாதமே எதிர்பார்த்தார்கள். சுதந்திர தின விழா சமயத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று எண்ணி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போதெல்லாம் ஒன்றுமில்லை. மிக சாமர்த்தியமாக, யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு சாதுவான செப்டம்பர் சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்து, நடமாட்டம் அதிகமுள்ள மூன்று வர்த்தகப் பிராந்தியங்களில் வெடித்திருக்கிறார்கள்.

கடந்த சனிக்கிழமை மாலை 6.15-க்கு ஆரம்பித்து, அடுத்த முக்கால் மணி நேரத்தில் தலைநகரத்தைத் தலைகீழ் நகரமாகப் புரட்டிப் போட்டுவிட்டது, இந்தத் தொடர் குண்டு வெடிப்பு.

யார் காரணம்?

இந்தியன் முஜாஹிதீன் என்கிற பெயரை சமீபகாலத்தில் அடிக்கடி கேள்விப்படுகிறோம். லஷ்கர் ஈ தொய்பாவின் இந்திய ஏஜெண்ட் அமைப்பான சிமிக்கு ஒரு குட்டித்தம்பியாக அவதரித்திருக்கும் இயக்கம் என்று சொல்லப்படுகிறது. அகமதாபாத், பெங்களூரு, அதற்கு முன்னால் ஜெய்ப்பூர் என்று நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளின் பின்னணியில் தாங்கள்தான் செயல்பட்டோம் என்று சமர்த்தாக இ_மெயில் அனுப்புகிற - இதுவரை யாரென்று தெரியாத அமைப்பு இது. பெரும்பாலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இயக்கம் என்றும், சிமியின் உத்தரப்பிரதேசக் கிளையில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் ஒரு சில தகவல்கள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன.

அது அவ்வளவு முக்கியமில்லை. குறிப்பாக இந்தத் தருணத்தில். நமது முக்கியக் கவலை, இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு இவர்கள்தான் காரணமா? ஏன் நமது உளவுத்துறையைக் காரணம் சொல்லக்கூடாது?
விஷயம் இருக்கிறது. குஜராத் குண்டுவெடிப்புகளின் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டவர்களுள் அபூ பஷீர் என்கிற ஒருவன் மிக முக்கியமானவன். இந்தியன் முஜாஹிதீன், சிமி இயக்கங்களுடன் சம்பந்தப்பட்டவன்,
அவர்களுடைய ஆள் என்று சொல்லி போலீஸ் அவனைக் கைது செய்து உள்ளே வைத்திருக்கிறது. விசாரணையில் அபூ பஷீர் வெளியிட்ட சில கருத்துகள் முக்கியமானவை. `அடுத்த குறி தலைநகர் டெல்லிதான். எல்லா ஏற்பாடுகளும் தயார். உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.'

இது அவன் சொன்னது. பத்து நாட்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. பத்து நாட்களுக்கு முன்னர் டெல்லிக்குச் சென்ற குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, இந்த விசாரணை விவரங்களையும் டெல்லிக்கு வரவிருக்கும் ஆபத்து குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் தெரிவித்திருக்கிறார். அதாவது எச்சரிக்கை செய்திருக்கிறார்.
பிரதமர் இந்தத் தகவலை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வெறுமனே எப்போதும்போல் சோனியா தரிசனத்துக்குப் போயிருப்பார் என்று சொல்லிவிட முடியாது. நிச்சயம் உள்துறை வசமும் உளவுத்துறை வசமும் தெரிவித்திருப்பார்.

பத்து நாட்களுக்கு முன்பாக ஒரு தகவல் கிடைத்தும் பைசா பிரயோஜனமில்லை என்றால், அப்புறம் உளவுத்துறை எதற்கு? உப்புமா கிண்டி சாப்பிடுவதற்கா?

இந்தியாவின் அபாயம் இந்தத் தீவிரவாத இயக்கங்களல்ல. இவர்களை நோக்கி ஓரடிகூட எடுத்து வைக்க முடியாத நமது உளவுத்துறைதான்.இதற்கு முன் நடந்த எந்த ஒரு தொடர்குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியையும் இதுவரை நாம் முழுமையாக அலசி ஆராய்ந்து தீர்வு கண்டதில்லை. சம்பந்தப்பட்ட இயக்கங்களே தாங்கள் யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டால் உண்டு. அப்படியும் கிட்டே நெருங்கியதில்லை. இவன்தான் செய்தது என்று யாரையும் சந்தேகத்துக்கு இடமின்றிக் கைது செய்ததில்லை. எல்லாம் சந்தேகத்தின் பேரில் நிகழ்த்தப்பட்ட கைதுகள்தாம்.

டிசம்பர் 13, 2001-ல் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஆரம்பித்து இன்றுவரை இதுதான் நிலைமை. முஹம்மது அஃப்சல் மாதிரி யாராவது முன்னாள் காஷ்மீர் போராளி கிடைத்தால் பிடித்துப் போட்டு, கேசை முடித்துவிடுவதில்தான் ஆர்வம் காட்டப்படுகிறதே தவிர, உருப்படியாக ஒன்றுமில்லை.

என்ன செய்கிறது உளவுத்துறை? ஏன் இந்தக் கும்பகர்ணத் தூக்கம்?
விசாரித்தால் டிபார்ட்மெண்டே கட்சிகளையும் எம்.பி.க்களையும் கவனிக்கப் போயிருப்பதாகத் தெரியவருகிறது. மாதக்கணக்காக, வருடக்கணக்காக இதே வேலைதான். உள்நாட்டுப் பாதுகாப்பின் பொருட்டு இயங்கும் ஐ.பி. என்கிற இண்டலிஜென்ஸ் ப்யூரோவின் அத்தனை ஆபீஸர்களும் ஊழியர்களும் மத்திய அரசின் எடுபிடிகளாகத்தான் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தலைநகரில் நிகழ்ந்த குதிரை பேரத் திருவிழா சமயம் இவர்களுக்கெல்லாம் இரவு பகல் பாராத டியூட்டி என்கிறார்கள்.
செய்ய வேண்டியதுதான். தப்பில்லை. அதே சமயம் தங்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் எதற்காக என்று எப்போதாவது சற்று யோசிக்கலாம். அதுவும் தப்பில்லை.


ஐ.பி.யின் பணிகள் மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்டவை. ஹாம் ரேடியோ என்று அழைக்கப்படும் அமெச்சூர் ரேடியோ அலைவரிசைகளைக் கண்காணிப்பது இவர்களின் மிக முக்கியமான பணி. குறிப்பாக எல்லைப்புற மாகாணங்களில் இந்த ரேடியோ அலைவரிசைக் கண்காணிப்பு எப்போதும் மிகத் தீவிரமாக இருக்கும். காரணத்தை விளக்க வேண்டியதில்லை அல்லவா? தீவிரவாதப் பிரச்னை.

அடுத்தபடியாக புதிதாக உள்நாட்டில் யார் எங்கே பதவியேற்றாலும் அவர்களுக்கான செக்யூரிட்டி க்ளியரன்ஸ் வழங்குவதும் ஐ.பி.யின் பணிதான். பதவிக்கு வருபவரின் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்வதில் தொடங்கி, அவரது பின்னணி, முன்னணி விவரங்கள், ஆதரவாளர்கள், எதிரிகள் பற்றிய விவரங்கள், அவர் எத்தனை பர்செண்ட் அபாயகரமானவர், அல்லது நம்பக்கூடியவர், கட்சிமாறியா, கேப்மாரியா என்றெல்லாம் அலசி ஆராய்ந்து, அன்னார் பதவியேற்பதற்கு உரிய சூழல்தானா, தாக்குப்பிடிப்பாரா, என்ன ஆவார், ஏது ஆவார் என்றெல்லாம் ரிப்போர்ட் எழுதுவார்கள். ஒன்றும் பிரச்னையில்லை, பதவி ஏற்கலாம் என்று ஐ.பி. சொன்னால்தான் காரியம் நடக்கும். அமைச்சர்கள், உயரதிகாரிகள், நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் என்று இந்தக் கண்காணிப்பு வட்டத்துக்குள் வருபவர்கள் ஆயிரக்கணக்கானோர்.

அடுத்த பணி, தாம் பேசுவது தெரியாமல் மீடியாவுடன் பேசுவது. மக்களுக்கு இன்ன தகவல் போய்ச் சேரவேண்டும் என்று மத்திய அரசு சொல்லும் தகவல்களை உரிய முறையில் மீடியா வழியே மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது ஐ.பி.தான். சிக்கல் மிகுந்த, கலவரம் நிறைந்த தருணங்களில் வெளிப்படையாகவும் பேசுவார்கள்.

இதெல்லாம் தவிர, ஒரு நாளைக்கு சுமார் ஏழாயிரம் முதல் ஒன்பதாயிரம் கடிதங்களை உடைத்துப் படித்துப் பார்ப்பதும் இவர்களுடைய முக்கியப் பணிகளுள் ஒன்று. இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடப்பதல்ல. தேசம் முழுதும் அனைத்து மாநிலங்களிலும் உண்டு. இதன் தொடர்ச்சிதான் டெலிபோன் ஒட்டுக்கேட்பு வைபவங்களும். அதற்கெல்லாம் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் திரட்டும் தகவல்களைத் தொகுத்து, உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த தெளிவான அறிக்கைகள் தயாரிப்பது, அதை உள்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வைப்பது என்பதுதான் ஐ.பி.க்கு நிர்ணயிக்கப்பட்ட பணி. இந்திய - சீன யுத்தத்துக்குப் பிறகு ஸிகிகீ என்று வெளிநாட்டுப் புலனாய்வு ஏஜென்சி தனியே பிரிக்கப்பட்டபின் ஐ.பி.க்கு இருக்கும் பணி இதுதான்.

மாநில போலீஸ், பிராந்திய ராணுவ முகாம்களுடன் ரெகுலரான தொடர்பு வைத்துக்கொண்டு ஆங்காங்கே நிலவரங்களை ஆராய்வது, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வது, மாநில போலீஸுடன் எப்போதும் சுமுக உறவு பேணுவது, சந்தேக கேஸ்களை தொடர்ந்து கண்காணிப்பது, இயக்கங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், ரகசியக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்களைக் கவனிப்பது, கூடப்போய் பேச்சுக்கொடுத்து உண்மையறிவது என்று பல ஜோலிகள் இவர்களுக்கு உண்டு.

நமது கெட்ட நேரம், உள்நாட்டில் குழப்பம் விளைவிக்கும் அத்தனை தீவிரவாத இயக்கங்களும் வெளிநாட்டு இயக்கங்களாகவோ, அவர்களது பினாமிகளாகவோ இருப்பதனால் ஐ.பி., `ரா'வுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகிறது.

இன்றைய தேதியில் `ரா' எனப்படும் ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்கின் தலைபோகிற வேலை என்பது காஷ்மீர் இயக்கங்களைக் கண்காணிப்பதுதான். அதாவது பாகிஸ்தானைக் கவனிப்பது. சமயமிருந்தால் அருணாசலப் பிரதேசத்துப் பக்கம் கொஞ்சம் சீனாவை முன்வைத்து வேலை பார்ப்பார்கள். அப்புறம் பங்களாதேஷைக் கொஞ்சம் கவனிப்பது. அவர்களுக்கு வேறு பெரிய ஜோலி கிடையாது.

ஆனால் இதற்கே மூக்கால் அழுது கொண்டிருக்கிறார்கள். ராவின் இன்றைய மிக முக்கியமான உயர் அதிகாரி என்பவர், அலுவலகத்துக்கே பெரும்பாலும் வராதவர் என்கிறார்கள். அவரைப் பார்க்க வேண்டுமானால் கோல்ஃப் மைதானத்துக்குத்தான் போகவேண்டும். யாராவது இது பற்றிப் புகார் செய்தால் உடனே சோனியா காந்தி வீட்டுக்கு ஓடிப்போய் காலைக் கையைப் பிடித்து கெஞ்சிக் கூத்தாடி, தப்பித்துத் திரும்பிவிடுவார்... இப்படிப் போகிறது கதை. கேட்டால், தனக்கு உடம்பு சரியில்லை என்றும் பணியிலிருந்து விடுவித்துவிடும்படி கேட்டிருப்பதாகவும் அவர் சொல்லிவிடுவாராம்.

இந்நிலையில் இந்தியாவில் செயல்படும் தீவிரவாத முஸ்லிம் இயக்கங்களைப் பற்றிய தகவல் சேகரிப்பது, பின்தொடர்வது, சுற்றி வளைப்பது போன்ற காரியங்களை ராவின் ஒத்துழைப்பில்லாமல் ஐ.பி.யால் செய்துவிட முடியாது. ஏனெனில் இங்கு நிகழ்த்தப்படும் எந்த ஒரு தாக்குதலும் உள்ளூரில் தீர்மானிக்கப்படுவதே இல்லை. பெரும்பாலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் சிந்தனையில் உதிக்கிற திட்டங்கள் இவை. சில சமயம் பங்களாதேஷ் உளவு அமைப்பான டி.ஜி.எஃப்.ஐ (Directorate General of Forces Intelligence) தீர்மானிக்கும்.

பங்களாதேஷை நாம் நமது தோழமை தேசம் என்று சொல்லிவந்தாலும், டி.ஜி.எஃப்.ஐ.யைப் பொறுத்தவரை அவர்கள் அல் காயிதாவின் கைக்கூலிகளாகவே பல சமயம் செயல்பட்டு வருபவர்கள். பங்களாதேஷில் அதன் உளவுத்துறை தனியொரு அரசாங்கமே நடத்திக்கொண்டிருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் இயங்கும் உல்ஃபா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு இந்த உளவு அமைப்பில் நல்ல செல்வாக்கும் நட்பும் புரிந்துணர்வும் உண்டு. இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை மிகுதியாக உள்ள மாநிலங்களையும் பெரு நகரங்களையும் தேர்ந்தெடுத்து, அங்குள்ள ஏதேனுமொரு மசூதியை மையமாக வைத்து இங்குள்ள முஸ்லிம் இளைஞர்களை இழுத்து மூளைச் சலவை செய்து நாசகாரியங்களில் பயன்படுத்தும் பணியை ஆத்மசுத்தியுடன் செய்துவரும் அமைப்பு இது.
2007 ஆகஸ்ட் 26 அன்று ஹைதராபாத் லும்பினி பார்க்கில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதல்களும், அங்கே நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதும் நினைவிருக்கிறதா? பின்னணியில் இருந்தது பங்களாதேஷ் உளவு அமைப்புதான்.

எதற்கு இதெல்லாம்?

நமது உள்நாட்டுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டிய ஐ.பி., அந்தப் பணியில் பெரும்பாலும் நமது இன்னொரு உளவு அமைப்பான ராவின் உதவியைக் கோரியிருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா போன்ற தேசங்களிலிருந்து நமக்கு வரக்கூடிய அபாயங்களையும் ஆபத்துகளையும் கணித்து, தடுத்து நிறுத்தவேண்டிய ராவே சுகமாகத் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஐ.பி.யால் என்ன செய்ய முடியும்?

அதனால்தான் குண்டு வெடிக்கிறது. ஜெய்ப்பூர், பெங்களூரு, அகமதாபாத், டெல்லி. அடுத்து தமிழ்நாடு என்கிறார்கள்.

குண்டு வெடித்த கொஞ்ச நாளைக்கு சென்ட்ரல் ஸ்டேஷனில் போகிற - வருகிறவர்களையெல்லாம் துண்டை உருவித் தோலுரித்துப் பார்ப்பது, அப்புறம் மறந்துபோய் குதிரை பேர எம்.பிக்களுக்கு கோழி பிரியாணி வாங்கிக்கொண்டு போவது என்று இருந்தால் ஏன் வெடிக்காது?இந்தியன் முஜாஹிதீன் என்கிற அமைப்பைப் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும்.

டெல்லி குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் இதே அமைப்புதான் முன்னதாக பெங்களூரு, அகமதாபாத், அதற்கும் முன்னால் (நவம்பர் 2007) காசி மற்றும் ஃபைஸாபாத் நகரங்களில் வெடித்த குண்டுகளுக்கும் பொறுப்பேற்றது. அப்போது காவல் துறையினரும் உளவுத்துறையினரும் `இந்தியன் முஜாஹிதீன் என்று யாருமில்லை. போலீஸை திசைதிருப்புவதற்காக சிமியும் ஹர்கத் உல் ஜிஹாத் ஏ இஸ்லாமியும் இப்படிப் பெயர் மாறாட்டம் செய்கிறார்கள் என்று சொன்னார்கள். ஹர்கத் உல் ஜிஹாத் ஏ இஸ்லாமி என்கிற பெயர் நமக்கு அறிமுகமானதே அந்த ஆண்டு நிகழ்ந்த ஹைதராபாத் குண்டுவெடிப்பின்போதுதான்.

உண்மையில் இந்த இயக்கங்களின் பெயர்கள் அத்தனை முக்கியமே இல்லை. வெளிநாடுகளிலிருந்து இவர்களை இயக்குபவர்களை நாம் நன்கறிவோம். சிமி என்றாலும் `ஹர்க்கத்' என்றாலும் இந்தியன் முஜாஹிதீன் என்றாலும், வேறு என்ன பெயர் சொன்னாலும் அனைத்தும் கருவிகளின் பெயர்கள்தாம். இயக்குபவர்கள் வேறு. சமீபகாலமாக, இந்தியாவில் நிகழ்த்தப்படும் தாக்குதல்களுக்கு ஓர் இந்தியப் பெயர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துத்தான் `இந்தியன் முஜாஹிதீன்' என்று நாமகரணம் செய்திருக்கிறார்கள்.

இதற்கு முக்கியமான காரணம், நாம் தொடர்ந்து இந்தத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் அங்கிருந்து செயல்படும் அமைப்புகளையும் இயக்கங்களையும் குற்றம் சாட்டுவதுதான். `அதெல்லாம் இல்லை. இதெல்லாம் உங்கள் உள்ளூர் ஆட்களே செய்துவரும் செயல்கள்தாம், எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை' என்று சொல்வதன் பொருட்டு, ஓர் இந்தியப் பெயர்!

இந்தப் பெயர்களையும் இவற்றின் பின்னணியையும் அலசி ஆராய்ந்துகொண்டிருக்காமல் உளவுத்துறையால் உருப்படியாக ஏதாவது செய்ய முடியுமா? என்பதுதான் மிச்சமிருக்கும் ஒரே கேள்வி

இளைஞ்சரை காவு வாங்கிய சிம்புவின் கார் !!

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' என்பதெல்லாம் அந்தக்கால பழமொழி. `சிம்பு வீட்டு கார் கூட சிக்கலில் சிக்கும்!' என்பதுதான் லேட்டஸ்ட் மொழி.
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே ஒருவரை குதறிக் கொன்றுவிட்டு, இருவரைப் படுகாயப்படுத்தி விட்டுக் கிடைத்திருக்கிறது சிம்புவின் கார். அந்த உயிர்ப்பலி நடந்தபோது காரை ஓட்டியவர் யார் என்பதுதான் இந்த நிமிடம் வரை சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் கேள்வி.

அகதா கிறிஸ்டியின் மர்ம நாவல்களில் கூட இந்த அளவு திடீர்த் திருப்பங்கள் இருக்காது. அந்த அளவு மர்மங்களைத் தன்னுள் அடக்கி, அனைவரையும் பொறி கலங்க வைத்திருக்கிறது சிம்புவின் கார் சம்பவம். இது பற்றி நாம் இறங்கி விசாரிக்க ஆரம்பித்தோம்.

செப்டம்பர் 10-ம்தேதி நள்ளிரவு! சென்னை மவுண்ட்ரோடு, ஆனந்த் தியேட்டர் அருகே உள்ள கிராண்ட் ஓரியண்ட் ஹோட்டலுக்கு நடிகர் சிம்புவும், அவரது தம்பி குறளரசன் மற்றும் நண்பர்கள் ஜமாவும் சென்றதாகக் கேள்வி. விருந்து வைபவம் முடிந்தபின்னர் இவர்கள் வெளியே வந்து பார்த்தபோது சிம்புவின் கருப்பு நிற மாண்டியோ (டி.என்.09-ஏபி 4466) காரைக் காணவில்லையாம்.

டிரைவரும் அங்கே இல்லாததால் உடனே எண் 100-க்கு போன் செய்து, `காரைக் காணவில்லை' என்று சிம்பு புகார் செய்ததாகத் தகவல். அதையடுத்து காரைத் தேடி களமிறங்கினார்கள் போலீஸார். அதில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

மறுநாள் (11-ம்தேதி) தியாகராயர் நகரில் உள்ள சிம்புவின் வீட்டுக்கு ஆயிரம் விளக்கு போலீஸார் போய் விசாரித்திருக்கிறார்கள். ஹோட்டல் வாசலில் நின்ற காரை சிம்புவின் வீட்டிலுள்ளவர்கள்தான் வீட்டுக்கு வரவழைத்ததாக ஒரு விவரம் தெரியவர, பிரச்னை ஓய்ந்தது என்று திரும்பிவிட்டனர் போலீஸார்.

இதற்கிடையே, அதே நாளில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்குச் சென்ற சிம்புவின் தந்தை விஜய டி.ராஜேந்தர், `எனது இளைய மகன் குறளரசன் விருந்துக்குச் சென்றபோது காரைக் காணவில்லை. அதன் டிரைவர் வசந்தகுமாரையும் காணவில்லை' என்று புகார் கொடுத்துள்ளார். ஒரே குடும்பத்திலிருந்து இப்படி முன்னுக்குப் பின் முரணாக வந்த தகவல்களால் தலை சுற்றிப் போனார்கள் போலீஸார்.

இந்தநிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே சிம்புவின் கார் சேதமாகி நிற்பதாக ஒரு தகவல் போலீஸுக்குக் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்றபோது மற்றொரு அதிர்ச்சித் தகவல் அவர்களுக்காகக் காத்திருந்தது. சிம்புவின் கார் மோதியதில் மோட்டார் பைக்கில் சென்ற ஒருவர் இறந்ததுடன், இரண்டு பேர் படுகாயம் அடைந்து விட்டார்கள் என்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல். டிரைவர் வசந்தகுமார்தான் குடிபோதையில் காரை கடத்திச் சென்று இந்த விபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று சந்தேகித்தனர் போலீஸார்.

இதற்கிடையே இன்னொரு சந்தேகமும் போலீஸாரிடம் சதிராட ஆரம்பித்தது. விபத்து நடந்தபோது அந்த காரை வசந்தகுமார்தான் ஓட்டிச் சென்றாரா? என்பதுதான் அந்த சந்தேகம்.

நடிகர் சல்மான்கான் ஸ்டைலில் அந்த வண்டியை யாரும் ஓட்டிச்சென்றார்களா? அல்லது வழக்கமாக தமிழ் சினிமாக்களில் வருவது போல், விபத்தைத் தான் ஏற்படுத்திவிட்டு பழியை டிரைவர் மீது யாரும் போடுகிறார்களா? என்பது போன்ற சந்தேகங்களும் போலீஸாரைக் குத்திக் குடையத் தொடங்கின. இதுபற்றி விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் போலீஸார்.

டிரைவர் வசந்தகுமார் இதுவரை சிக்காத நிலையில், அவர் பிடிபட்டால்தான் பல பின்னணிகள் வெளியில் வர வாய்ப்புள்ளது.

சிம்புவின் கார் சம்பவத்தின் பின்னணியில் பலப்பல ஊகங்களுக்கு இடமிருக்கின்றன. சிம்புவோ அல்லது குறளரசனோதான் சம்பவத்தின்போது அந்த காரை ஓட்டியதாகக் கூறப்படுவது விஜய டி.ராஜேந்தர் தரப்புக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த கார் சம்பவத்தைக் காரணம் காட்டி, சிம்பு மீது வீண்பழி சுமத்தி அவரது இமேஜை `காலி' செய்ய இளம் நடிகர் ஒருவரின் தந்தை செய்யும் முயற்சி என்கிறார்கள் சிம்புவின் தரப்பினர்.

மதுரையில் தனக்குச் சொந்தமான வீட்டில் இருந்த மரச்சாமான்களைத் திருடி விற்க முயன்றதாக, தனது லட்சிய தி.மு.க. கட்சியின் மாவட்டச் செயலாளர் பரமன் மீதே புகார் கூறினார் விஜய டி.ராஜேந்தர். ஆனால் பரமன் தரப்புத் தகவலோ வேறுமாதிரியாக இருந்தது. `தான் பல கோடி ரூபாய் மதிப்பில் டி.ஆருக்கு நிலம் வாங்கிக் கொடுத்த வகையில் தனக்குச் சேரவேண்டிய கமிஷன் தொகை ஒன்றரை லட்ச ரூபாயைத் தராமல் டி.ஆர். ஏமாற்றி விட்டார்' என்று குற்றம் சாட்டினார் பரமன்.

அதோடு டி.ஆர். மீது சென்னை, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் செய்தார். பின்னர் அந்த வழக்கு தள்ளுபடியானது வேறு விஷயம். எனவே சிம்புவின் கார் கடத்தல், ஏற்பட்ட விபத்து, அதனால் உருவான உயிரிழப்பு இவை வேண்டுமென்றே செய்யப்பட்ட வேலையாக இருக்குமோ? இதன் பின்னணியில் டி.ஆருக்குப் பிடிக்காதவர்கள் யாராவது இருந்திருக்கலாமோ? என்ற சந்தேகமும் டி.ஆர். தரப்புக்கு உள்ளது.

இதற்கு நேர் எதிராக இந்த கார் விபத்து சம்பவத்தில் இருந்து தனது மகன்களைக் காப்பாற்றவே டி.ஆர். இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்ற கிசுகிசுப்பும் கில்லி விளையாடுகிறது.

`ஆளும் கட்சிக்கு எதிராக டி.ஆர். அவ்வப்போது மேடைகளில் அவிழ்த்துவிடும் அடுக்குமொழி வசனங்களை ஆஃப் செய்வதற்காக இது திட்டமிட்டு அவருக்காக உருவாக்கப்பட்ட சிக்கல்' என்ற ஊகமும் ஒருசிலரிடம் உள்ளது.

சிம்புவின் கார் சம்பவம் பற்றி டி.ரஜேந்தரிடம் பேசினோம். கடும்கோபத்தில் இருந்த அவர் நம்மிடம் பொரிந்து தள்ளிவிட்டார்.

``சிலம்பாட்டம் ஷூட்டிங்கிற்காக சிம்பு கடந்த மூன்றாம் தேதியே கொழும்புக்குப் போய் விட்டான். கார் தொலைந்து போன அன்று எனது இளைய மகன் குறளரசன்தான் அவனது நண்பர்களுடன் அந்த ஹோட்டலுக்குச் சென்றிருந்தான். விருந்து முடிந்து வெளியில் வந்தபோது காரையும் டிரைவரையும் காணவில்லை என்று அங்கிருந்தே என்னிடம் போனில் சொன்னான். அதன்பின்னர், அவன் ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தான். அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் மறுநாள் காலை வரை காத்திருந்த நான், அன்று ஆயிரம் விளக்கு போலீஸில் காரைக் காணவில்லை என்று புகார் கொடுத்தேன்.

போலீஸ் விசாரணையில், எனது காரை டிரைவர் வசந்தகுமார் கடத்திச் சென்றபோது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே அது விபத்துக்குள்ளாகி நிற்பது தெரிய வந்தது. ஆனால் வசந்தகுமாரைப் பிடிக்க முடியவில்லை. சிம்புவின் வளர்ச்சியைப் பிடிக்காத ஒரு கூட்டம்தான் சதி செய்து, அவனைப் பற்றி மீடியாக்களுக்குத் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றது. மவுண்ட் ரோடில் உள்ள அந்த மாதிரி சிறிய ஹோட்டலுக்கெல்லாம்(!) சிம்பு செல்ல மாட்டான்.

ஏற்கெனவே நடிகை நயன்தாரா விஷயத்தில் அந்த நடிகை குனிந்தால், நிமிர்ந்தால், ஏன் அவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்தால் கூட சிம்புதான் எண்ணெய் ஊற்றி வழுக்கி விழ வைத்தார் என்று சிலர் வதந்தி பரப்பி வந்தார்கள். இப்போது கார் விஷயத்திலும் இதுபோல கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.

என் மகனைப் பற்றி தவறான செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள் மீது வழக்குத் தொடரப்போகிறேன்'' என்றார் அவர்.
காஞ்சிபுரம் எஸ்.பி. பெரியய்யாவிடம் கேட்டதற்கு, ``சிம்புவின் கார் டிரைவர் வீடு அரும்பாக்கத்தில் உள்ளது. ஓட்டலில் இருந்து அவர் காரை எடுத்துக் கொண்டு சிம்பு வீட்டிற்குச் செல்லாமல் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

மறுநாள், செங்கல்பட்டு வந்து அவரது நண்பர்களை அழைத்துக் கொண்டு ஜாலியாக உத்திரமேரூருக்குச் சென்றுள்ளார். பின்னர் சென்னை திரும்பும் வழியில்தான் விபத்து நடந்துள்ளது. இதனால், டிரைவர் தப்பி ஓடிவிட்டார். டிரைவருடன் வந்தவர்களை அழைத்து விசாரித்தபோதுதான் இந்தத் தகவல்களைத் தெரிவித்தனர். விபத்தில் காயம்அடைந்த இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர்!'' என்றார்.

சிம்பு தொடர்புடைய இந்த கார் சம்பவம் இன்னும் என்னென்ன திடீர் திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை.

செவ்வாய், 16 செப்டம்பர், 2008

குவைத் எனும் வளைகுடா நாடு!!-தெரிந்துகொள்ளுங்கள்

குவைத் மிகச்சிறிய மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்று. எண்ணெய் (பெட்ரோலியம்) வளத்தையே ஆதாரமாக கொண்ட செல்வச் செழிப்பான நாடு. இதன் தெற்கில் சவுதி அரேபியாவும் வடக்கிலும் மேற்கிலும் ஈராக்க்கும் அமைந்துள்ளன.
2007 இல் இந்நாட்டின் மக்கட்தொகை 3 தொடக்கம் 3.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஏறத்தாள 2 மில்லியன் பேர் வெளிநாட்டினர். உலகின் பணக்கார நாடான குவைத்துக்கும், பிற எண்ணைவள வளைகுடா நாடுகளுக்கும், இருண்ட பக்கம் ஒன்றுண்டு. ஆடம்பர மாளிகைகள், வானுயர்ந்த கோபுரங்கள் யாவும் பல்லாயிரக்கணக்கான அடிமைத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவானவை. இவற்றை நிர்மாணிக்கும் நிறுவனங்கள் பல ஆளும் மன்னர்/ஷேக் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானவை. குவைத்தின் மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகை வெளிநாட்டவர்களை கொண்டிருக்கும் பட்சத்தில், தனியார் நிறுவனங்களின் 98% மனிதவளம் வெளிநாட்டு தொழிலாளரைக் கொண்டிருப்பது அதிசயமல்ல. இவர்களிலே படித்த, தொழில் தகமையுடைய சிறு பிரிவு மட்டுமே அதிக சம்பளம் (அதுவும் குவைத் பிரசையை விட குறைவு) பெறுகின்றனர்.
அதற்கு மாறாக பெரும்பான்மையான கட்டட நிர்மாண, துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள், மிக குறைந்த சம்பளத்தை (அதிகபட்சம் 100 டொலர்கள்) பெற்று, நகரத்திற்கு ஒதுக்குப்புறமான பாலைவனங்களில் அமைந்த வசதியற்ற தொழிலாளர் குடியிருப்புகளில், ஒரு அறைக்குள் குறைந்தது ஆறு பேர் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை. சில கம்பனிகள் சம்பளத்தை மாதக்கணக்காக கொடுப்பதில்லை. குடியிருப்புகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை. குவைத்தில் உள்ள நிறுவனமொன்று தனது பங்களாதேஷ் தொழிலாளருக்கு மாதக்கணக்காக சம்பளம் கொடுக்காத பிரச்சினை, நாடளாவிய ஆசிய தொழிலாளர் எழுச்சிக்கும், மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கும் வழிவகுத்தது. சர்வாதிகார ஆட்சி நடக்கும் குவைத்தில், வேலை நிறுத்தம் செய்வதோ, தொழிற்சங்கம் அமைப்பதோ, சம்பள உயர்வு கேட்பதோ சட்டவிரோதம். இருப்பினும் தன்னெழுச்சியாக தொடங்கிய பங்களாதேஷ் தொழிலாளர்களின் போராட்டம், போலிஸ் அடக்குமுறைக்குல்ளானது. நகரின் முக்கிய வீதிகளை ஆக்கிரமித்துக் கொண்ட வேலைநிறுத்தக்காரரை கலைந்து செல்ல வைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசி, தடியடிப்பிரயோகம் செய்ததால், தொழிலாளரும் எதிர் வன்முறையில் ஈடுபட்டனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரியூட்டப்பட்டன. சம்பத்தப்பட்ட நிறுவனத்தின் முகவர்கள் சமாதானமாக போகும்படி கூறி, நிலைமையை கட்டுப்படுத்த முயன்றபோது தாக்கப்பட்டனர். கூட்டத்தை கலைத்த போலிசால், அந்த இடத்திலேயே 250 பேர் கைது செய்யப்படனர். தொடர்ந்த போலிஸ் தேடுதல் வேட்டையில் ஆயிரத்துக்கும் குறையாத பங்களாதேஷ் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக தனியான விமானத்தில் நாடுகடத்தப்பட்டனர்.
குவைத் போன்ற வளைகுடா நாடுகளில், தெற்காசிய தொளிலாளர்கள் ஈவிரக்கமற்று சுரண்டப்படுவதும், அவர்களின் அவல வாழ்வும் ஏற்கனவே உலகிற்கு தெரிந்த செய்திகள் தான். ஆனால் அடங்கிக்கிடந்த தொழிலாளர் மனங்களில் அநீதிக்கு எதிரான உணர்வு நீறுபூத்த நெருப்பாக இவ்வளவு காலமும் உறங்கிக் கிடந்தது. இதுவரை இல்லாதவாறு இப்போது மட்டும் தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டங்களில் இறங்குவதற்கு, சில உலக பொருளாதார மாற்றங்கள் முக்கிய காரணமாகும். அண்மைக்காலமாக சர்வதேச சந்தையில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், அரிசியின் விலையும் இரண்டு மடங்காகியுள்ளது. பங்களாதேஷ் மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவு. மேலும் அமெரிக்க டாலரின் பெறுமதி இறங்கி வருவதால், அதனோடு தொடர்புடைய குவைத் டினாரின் பெறுமதியும் வீழ்ந்துள்ளது. இதனால் தமது அற்ப சம்பளம்(75 டாலர்) என்றுமில்லாதவாறு வயிற்றுப்பாட்டிற்கே போதாது என்ற நிலை ஏற்பட்ட போது தான் மேற்குறிப்பிட்ட தொழிலாளரின் தன்னெழுச்சி ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் விளைவாக குவைத் அரசாங்கம், குறைந்தபட்ச சம்பளம் 150 டாலர்களாக உயர்த்துவதாகவும், இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்கள் தண்டிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

திங்கள், 15 செப்டம்பர், 2008

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ சாதனையா?அல்லது வேதனையா?

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என்ற சலுகை திட்டம் ,இலவச டிவி ,இலவச காஸ் அடுப்பு போன்ற சலுகை திட்டங்கள் எதனை உணர்த்துகின்றன ? அடிப்படை வாழ்வுஅதரமற்ற மக்கள் பெரும்பாலோர் இன்னும் விடியலை காணமலே உள்ளார்கள் என்பதைத்தான்.

இதுதான் விடியலா?இது சலுகையா அல்லது வேதனையா? என்பதை ஆய்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும் !!

ஒரு நல்ல அரசானது தனது மக்களின் அடிப்படை வாழ்வு நிலையினை உயர்த்த கூடிய திட்டங்களை செயல் படுத்த வேண்டும் !.சலுகைகளை அளிப்பது தீர்வாகது மாறாக வேலை வாய்ப்பினை நல்கக்கூடிய திட்டங்களை செயல்படுத்துவதுதான் சிறந்த தீர்வாகும்.ஒருவருக்கு வேலை கொடுத்தால் ஒரு குடும்பமே வாழ்வு பெரும் என்பதுதான் உண்மை.

மக்களை உழைக்க தூண்டாமல் ..சலுகைகளை மட்டும் அளிப்பது .நோயை போக்காமல் காத்து கொள்வது போன்றதுதான்!.வறுமை கோட்டிற்கு கீழே இன்னும் பல கோடி பேர் உள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மைதான் !.

இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் .இன்னும் பல அடிப்படை வசதிகளை நாம் பெறவில்லை என்பது மிக வேதனையான ஒன்றுதான்.

வளைகுடா நாடுகளையோ.தெற்காசிய நாடுகளை நாம் ஒப்பிட்டு பார்த்தாலும் நம் நாட்டின் அரோக்கிய வாழ்வு நிலை ,சுகாதார விழிப்பு நிலை ,தனிமனித மதிப்பின் தன்மை வெகு குறைவுதான்!

அற்புதமான இயற்க்கை வலம் ,அறிவு மிக்க இளைய சமுதாயம்,ஒப்பற்ற கலாச்சாரம் என நமது நாடு இருக்கின்ற போதிலும் .அவலமான வாழ்க்கை நிலை வேதனை நல்கவே செய்கிறது.

தனி மனித விழிப்புணர்வும் ,மாறுபட்ட அரசியல் அமைப்பும் நமது அவசிய தேவை என்பதை நாம் உணர்வோம் !

உங்களுடைய கருத்துக்களை அறிவதில் மகிழ்வேன் !!

ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

தமிழகத்தில் பாதிப்பேர் ஏழைகள் -உலக வங்கியின் உலுக்கும் ரிப்போர்ட் !!

தமிழ்நாட்டில் ஏதோ பாலும், தேனும் ஓடுவதுபோல ஒரு நினைப்பில் நாம் இருக்கும் நிலையில் `தமிழகம் ஒரு பஞ்சைப் பராரி மாநிலம்' என்ற தகவலை வெளியிட்டு ஓர் உலுக்கு உலுக்கியிருக்கிறது உலக வங்கி.
உலக வங்கியால் எடுக்கப்பட்ட வறுமை குறித்த புள்ளிவிவரம், இந்திய அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் பாதிப்பேர் ஏழைகள் என அதில் கூறியிருப்பது எதிர்காலம் குறித்த அச்சத்தை சாமானியர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக நாம் கல்பாக்கம் மருத்துவர் டாக்டர் வீ.புகழேந்தியைச் சந்தித்தபோது இதுபற்றி புதுப்புதுத் தகவல்களைப் புட்டுப்புட்டு வைத்தார் அவர். குறிப்பாக, ``தமிழகத்தில் இரண்டு பேரில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் ஏழை. இங்கே அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் முழுமையாக மக்களைச் சென்று சேராததுதான் தமிழகத்தில் ஏழைகள் பெருக்கெடுக்கக் காரணம். தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் நாற்பதாயிரம் குழந்தைகள் சத்துக்குறைவால் இறக்கின்றன'' என்று உலக வங்கி சர்வே தகவல்களை முத்தாய்ப்பாகக் கூறிவிட்டுத் தொடர்ந்தார் அவர்.
``இந்தியர்களில் 82 கோடியே எண்பது லட்சம் பேரின் (அதாவது 75.6 சதவிகிதம் பேரின்) தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. நமது மக்கள் தொகையில் 45 கோடியே 60 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ளனர். இவர்களது தினசரி வருமானம் ரூபாய் ஐம்பதுக்கும் கீழேதான்.
80_90_ம் ஆண்டுவரை வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை மளமளவெனக் குறைந்து வந்தது. 1991_முதல் 2005 ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் `புதிய பொருளாதாரக் கொள்கைகள்' அறிவிக்கப்பட்ட பிறகுதான் வறுமை ஒழிப்பின் வேகம் குறைந்து போனது. முன்பெல்லாம், ஒருவர் நாளொன்றுக்கு 44 ரூபாய்க்குக் குறைவாகச் சம்பளம் வாங்கினால் அவர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார் என்றார்கள். இப்போது 55 ரூபாய் சம்பளம் வாங்கினால்தான் வறுமைக்கோடு என்கின்றனர். அதன்படி பார்த்தால், தமிழகத்தில் இரண்டு பேருக்கு ஒருவர் பரம ஏழையாக இருக்கிறார் என சர்வே விவரம் தெரிவிக்கிறது.
வறுமை காரணமாக தமிழகத்தில் மூன்றில் இரண்டு குழந்தைகளுக்குக் குறைந்தபட்ச வசதிகள் கூட கிடைப்பதில்லை. ஆனால், கட்சி வித்தியாசம் இல்லாமல், எல்லா அரசியல்வாதிகளும் வறுமை ஒழிப்பைப் பற்றிப் பேசி வருவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
`இந்தியாவில் 60 சதவிகித குழந்தைகள் வறுமையின் வெளிப்பாடான சத்துக்குறைவால் இறப்பதாக' யுனிசெஃப் அமைப்பு கூறியுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரி ஜார்ஜ் தாமஸ் என்பவர், தமிழகத்தில் வயதுக்கேற்ற எடை இல்லாமல் 33 சதவிகித குழந்தைகளும், மூன்று வயதிற்குட்பட்ட 73 சதவிகித குழந்தைகளும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அப்படியானால், இரும்புச் சத்து மாத்திரைகள், சத்துணவு, கர்ப்பிணிகளுக்கு சத்துணவுத் திட்டம், மகப்பேறு நிதியுதவி, குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைத் திட்டம், வாழைப்பழம் வழங்குதல் போன்ற பல ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்களால் எந்தவித மாற்றமும் வரவில்லை என்றுதானே அர்த்தம்? பல வருடங்களாகக் குழந்தைகளின் சத்துக்குறைவைப் போக்க இவற்றைச் செய்வதாக அரசு கூறினாலும், ஆண்டுதோறும் சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் இறப்பதற்கு என்ன காரணம்?
அண்மையில் தமிழக திட்டக்குழுத் துணைத் தலைவர் நாகநாதன் ஒரு பேட்டியில், `இந்தியாவில் 150 ரூபாய்க்கு வாங்கும் செருப்பு அமெரிக்காவில் 750 ரூபாய். அங்கே நாற்பத்து நான்கு ரூபாய்க்கு வாங்கப்படும் உணவுப் பொருட்களை இங்கே 17 ரூபாய்க்கு வாங்கலாம்' என்று கூறியிருக்கிறார். ஆனால், நிஜ நிலவரம் என்னவென்றால், அமெரிக்காவில் ஒரு கையளவு கோழிக்கறி இரண்டு டாலருக்கு விற்கப்படுகிறது. ஒரு கைப்பிடி வெண்டைக்காய் அங்கே நான்கு டாலர். ஆனால், நம்மூரில் வெண்டையின் விலைக்கும், கோழிக்கறியின் விலைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அமெரிக்காவில் சத்துள்ள ஆகாரங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இங்கோ விலைவாசி விஷம் போல் ஏறிக்கிடக்கிறது.
`தமிழகத்தில் விவசாயக் கடன் ஏழாயிரம் கோடியைத் தள்ளுபடி செய்திருக்கிறோம். விவசாயக் கடனுக்கான வட்டியை ஏழு சதவிகிதத்திலிருந்து நான்கு சதவிகிதமாகக் குறைத்திருக்கிறோம்' என்று திட்டக்குழு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்தக் கடன் தள்ளுபடி எல்லாம் பணக்கார விவசாயிகளுக்குத்தான் பலனளித்திருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் ஒரு ஹெக்டேருக்கு 13 டன்னாக இருந்த நெல் உற்பத்தி, தற்போது மூன்று டன்னாகக் குறைந்து விட்டது. நிலம் கெட்டுப்போய், விளைநிலங்களின் பரப்பு குறைந்ததே இதற்குக் காரணம். தமிழக, மத்திய பட்ஜெட்டுகளில் இயற்கை வேளாண்மையை அதிகரிப்பது பற்றி ஒரு வார்த்தைகூட இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. 1947_ம் ஆண்டில் 60 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் விவசாய உற்பத்தி, நடப்பு ஆண்டில் வெறும் 18 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. பெரும் தொழில் நிறுவனங்களுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் ஆக்கிரமிப்பு போன்றவையும்தான் இதற்குக் காரணம். இதற்கிடையே இதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் நாகநாதன் போன்றவர்கள் அமெரிக்காவில் செருப்பு நிலவரம் பற்றிப் பேசுகிறார்கள்.
90_ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்த விவசாயம், இன்று ஐந்தாவது இடத்திற்குப் போய்விட்டது. பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன், `நம் நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை அனைத்து மக்களுக்கும் கொடுத்துவிட முடியும். ஆனால், சமமான பங்கீடு என்பது இங்கில்லை' என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு உற்பத்தி, சந்தை வியாபாரிகளிடம் முடங்கிக் கிடக்கிறது. அரசின் திட்டங்கள் ஊழல், சுரண்டல் இல்லாமல் மக்களிடம் சென்று சேர்ந்தால் அறக்கட்டளைகள், இலவசங்கள் என்ற வார்த்தைகளே இல்லாமல் போய்விடும். இல்லாவிட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக வங்கி வெளியிடப் போகும் சர்வே விவரத்தில், உலக ஏழைகளில் நாம் கணிசமான அளவு இன்னும் முன்னேறியிருப்போம்'' என ஆதங்கத்தோடு கூறி முடித்தார் டாக்டர் புகழேந்தி.இதுபற்றி திட்டக்குழு அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, "உலக வங்கியின் இந்த சர்வே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட சர்வே. ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் வறுமை ஒழிப்பின் வேகம்
அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி என்பது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. அதேபோல், விவசாயத்திலும், ஐந்து மில்லியன் டன்னாக இருந்த உணவு உற்பத்தி தற்போது பத்து மில்லியன் டன்னாக அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் 29 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் வேலை உறுதித் திட்டத்தால் பெருமளவு பலன் கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சியும் ஆறு சதவிகிதத்தைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு, தமிழகத்தை ஏழைகள் மாநிலம் என்றெல்லாம் சொல்வது தேவையற்றது'' என நீண்ட விளக்கம் கொடுத்தனர் அவர்கள்.
`சத்துக்குறைபாட்டால் குழந்தைகள் இறப்பு அதிகரித்திருக்கிறதாமே?' என்ற கேள்வியை சமூக நல வாரியத் தலைவி சல்மா முன்பு வைத்தோம். "சத்துணவில் மூன்று முட்டை உள்ளிட்ட திட்டங்கள் தற்போதுதான் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இதன் பலன் தெரிய கொஞ்சம் காலதாமதமாகும். அரசின் முட்டைத் திட்டத்தால் வகுப்பறைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எங்கள் வாரியத்தின் மூலம் 1200 காப்பகங்கள் செயல்படுகின்றன. இதில் படிக்க வரும் மாணவர்களைவிட, மாநில அரசின் அங்கன்வாடிக்குச் செல்லும் சிறார்கள் அதிகம். காரணம், இலவசத் திட்டங்கள்தான். வெகு விரைவிலேயே, சத்துக்குறைபாடு என்ற நோயை விரட்ட அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக எடுத்து வருகிறோம்'' என்றார் சல்மா தெளிவாக.
இப்போதைய தமிழகத்தின் உண்மை நிலை இன்னும் இரண்டாண்டுகளுக்குப் பிறகுதான் தெரியவரும் என்கிறார்கள் நிபுணர்கள். தமிழகம் பற்றி ஓர் இனிப்பான செய்தி வர நாம் இன்னும் இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.