Friday, May 29, 2009

காலம் கலிகாலம் - தேய்ந்து போகும் வாழ்க்கை !!




உலகில் எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்து ஆடுகிறது அப்போதெல்லாம் மனிதர்கள் உரக்க சொல்லி கொள்வது "கலிகாலம் முத்திபோய் விட்டது "என்பதுதான்.மனித வாழ்க்கை முற்றிலுமாய் தேய்ந்து போய் அதனுடைய அழகிய வடிவம் மறைந்து குருரமம் , அருவருப்பும் வெளிப்படுத்தும் ஒரு இருள் நிறைந்த காலத்தில் நாம் இருக்கிறோம் அதைத்தான் கலிகாலம் என்று கிராமத்து பெரியவர்களும் ,படித்தவனும்,படிக்காதவனும் புலம்பி நிற்க செய்கிறது எனலாம்



அகோர வெளிப்பாடுகள் இந்த நில உலகில் மனித பிறவிகளால் அரங்கேற்றப்படுகிறது.இனபடுகொலை ஒரு பக்கம் மலரும் மொட்டுக்கலலேல்லாம் அழிக்கப்படுகிறது,பதுங்கு குழியில் வாழ்கையின் பாடம் கற்று கொடுக்க படுகிறது.வாழ்க்கை இன்னதென்று விளங்கி கொள்ள இயலாத ஒரு பருவத்தில்,கனவெல்லாம் தோட்டாக்களின் சத்தமும்,ரத்த வாடையும்,அலறல் ஒலிகளும் அந்த சின்னஞ்சிறு குழந்தைகளை மனதளவில் ஊனமாக்கி வந்ததை சர்வதேச உலகம் வேடிக்கை பார்த்தது .



உறவுகள் இன்றி அனாதைகள் ஆன எத்தனையோ மனித ஜீவன்கள் ஊமையாய் கதறும் ஒலிகளுக்கு இடையே உலகம் கள் குடித்த குரங்காய் கும்மாளித்து கூத்தாடுவதை கலிகாலம் என்று சொல்லாமால் வேறு என்ன சொல்வது !!

ஒரு ஜனநாயக நாட்டை அதன் பிரஜைகளை எங்கிரோந்தோ வந்து சர்வசாதரணமாக ஒரு தீவீரவாத கும்பல் சகட்டு மேனிக்கு சுட்டு தள்ளுகிறது. அதை அரசாங்கம் முன்கூட்டியே தடுக்க திராணியில்லாமல் வேடிக்கை பார்த்து கொள்கிறது.கொலை செய்தவனோடு கொஞ்சி கொண்டு வழக்கு விசாரணையில் காலத்தை கடத்துகிறது




நண்பர்கள் ,நட்பு போன்ற வார்த்தைகள் அர்த்தம் அற்று துரோகமும்,வஞ்சகமும் வெளிப்படும் காலம் கலிகாலமாகி விட்டது.

ஊடகங்களால் சிதைக்கப்படுகிறது இளையவர்களின் மனம்,வாழ்கையை தொடங்கும் வயதில் சகல அழுக்கிலும் கறைபட்டு போகிறது அவர்களின் மனம்

தந்தை மகளை கற்பழிக்கிறான் !!,


பெற்ற தாயையும் தந்தையையும் சொத்துக்காக கொன்று போடும் பிள்ளைகள்,!!


கணவன் உறங்கும் பொது மனைவி கொன்று போடுகிறாள்,!!


எல்லாவற்றிலும் லஞ்சம் ,!!

பணத்திற்காக எதையும் செய்ய துணியும் குருர புத்தி !!

கற்பு ,பெண்மை ஒழுக்கம் இவையெல்லாம் இரவு நடன ,மது கேளிக்கையில் ஒழித்து போடும் இளைஞர் கூட்டம்,!!
எல்லைகளை தாண்டி படிக்கும் வயதில் பிள்ளை பெற்றெடுக்கும் சிறுமிகள்,!!
தர்மத்தை அதர்மம் வெல்லும் என்று மாற்றி எழுத இதனால் முடியுமோ ? என்று அச்சம் கொள்ளக்கூடிய காலம் இந்த கலிகாலம் !!

Friday, May 22, 2009

வீரத்தின் மறுபெயர் வேலுபிள்ளை பிரபாகரன் !!


கேவலம் வெறும் வார்த்தை ஜாலங்களில் பதவி சுகத்தை அனுபவித்து கொண்டு தமிழ்,தமிழினத்திற்காக நான் உயிரை கொடுக்கவும் தயார் என பேசும் !! கோழை நம் தம் தமிழ் அரசியல் தலைவர்களை இந்த உலகம் இன்னும் மதித்து மரியாதை கொடுக்குமானால் அது மிக கேவலமான ஒரு விழயம் எனலாம்!



ஏறக்குறைய முப்பத்தி ஐந்து ஆண்டுகள் தமிழினம் அடக்குமுறைக்கு உட்படுதபடுவதை பொறுக்க சகியாமல் ஈழத்தில் மரணத்தை குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் ஆயுதம் ஏந்திய ஒரு சுத்தமான தமிழனைத்தான் இன்றைய இலங்கை அரசு வேட்டையாடி சாய்துவிட்டதாக தம்பட்டம் அடித்துகொள்கிறது.



உண்மையில் பிரபாகரன் அவர்கள் பதவிக்காக ஆசைப்பட்டு அந்த இயக்கத்தை முன்னிறுத்தவில்லை,!!பணத்திற்காக ஆசைப்பட்டு புலிகள் இயக்கத்தை வழிநடத்தவில்லை! .ஆயுதங்கள் மட்டுமே ஈழத்தை கொண்டு வரும் என்ற கனவில் வழி நடத்தியவர்தான் மாவிரன் பிரபாகரன் எனலாம்.



தமிழ் ,தமிழ் என்று முழங்கும் நம் அரசியல் தலைவர்கள் சுயநல பேய்கள் ,அவர்களுடைய பதவியை பாதுகாத்து கொள்ளவும்,பெறவும்,பணத்தை பெருக்கவும் தமிழ் ஒரு வியாபார சொல் எனலாம்


கொண்ட கொள்கையில் உறுதி,அதற்காக தனது உயிரை பணயம் வைப்பவனே ஒரு போராளி.அவ்வகையில் பிரபாகரன் அவர்கள் ஒரு மிக சிறந்த போராளி எனலாம்.பெற்ற மகனை போருக்கு அனுப்பிய செய்திகள் சங்ககால பாடல்களில் காணலாம் அதனை உண்மையில் நிகழ்த்தி காட்டியவர் பிரபாகரன்.
ராஜிவ் காந்தி படுகொலையால் புலிகள் இயக்கத்தின் மீது ஒரு கரை படிந்தது என்பது உண்மை ..எனினும் அது நிகழ பின்புல காரணமாக இருந்த நிகழ்வுகள் அரசியல் ஆய்விற்கு உட்பட்டது.தான் அடையக்கூடிய லட்சியத்திற்கு குறுக்கே வரும் எதனையும் அழித்து போடுவதைத்தான் கண்ணன் குருஷேத்ர யுத்தத்தில் அர்ஜுனனுக்கு கூறினான்.
வீரர்கள் என்றும் வீழ்வதில்லை..வீழ்ந்ததாக கருதினால் அது மடமை.மீண்டும் அத்தகைய வீரம் இந்த மண்ணில் பல உருவில் தோன்றி உயிர்தரிக்கும் ,வரலாறு படைக்கும்

ஒரு தனி இயக்கம் அதனை முற்றிலுமாக அழிக்க ஒரு நாட்டின் மொத்த ராணுவமே வேட்டை நாயாய் அலைகிறது.சர்வதேச நெருக்குதல்கள்,தொப்புள்கொடி உறவு என பெருமை பேசும் நாட்டின் பாராமுகம்..இவை எல்லாவற்றையும் மீறி இந்த இயக்கத்தை வழி நடத்தி காட்டிய மாவிரனாக பிரபாகரன் இந்த நில உலகில் அறியபடுவார்.
வீரத்தின் மறுபெயராக சரித்திரம் ஒரு பெயரை சொல்லுமானால் அது பிரபாகரனகவே இருக்கும்.தமிழினத்திற்காக உண்மையாய் உயிரினை தந்ததாக ஒரு போராளியை,ஒரு வீரனை சரித்திரம் பிரபாகரன் என்றே சொல்லும்!
எத்தனையோ பிஞ்சு பிள்ளைகள் மண்ணோடு மண்ணாகி போனார்கள்,கனவுகளை கொன்று ஒரு இனம் வேட்டையாடப்பட்டது எனில் அது தமிழினம்..ஈழ தமிழினம் மட்டுமே..!! அவர்களுடைய வலியை,இழப்பை,தவிப்பை வார்த்தைகளில் சொல்லுவது இயலாது

வீரம் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை வாழ்த்தாகவே சரித்திரம் உண்டு.!!