திங்கள், 27 ஏப்ரல், 2009

"வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் ..."



இந்த நில உலகில் நம்பிக்கை மட்டுமே மனித வாழ்கையை அர்த்தபடுத்தவல்லதாக இருக்கிறது.கடுமையான சோதனைகளிலும் நிதானம் இழக்காமல் தங்களுடைய இலக்கினை நோக்கி நடந்து , அடைந்தவர்களையே உலகம் முன் மாதிரியாகவும் அவர்களுக்கு உரிய அங்கிகாரத்தையும் அளிக்கிறது.



அத்தகைய மனிதர்கள் வாழ்கையை,சாதனைகளை எண்ணும் போதும் ,படிக்கும் போதும் மனம் தளர்ச்சியிளிரிந்து மீண்டு புத்துணர்வை பெறுகிறது.நம்மில் பலருடைய வாழ்க்கையிலும் நம்பிக்கையை வெளிப்படுத்தி வென்ற தருணங்கள் உண்டு.



சென்னை மாநகரத்தின் சேரி பகுதிகளில் இட்லி விற்று ,தன்னுடைய தாய்க்கு ஆதரவாகவும் அதே தருணத்தில் தனது இலக்கினை நோக்கி முன்னேறி சென்று படித்து பட்டம் பெற்று .... பன்னாட்டு நிறுவனங்கள் பல லட்சங்களை சம்பளமாக தர முன்வந்தும் அவற்றை மறுத்து ,தனது உழைப்பால்,திறத்தால் தானே ஒரு நிறுவனத்தை தொடக்கி வெகு குறுகிய காலத்தில் ஏழு கோடி ருபாய் வருமானம் செய்யும் நிறுவனமாக மாற்றி காட்டிய திரு. சரத்பாபு என்கின்ற இளைஞர் இன்றைய தினத்தில் நம்பிக்கையின் அடையாளம்.!!



எண்ணுவது போலே வாழ்க்கை என்பதற்கு பல மனிதர்கள் எடுத்துகாட்டாய் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.மனிதன் உடல் உறுப்புகளை இழந்தால் கூட நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருப்பானாயின் அளப்பரிய சாதனைகளை செய்ய இயலும் .!



ஒரு ரயில் பயணத்தில் இரண்டு பார்வையற்ற சின்னஞ்சிறுவர்கள் "வாழ்க்கை என்னும் ஓடம் வழங்கு கின்ற பாடம் ..." என்று குரலெடுத்து பாடி ...மனதை உருக்கி கடந்து சென்ற போது அவர்களுடைய நம்பிக்கை ஒளி பொருந்தியதாகவும் வாழ்கையை எதிர்கொள்ள அவர்கள் தயக்கம் அற்று இருப்பதும் ஒரு முறை எனக்கு விளங்கியது .ஆனால் கண்,செவி,வாக்கு,படிப்பு எல்லாம் இருந்தும் கோழைகளை போல் தோல்விக்கு அஞ்சி நடுங்கும் தன்னம்பிக்கையட்ட்ற மெத்த படித்தவர்கள் நம்மில் பல பேர் இந்த சமுகத்தில் வாழ்ந்துவருவதையும் நாம் காண்கின்றோம்


தகுந்த சீருடை இல்லாமல் பள்ளிக்கு பல மைல்கல் நடந்து சென்று.....


குறிப்பேடுகளும் ,பாட புத்தகங்களையும் வாங்க பணமற்று.......


சத்து உணவிற்கு நண்பகலில் வரிசையில் நின்று....


மின்சார மற்ற மண் குடிசையில் மண் எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து ...


ஒவ்வொரு ஆண்டும் தேர்வு விடுமுறை நாட்களில் நகை கடைகளிலும்,துணிகடைகளிலும், வேலை செய்து...



தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேறி ...மேற்படிப்பிற்கு யாரிடம் கை ஏந்துவது என்று தடுமாறி நின்றவர்கள் நம்மில் பல பேர்.


அத்தகைய உங்களில் ஒருவராக பலர் இன்று நம்பிக்கையின் ஊற்றாக விளங்குகிறார்கள்.


பல சோதனைகளுக்கு இடையே படித்து,பட்டம் பெற்று..எஞ்சினீயராகவும் ,டாக்டர்களாகவும் இந்த சமுகத்தில் தங்களுடைய நம்பிக்கைகளுக்கு அர்த்தம் கொடுக்கின்ற உங்களில் ஒருவர் பாராட்டப்பட மட்டுமில்ல பின்பற்ற படவேண்டியவரும் கூட !!

தன்னம்பிக்கையற்ற வாழ்க்கை சுருதி பிறழ்ந்த பாடலாக இந்த சமுகத்தில் அங்கேயும் இங்கேயும் இடைஇடையே கேட்டாலும்.இவற்றை எல்லாம் மீறி "வாழ்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் " என்ற பார்வையற்ற அனால் தன்னம்பிக்கை குறையாத அந்த சின்னஞ்சிருவர்களின் பாடல் நீங்காமல் ஒலித்தபடி உள்ளது .

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

பாதை மாறிய பயணங்கள்..!!



பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட ஒரு நீண்ட பயணத்தை வாழ்க்கை என்று நாம் வெகு சுருக்கமாய் நாம் சொல்லிவிடுகிறோம் !. உண்மையில் வாழ்க்கை அத்துனை எளிமையான ஒன்றாக நம்மில் அநேகம் பேருக்கு அமைந்து விடுவதில்லை.


எல்லா நிலைகளிலும் மனிதன் போராடிபோராடி முன்னேறி செல்கிறான் , அன்றாட ஜீவிதத்திற்கு போராடும் மனித கூட்டம் ஒரு புறம் ! வயிற்று பசி தணிக்க வாழ்க்கை என்பது இன்றளவும் கூட நாம் காண கூடிய அவலமாக பிச்சை பாத்திரம் ஏந்திய சிறுவர்களும் முதியவர்களும் சாட்சி !


இளமையில் கனவுகள் சிதைந்து போகின்றன தன்னுடைய வயதை ஒத்த சிறுவன் நல்ல உடை அணிந்து பள்ளிக்கு செல்லும்போது மற்றொரு சிறுவன் தன்னை தாழ்வு நிலையோடு தன்னை தன்னுடைய வாழ்கையை பார்க்கிறான்.

பாதை மாறிய ஒரு பயணம் அங்கே ஆரம்பிக்கிறது .பயணத்தின் இலக்கு அடையவேண்டிய இடம் இருவருக்கும் ஒன்றாகவே இருந்தாலும் அங்கெ பாதை மாறிய ஒரு பயணம் தொடங்குகிறது.உண்மையில் வாழ்க்கை அத்துனை எளிமையான ஒன்றாக நம்மில் அநேகம் பேருக்கு அமைந்து விடுவதில்லை.



துளிர்விடும் சின்னஞ்சிறு ரோஜா செடியின் மீது நெருப்பின் கங்குகள் வீசப்படுகின்றன பாவம் துளிர்விடும் இலைகள் கருகி போகின்றன.இங்கே தளிர்விடும் இலைகள் கனவுகளாகவும், நெருப்பின் கங்குகள் சமுகத்தில் உள்ள பல அவலங்களையும் அடையாளம் காட்டுகிறது



பிள்ளையை பெற்றவனின் குற்றமா ?


கசடேறிய சமுக அமைப்பின் காரணமா..?


தனது குடிமகன்களை கையேந்த செய்கின்ற அரசின் குற்றமா..?



பிறந்த அந்த பிள்ளையின் குற்றமா..?



பொறுப்பற்ற பெற்றோரால் உலகில் அல்லல்படும் பிள்ளைகள் ஏராளம் , குடி ,உழைப்பின்மை,எதிர்கால நோக்கம் ஏதுமற்று வெறும் காமத்தில் உதித்த பிள்ளைகளை நடு தெருவில் விட்டு செல்வதும்,பிச்சை எடுக்க செய்வதும் மிக பெரும் சமுக சீர்கேடாக இன்றளவும் உள்ளது.
கனவுகள் நசுக்கப்பட்டு பல கொடுமைகளுக்கும் ,பாலியல் மிருக தனத்திற்கும் சிக்கி சீரழியும் சிறார்கள் எங்கிருந்து பெறபடுகிறார்கள்...?
இளமையில் வறுமை.....
இளமையில் மறுக்கப்படும் கல்வி......
இளமையில் தவறான வழி காட்டுதல்கள்
இளமையில் குடும்ப சுமை....
இப்படி பல காரணங்கள் பாதை மாறிய ஒரு பயணத்திற்கு ஒரு காரணமாய் போகின்றன.


திறமைகள் குழி தோண்டி புதைக்க பட்டு , மனித பிறப்பின் நோக்கம் இன்னதென்று உணராமலே வாழ்கை பாதையில் முன்னேறி செல்லும் எண்ணற்ற சின்னஞ்சிறு குழந்தைகள் பரிதாபத்திற்கு உரியவர்கள் !
உங்களுடைய ரயில் பயணத்திலும்...பேருந்து பயணத்திலும் நீங்கள் மிக சரியான இடத்தில் நின்று கொண்டிருக்க ...உங்களை சுற்றி கையேந்தி நிற்கும் அந்த சின்னஞ்சிறியவர்கள் உண்மையில் பாதை மாறிய பயணத்தில் உள்ளவர்கள்..!!
பாதை மாறிய பயணத்தில் நாம் சரியான இடத்திலும் அவர்கள் தவறான இடத்திலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சந்திப்பது விதியா? விந்தையா? விடை தெரிந்தால் சொல்லுங்கள் !


செவ்வாய், 7 ஏப்ரல், 2009

நானா மலடி... ?



அரச மரம் சுற்றி,நெய் தீபம் ஏற்றி , மண் சோறு உண்று,பல மருத்துவமனைகள் படியேறி பல செய்யல்கள் செய்தும் மனமிரங்காமல் என்னை வஞ்சிக்கும் தெய்வமே ...நீ என்று மனம் இறங்குவாய் ??



தூக்கம் வற்றிய எனது கண்களும்..
கண்ணீரில் நனைந்த என் தலையணையும் எந்த விடியலில் மாறும்..?



நீ சிரிக்கும் போது நானும் சிரித்து..நீ அழும் போது நானும் அழுது உன்னை கையில் ஏந்தி கொஞ்சி மகிழ என்று நான் உன்னை பெறுவேன் என் செல்லமே ???



குரலெடுத்து அழுகின்ற பக்கத்து வீட்டு குழந்தையின் அழு குரல் கேட்கும் போதும் , சிரித்து விளையாடும் ஒலி கேட்கும் போதும் இனம் புரியாத இரக்கமும் மகிழ்வும் தோன்று எனது தன்மைக்கு மலடி என்றொரு மற்றொரு பெயரா?


இருவரில் யாரிடத்தில் குறைகள் இருப்பினும் மலடி என்று பட்டம் பெறுவது பெண்கள் மட்டும் தானே ?


பிச்சை எடுத்து செல்லும் சின்னஞ்சிறு பிள்ளைகளை பெற்று நடு வீதியில் விட்டு சென்றவள் தாயா??


அந்த பிச்சை எடுத்து செல்லும் பிள்ளைகளை கண்டு மனம் வாடும் நான் மலடியா..?



பிள்ளைகளை வளர்க்க வழி இன்றி தெருவில் விடும் பேதைகளை தாயென்று கொண்டாடும் உலகம் என்னை மலடி என்று கூறி மகிழ்வது என்ன நியாயம்?
பெற்றால் மட்டுமே தாயா ?




தாய் என்பவள் கருணை நிறைந்தவள்...இரக்கம கொண்டு தியாகம் செய்பவள்!
கண்களில் தூசு விழுந்தால் கண்கள் கலங்கும்..தாயவள் கண்கள் போன்றவள்!
கலங்கும் போதும்,மகிழ்வின் போதும் குணங்களை வெளிப்படுத்தும் கண்களை போன்றே தாய் அன்பினை வெளிபடுத்துவாள்..
பிள்ளை பெறாவிட்டாலும் நானும் தாய்தான்..!
கண்ணீரில் நனைத்த எனது தலையனை மட்டுமே அறியும் நானும் தாயென்று !
நீங்கள் இப்போது சொல்லுங்கள்...
நானா மலடி... ?


வெள்ளி, 3 ஏப்ரல், 2009

வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!!


இந்த மானுட சமுகத்தில் வறுமை பல அவலங்களையும்,கொடுமைகளையும் அரங்கேற்றி ஒரு கொடிய நோய் போல பல நாடுகளிலும் சமூகங்களிலும் இன்னும் நீங்காமல் உள்ளது.


விளை நிலங்களில் பச்சை கட்டி வளரும் நிலையில் உள்ள பயிர் பச்சைகளில் ஒட்டுண்ணிகளும்,பூச்சிகளும்,பல வித நோய்களும் தாக்கி சீரழிப்பதை போல் ,வறுமை பல அவலங்களை மனித வாழ்க்கையில் திணிக்கிறது.


இளமையில் வறுமை கொடியது நாளைய நம்பிக்கைகளை வெகு தொடக்கத்திலேயே அழிக்கும் அந்த இளமையில் வறுமை கொடுமையிலும் கொடுமையே !. அந்த வறுமை சின்னசிறு மனதுகளில் ஏக்கத்தை ஏற்படுத்தி ,தாழ்வு கொள்ள செய்கிறது மேலும் ...

அது கனவுகளை சிதைக்கிறது...!


அளப்பரிய திறமைகளை முளையிலேயே அழித்து போடுகிறது...!


உணவுக்கு போராட்டம்...!


உடைக்கும் தங்கும் இடத்திற்கும் போராட்டம்..!

கல்வி மறுக்க படுகிறது ..மேலே படிக்க பொருளாதாரம் இல்லை!.மனித திறமைகள் முனை மழுக்க செய்விக்க படுகிறது.


ஆனால் செல்வம் கற்று கொடுக்கின்ற பாடத்தை காட்டிலும் வறுமை அருமையான பாடத்தை மனிதர்களுக்கு கற்று கொடுக்கும் ஆசானாக ..மிக சிறந்த ஆசானாக விளங்குகிறது.


அப்படி வறுமையின் ஊடே போராடி..வாழ்க்கையில் மனித தன்னம்பிக்கையை தடம் பதித்து காட்டியோர் பலர். அவர்களை நினைவு கூர்வதின் மூலம் இன்றைய சமுகத்தில் தன்னொளி பரவும்.வறுமையை வென்று சாதித்து வரலாற்றின் பக்கங்களில் தங்களையும் தாய் திரு நாட்டையும் உயர்த்தி பிடித்த... பிடிக்க இருக்கின்ற அனைவர்க்கும் இந்த பதிவு ஒரு சமர்ப்பணம் !


கர்ம வீரர் என அழைக்கப்படும் தன்னலமற்ற உண்மையான மக்கள் தலைவர் காமராஜர்.இளைய வயதில் பள்ளிஇணைந்த முதல் வருடத்திலேயே தனது தந்தையை இழந்தார்...குடும்பம் வறுமையில் தத்தளித்தது ...இளைய காமராஜரின் நிலையை நினைத்து பாருங்கள் அருமையானவர்களே..தாயின் சொற்ப தங்க அணிகலன்கள் வட்டி கடையில் வைக்கப்பட்டு குடும்பம் நடத்த வேண்டிய அவல நிலைமை..!!

காலம் மாறியது கர்மவீரர் காமராஜர் தனது அயராத உழைப்பால் தமிழகத்தின் முதல்வர் ஆனார். ஏழைகளுக்கு கல்வியை இலவசம் ஆக்கினார்.இன்றளவும் மக்களுக்காக மக்களின் பொருட்டு வாழ்ந்த அற்புத தலைவர் காமராஜர்.

ஏனெனில் வறுமை அவருக்கு வாழ்க்கை இன்னதென்று விளங்க செய்தது .




வாழும் சரித்திரம் திரு. அப்துல் கலாம் அவர்கள் ராமேஸ்வரத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார் .தனது பள்ளி படிப்பு செலவிற்கு வீடு வீடாக அவர் பத்திரிக்கை போட வேண்டிய நிலைமை. கலாம் அவர்கள் தோய்ந்து போகவில்லை, கனவுகளை ,நம்பிக்கையை இழக்கவில்லை மாறாக உழைத்தார் ,தாய் திரு நாட்டின் கொவ்ரவம் காக்கும் உயரிய பதவிகளை அலங்கரித்தார்..வின்ஞாநியானார்..நாட்டின் ஜனாதிபதியாகி பல இளைய தலைமுறையினருக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறார்.
உண்மையில் செல்வம் கற்று கொடுக்கும் பாடத்தை காட்டிலும் வறுமை அற்புத பாடத்தை மனிதர்களுக்கு கற்று கொடுக்கிறது.அது தன்னம்பிக்கை,கடின உழைப்பு,மனித வாழ்கையின் மதிப்பு சகலத்தையும் கொடுத்து மனிதனை மாமனிதனாக உயர்த்தி காட்ட வல்லதாய் இருக்கிறது !


தெரு விளக்கு வெளிச்சத்தில் கல்வி பயின்று .மேல் நாட்டினறேல்லாம் வியந்து பாராட்டிய வியத்தகு அறிவு திறன் கொண்ட பேரறிஞர் அண்ணா ஒரு சாதரண ஏழை குடும்பத்தில் பிறந்தவரே.
தமிழ் நாட்டின் முதல்வராகி "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்" என கூறியதன் முழு அர்த்தத்தையும் வேறு யார் அறிவர் ?.வாழும் கடைசி காலம் வரை எளிமையோடு வாழ்ந்து வரலாற்றை தனதாக்கி கொண்டார்



எம்.ஜி.ஆர் நாம் எல்லாம் அறிந்த வசிகர தலைவர்..ஏழைகளின் பால் அதிக அன்பு கொண்டதால் மக்கள் திலகம் என அழைக்கபட்டார். தந்தையின் மறைவின் பிறகு அரிதாரம் பூசி நடிக்க வந்தார். தனது புத்தி கூர்மையால்,வசிகரத்தால் மக்களின் இதயங்களில் இடத்தை பிடித்து தமிழகத்தின் முதல்வராகி ..பசி தீர்க்கும் மத்திய உணவு திட்டத்தை அமல் படுத்தினார்.இறக்கும் வரை ஏழை பங்காளனாய் வாழ்ந்தார் எம்.ஜி.ஆர்.





பண்ணயபுரத்தில் ஞானதேசிகனாய் தோன்றிய இளையராஜா ஒரு கிராமத்து ஏழை குடும்பத்தில் பிறந்தார். வறுமை விரட்டியதில் இவரின் இசை செல்வம் இப்போது பட்டிதொட்டிகளில் எல்லாம் ஒலித்தபடி உள்ளது.சிம்பொனி அமைத்து..திருவாசகம் பாடி மனித மனதினை வருடி கொடுக்கும் இசை ஞானி வறுமையை கண்டு அஞ்சிடவில்லை!





அமெரிக்க ஜனாதிபதி அப்ரகாம் லிங்கனை அறியாதவர் யாருமில்லை.அடிமை தனத்தை ஒழிக்க அரும்பாடுபட்ட லிங்கன்.கல்வி அறிவட்ட்ற ஏழை விவசாய பெற்றோர்க்கு மகனாக தோன்றிய வரே !
அமெரிக்க தொழில் மேதை ராக் பெல்லர் வசதியட்ட்ற ஒரு ஏழை குடும்பத்தில் தோன்றியவர்தான் ,படிக்க வசதியற்று வளர்ந்த ராக் பெல்லர் உழைப்பை மூலதனமாக கொண்டு அமெரிக்க பெரும் பணக்காராக மாறினார்.




இந்தியாவை மற்ற உலக நாடுகள் எல்லாம் வியப்போடு பார்க்கின்ற வகையில்.ரிலையன்ஸ் தொழிற்சாலையை அமைத்தவர் அம்பானி அவர்கள்.சாதாரன மனிதராக முன்னுறு ரூபாய் சம்பளத்தில் யேமென் நாட்டில் உழைத்தவர்..இன்று இந்தியாவின் பொருளாதாரத்தை அளகிடகூடிய வகையில் உள்ளது ரிலையன்ஸ் குழுமத்தின் வணிகம்.
இப்படி நீண்ட பட்டியல் சரித்திரம் முழுக்க பதிவு செய்யப்பட்டுள்ளது.
வறுமை கனவுகளை சிதைக்கும் ஆனால் துவண்டு விடாதீர்கள்.மாறாக கடின உழைப்பினால் மீண்டும் பலருக்கு அந்த கனவுகளை நீங்கள் ஏற்படுத்த கூடும் !!
வறுமையால் பண்பட்டு மேலே வந்தவனே உண்மையில் வாழ்கையை உண்மையாக வாழ்ந்தவனாகி போகின்றான்! .அவனுக்கு வாழ்கையின் வலியும்,உழைப்பின் அர்த்தமும் தெரியும்!
வளரும் பருவத்தில் வறுமை கொடியது எனினும் அது பல சரித்திர புருழர்களை உருவாக்கி கொடுத்து சென்றுள்ளது.
உழைப்பு...!
ஒழுக்கம்..!
தன்னம்பிக்கை..!
சோதனையிலும் மனம் தளராத நிதானம் ..!
இவை எல்லாம் வறுமை எனும் நோய்க்கு மருந்தாகும்.
இவர்கள் எல்லோரையும் நினைவு கூர்வதின் மூலம் இன்றைய சமுகத்தில் தன்னொளி பரவும்.வறுமையை வென்று சாதித்து வரலாற்றின் பக்கங்களில் தங்களையும் தாய் திரு நாட்டையும் உயர்த்தி பிடித்த... பிடிக்க இருக்கின்ற அனைவர்க்கும் இந்த பதிவு ஒரு சமர்ப்பணம் !