வியாழன், 29 ஜனவரி, 2009

வாழ்க்கை - எனது பயணத்தில் ....


வானம் முழுதும் சிதறி கிடக்கின்ற நட்சத்திரங்கள் பல யுகங்களாய் மாறாமல் இந்த பூமியை பார்த்து சிரித்தப்படி உள்ளன.நான் ஏழு வயதில் பார்த்த அதே வானம் இன்றைய என்னுடைய என்பது வயதிலும் அதே நிர்மல்யத்துடனும் ,தெளிவுடனும் உள்ளது.



ஏனோ விளங்கி கொள்ளமுடியாத ரகசியங்களை வானம் வைத்து கொண்டிருப்பதாக அந்த சின்னஞ்சிறு வயதில் எனக்கு பட்டது. கடந்து செல்கின்ற மேகங்கள் எங்கு செல்கின்றன ? என்பதை அறிந்து கொள்ள வானத்தை அண்ணாந்து பார்த்தபடி வெகு தூரம் நடந்தேன் ,கால் வலித்ததுதான் மிச்சம் !


அந்த நட்சத்திரங்கள் என்னை பார்த்து சிரிப்பது போல் அந்த சிறு வயதில் எனக்கு பட்டது .ஏழு வயது சிறுவனாக நானும் நட்சத்திரங்களை பார்த்து சிரித்தேன்



இன்றைய இந்த முதிய வயதில் மங்கி போன என்னுடைய பார்வையில் அந்த வானம் எப்போதும் போல் அதே நிர்மல்யத்துடனும் ,தெளிவுடனும் உள்ளது.நடுக்கமுறும் என்னுடைய முதிய கரங்களில் என்னுடைய நாட்குறிப்பின் இறுதி பக்கங்கள் உள்ளன. இந்த பக்கங்கள் தீருமா அல்லது மை தீர்ந்து போகுமா? என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை.

பல கோடையும்,குளிரும் இந்த வயது வரை நான் பார்த்தாகிவிட்டது .தந்தை,தாயின் மடியில் விளையாடிய அந்த இனிய காலங்கள் ...பருவத்தை போல் கடந்து போய் விட்டது .
வாழ்கையின் மேடு பள்ளங்களை கடந்து முச்சிரைக்க நான் ஓடி கொண்டிருந்தபோது .தந்தையும் தாயும் மறைந்து போனார்கள்.இனி என்ன என்று வானத்தை நான் அன்று அண்ணாந்து பார்த்த போது அன்றும் நட்சத்திரங்கள் என்னை பார்த்து சிரித்தன !!.




வாழ்கையின் ஜீவித போராட்டம் தொடர்ந்தது வயிற்று பசியில் உலகின் பொய் தோற்றம் என்னவென்று தெரிந்து போயிற்று ! சுவாசம் முட்டி நீரின் அடியில் அழுத்துவது போல் வாழ்கை என்னை உள்ளிழுக்க தொடங்கியது !நான் மேலே நீந்தி வர போராடினேன். உள்ளே முங்கி விடாமல் இருப்பதற்கு தொடர்ந்து நீந்தினேன் , முச்சிரைதேன் அதுவே வாழ்க்கை என்று அநேகம் பேருக்கு தெரியாமல் இருந்தது.ஆனால் அந்த வானத்து நட்சத்திரங்கள் மட்டும் வழக்கம் போல் பூமியை பார்த்து சிரித்தப்படி இருந்தது !
மனைவி பிள்ளைகள் என்று தனியாக இருந்த எனக்கு உறவுகள் ஏற்ப்பட்டன ..மீண்டும் ஜீவித போராட்டம் தொடர்ந்தது..ஒரு மாலை வேளையில் என்னுடைய பிள்ளையை தேடி நான் மாடிமீது வந்தேன் .அவன் வானத்தை அண்ணாந்து பார்த்து சிரித்தபடி இருந்தான்.வெகு தூரத்தில் வானம் ,நிர்மல்யமாகவும்,தெளிவுடனும் இருந்தது. "மேகங்கள் எங்கு போகின்றன அப்பா ?" ஏழு வயது சிறுவனாக என்னை பார்த்து அவன் கேட்டான் !அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் வானத்தை அண்ணாந்து பார்த்தேன் வானத்து நட்சத்திரங்கள் எங்கள் இருவரை பார்த்தும் அன்று சிரித்தது.



கோடையும், குளிரும் போல,மழையும்,வெயுலும் போல பருவங்கள் கடந்து போகின்றன பால்யம்,இளமை,முதுமை என வாழ்கையின் பருவங்கள் வந்து நிற்கின்றன



நடுக்கமுறும் என்னுடைய முதிய கரங்களில் என்னுடைய நாட்குறிப்பின் இறுதி பக்கங்கள் உள்ளன. இந்த பக்கங்கள் தீருமா அல்லது மை தீர்ந்து போகுமா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை.!!




கடவுளை தேடி...!!



வார்த்தைகள் ஏதும் தேவை இல்லை கடவுளை காண நீங்கள் இந்த படங்களை கண்டு செல்லுங்கள் !.நீங்கள் பார்த்தறியாத தூய்மையான ஒரு இடம் தாயின் கருவறை
பனி மூடிய கோபுர சிகரங்கள் ...


அந்தி பொழுதின் சூரிய அஸ்தமனம் .....


வெகு தூரத்தே தெரியும் கம்பீர மலை குன்றுகள்...



சொல்ல வார்த்தை தேவையில்லை..இறைவனுடைய இருப்பிடம் இப்படித்தான் இருக்கும்!!



எங்கும் அமைதி...ஆனந்தம்...


அன்னையின் தழுவல் போல கூடும் மழை..உயிர் தழைக்க இறைவனின் கொடை




வெள்ளி மின்னல்கள் அவனின் சிரிப்பொலிகள் ....

ஏழையின் சிரிப்பில்....வார்த்தைகள் ஏதும் தேவை இல்லை இறைவனை காண..








புதன், 28 ஜனவரி, 2009

நான் சொல்ல மறந்த நிகழ்வுகள் ...



வானம் முழுதும் சிதறி கிடக்கின்ற நட்சத்திரங்கள் பல யுகங்களாய் மாறாமல் இந்த பூமியை பார்த்து சிரித்தப்படி உள்ளன.நான் ஏழு வயதில் பார்த்த அதே வானம் இன்றைய என்னுடைய என்பது வயதிலும் அதே நிர்மல்யத்துடனும் ,தெளிவுடனும் உள்ளது.


ஏனோ விளங்கி கொள்ளமுடியாத ரகசியங்களை வானம் வைத்து கொண்டிருப்பதாக அந்த சின்னஞ்சிறு வயதில் எனக்கு பட்டது. கடந்து செல்கின்ற மேகங்கள் எங்கு செல்கின்றன ? என்பதை அறிந்து கொள்ள வானத்தை அண்ணாந்து பார்த்தபடி வெகு தூரம் நடந்தேன் ,கால் வலித்ததுதான் மிச்சம் !


அந்த நட்சத்திரங்கள் என்னை பார்த்து சிரிப்பது போல் அந்த சிறு வயதில் எனக்கு பட்டது .ஏழு வயது சிறுவனாக நானும் நட்சத்திரங்களை பார்த்து சிரித்தேன்


இன்றைய இந்த முதிய வயதில் மங்கி போன என்னுடைய பார்வையில் அந்த வானம் எப்போதும் போல் அதே நிர்மல்யத்துடனும் ,தெளிவுடனும் உள்ளது.நடுக்கமுறும் என்னுடைய முதிய கரங்களில் என்னுடைய நாட்குறிப்பின் இறுதி பக்கங்கள் உள்ளன. இந்த பக்கங்கள் தீருமா அல்லது மை தீர்ந்து போகுமா? என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை





பல கோடையும்,குளிரும் இந்த வயது வரை நான் பார்த்தாகிவிட்டது .தந்தை,தாயின் மடியில் விளையாடிய அந்த இனிய காலங்கள் ...பருவத்தை போல் கடந்து போய் விட்டது .


வாழ்கையின் மேடு பள்ளங்களை கடந்து முச்சிரைக்க நான் ஓடி கொண்டிருந்தபோது .தந்தையும் தாயும் மறைந்து போனார்கள்.இனி என்ன என்று வானத்தை நான் அன்று அண்ணாந்து பார்த்த போது அன்றும் நட்சத்திரங்கள் என்னை பார்த்து சிரித்தன !!.






வாழ்கையின் ஜீவித போராட்டம் தொடர்ந்தது வயிற்று பசியில் உலகின் பொய் தோற்றம் என்னவென்று தெரிந்து போயிற்று ! சுவாசம் முட்டி நீரின் அடியில் அழுத்துவது போல் வாழ்கை என்னை உள்ளிழுக்க தொடங்கியது !நான் மேலே நீந்தி வர போராடினேன். உள்ளே முங்கி விடாமல் இருப்பதற்கு தொடர்ந்து நீந்தினேன் , முச்சிரைதேன் அதுவே வாழ்க்கை என்று அநேகம் பேருக்கு தெரியாமல் இருந்தது.
ஆனால் அந்த வானத்து நட்சத்திரங்கள் மட்டும் வழக்கம் போல் பூமியை பார்த்து சிரித்தப்படி இருந்தது !
மனைவி பிள்ளைகள் என்று தனியாக இருந்த எனக்கு உறவுகள் ஏற்ப்பட்டன ..மீண்டும் ஜீவித போராட்டம் தொடர்ந்தது..ஒரு மாலை வேளையில் என்னுடைய பிள்ளையை தேடி நான் மாடிமீது வந்தேன் .அவன் வானத்தை அண்ணாந்து பார்த்து சிரித்தபடி இருந்தான்.வெகு தூரத்தில் வானம் ,நிர்மல்யமாகவும்,தெளிவுடனும் இருந்தது. "மேகங்கள் எங்கு போகின்றன அப்பா ?" ஏழு வயது சிறுவனாக என்னை பார்த்து அவன் கேட்டான் !
அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் வானத்தை அண்ணாந்து பார்த்தேன் வானத்து நட்சத்திரங்கள் எங்கள் இருவரை பார்த்தும் அன்று சிரித்தது.




கோடையும், குளிரும் போல,மழையும்,வெயுலும் போல பருவங்கள் கடந்து போகின்றன பால்யம்,இளமை,முதுமை என வாழ்கையின் பருவங்கள் வந்து நிற்கின்றன





நடுக்கமுறும் என்னுடைய முதிய கரங்களில் என்னுடைய நாட்குறிப்பின் இறுதி பக்கங்கள் உள்ளன. இந்த பக்கங்கள் தீருமா அல்லது மை தீர்ந்து போகுமா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை.!!



திங்கள், 26 ஜனவரி, 2009

புத்தனாய் மாறிய சித்தார்த்தன்...!


இன்றைய நேபாளில் சுத்தோதன மகா ராஜாவிற்கும் ,அரசி மாய தேவிக்கும் ஒரு முழு பௌர்ணமி நாளில் ஒரு ஆண் பிள்ளை பிறந்தது.சித்தார்த்தன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார் தந்தை சுதோதனர் . கிறிஸ்து பிறப்பதற்கு ஐய்நூட்ட்ரி எண்பத்தி ஆறு ஆண்டுக்களுக்கு முன் புத்தர் சித்தார்தானாய் இந்த மண்ணில் தோன்றினார்



புத்தருடைய பிறப்பும்,ஞானம் அடைந்தது மற்றும முக்தி அடைந்த மூன்றும் முழு பௌர்ணமி நாளிலேயே நடைபெற்றது அதையே புத்த பூர்னிமாவக உலகம் கொண்டாடுகிறது


புத்தன் என்றால் விழிப்பு நிலையை அடைந்தவன் என்று அர்த்தம் !.இரண்டாயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு மேலும் புத்தருடைய போதனைகளும்,கோட்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டு அவர் வணங்கபடுகிறார்.



பண்டிதர்கள் சித்தார்த்தன் உலக வாழ்கையை துறந்து ஒரு ஞானவானாகி விடுவார் என்று உரைத்ததை சுத்தோதன ராஜா பொய்யாக்க விரும்பினார் . அன்றிளிரிந்து உலக வாழ்கையின் நிகழ்வுகள் எதுவும் சித்தார்த்தனுக்கு தெரியாதவண்ணம் சுக போகமாக வாழ சித்தார்த்தன் ஆட்படுத்தப்பட்டான்






பதினாறு வயதில் அழகு மிக்க யசோதரையை திருமணம் செய்துவிக்கப்பட்டார் புத்தர் .பத்தி மூன்று ஆண்டுகள் இன்பமான இல்லற வாழ்கையும் ..ஒரு பிள்ளையும் பெற்றெடுத்தார் சித்தார்த்தன் .ஆனால் விதி ஒரு நாள் அவரை இந்த உலகை காண அரண்மனை வாயிலை தாண்டி வர செய்தது ..அன்றுதான் உண்மையில் சித்தார்த்தன் புத்தனாய் மாறி ஞான பாதையில் பயணிக்க .தொடங்கினான்


முதுமை அவன் கண்ணெதிரே கண்டபோது திடுக்குற்றான் சித்தார்த்தன்,ஒரு சவ ஊர்வலம்,ஒரு ஊனமுற்றவன், இவையெல்லாம் சித்தார்த்தனை புத்தனாக ..ஒரு விழிப்பு நிலை அடைந்தவனாக மாற செய்தது.


நாம் ஏன் அல்லல் படுகின்றோம் ? இந்த கேள்விக்கு ஆசையே எல்லா துன்பத்திற்கும் மூல காரணம் என்று உணர்த்தினார் புத்தர்





ஒரு நள்ளிரவில் மஞ்சத்தில் உடன் படுத்திருந்த மனைவி மற்றும் பிள்ளையை விட்டு அரண்மனை வாயிலை தாண்டி காட்டை நோக்கி நடந்தான் சித்தார்த்தன் ..கடுமையான ஆத்மா விசாரத்தில் மனதிலிருந்தே உண்மைகளை கண்டான் புத்தன்.பின்னாளில் போதி மரத்தின் அடியில் பூரண ஞானம் அடயபெற்றார் புத்தர் .


ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் உண்மையை கண்டும் ,உண்மையை போதித்தும் வந்த புத்தர் தன்னுடைய என்பதாவது வயதில் தன்னுடைய உடலை நீத்தார்.


புத்தனாய் மாருவதுர்க்கு சித்தார்த்தனுக்கு மூன்று உலக நிகழ்வுகள் போது மானாதாக இருந்தது.


இன்றைய ராமலிங்க ராஜுவும் கூட சிறைக்கு பின்னால் புத்தரின் வாழ்கை கோட்பாடுகளை படித்து கொண்டு இருக்கிறார்.ஆசையே அழிவுக்கு வழி என புத்தர் சொன்னது இப்போது ராஜுவிற்கு நன்கு விளங்கும்!!

வியாழன், 22 ஜனவரி, 2009

சுய நல தமிழ் அரசியல்வாதிகளும் - செத்து மடியும் ஈழ தமிழ் இனமும்..!!!


உலகத்தில் இப்பொழுது நடந்து வருகின்ற பல யுத்தங்களும் இரண்டு நாடுகளுக்கிடையே மட்டுமே நடந்து வருகிறது ...! ஆனால் ஈழ தமிழ் யுத்தம் மட்டும் ஒரு இனத்திற்கும் ,ஒரு நாட்டிற்கும் இடையே நடந்து வருகிறது.
வீரமும்,கலாசார பெருமையும் நிறைந்த ஈழ தமிழினம் இப்பொழுது மெல்ல மெல்ல சிங்கள ராணுவ பலத்தால் அழிந்து வருகிறது.


தூய்மையான தமிழுக்கு சொந்த காரர்கள்,சிறந்த உழைப்பாளிகள்,சிறந்த இலக்கிய வாதிகள் நம் ஈழ தமிழ் மக்கள் .
துப்பாக்கி தோட்டக்களாலும், பீரங்கி குண்டுகளாலும் ஒரு இயக்கத்தை அழிப்பதாக கூறி ஒரு இனத்தை அழிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.



சுய நல அரசியல்வாதிகளுக்கு ஈழ பிரச்சினை ஒரு போலி முக மூடியாகும்!.அண்ணா வழியில் வந்தவர்கள்,பெரியாரின் பாசறையில் பயின்றவர்கள் என வெறறு வாய் சவடால் வேறு !எம்.பி க்கள் ராஜினாமா,வித விதமான உண்ணாவிரத போராட்டங்கள்,வேற்று நடந்களாக இப்போது தெரிகிறது.


வார்த்தை ஜாலங்களில் மயங்கி நிற்க நேற்று போல் இன்று தமிழர்கள் இல்லை ! .தமிழினத்தின் காவலர்கள் என்று சொல்லி கொள்ள எந்த அரசியல் வாதிக்கும் அருகதை இல்லை. கோடிகளை சேர்க்க அரசியல் நடத்துபவர்கள் , சுய நல பதவி லாபத்திற்காக நாடகங்களை நடத்தும் கோமாளிகள் இந்த அரசியல் வாதிகள் .இவர்கள் மிக பெரும் கோழைகள்!!




பதுங்கு குழியில் பாடம் பயிலும் எமதருமை தமிழ் மாணவர்கள். நாளைய விடியலில் இன்னும் நம்பிக்கை வைத்துள்ள இளம் ரோஜாக்கள்.இவர்களுக்கு வழி காட்டவும் வழி சொல்லவும் எந்த தமிழின காவலர் வர போகிறார்?


இந்த பதிவினை நான் எழுதுவதால் நான் நாளைய முதல்வராகி விட போவதில்லை.ரத்தம் படிந்த ஈழத்து பதுங்கு குழி மண்ணின் புனிதத்திற்கு இந்த எழுத்துக்கள் ஒரு கண்ணிற் துளி அவ்வளவே !




புலம் பெயர்ந்த தமிழினம் , இலங்கையை வளப்படுத்தியது ..சாலைகளை இட்டும்,கட்டடங்களை எழுப்பியும்,தேயிலை தோட்டங்களை செம்மை செய்தும் வியர்வையால் மெருகேற்றி கொடுத்த தமிழர்கள் இன்று வெறறு மார்பில் தோட்டாக்களை தாங்கி மண்ணில் சாய்கிறது .



வான் புகழ் கண்ட வள்ளுவனை தந்த தமிழினம் ,மொழியினால் ஒன்றுப்பட்ட ஒன்று. அந்த மாண்பு என்றும் அழிந்து விட போவதில்லை !!



நாட்டை ஆளுகின்றவர்கள் பகுத்தறிவை வார்த்தைகளில் மட்டுமே பயன் படுத்தாமல் செயல்களில் காட்டவேண்டும் .நாட்டை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டங்கள் எங்களுக்கு வேண்டாம் கோழைகளே!.காரியங்களை ஆற்றி கொடுங்கள் அதுதான் பகுத்தறிவு !!




உறுதியான முடிவுகளை மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒருமித்து எடுக்க வேண்டும் .இளம் தமிழ் குழந்தைகள் செத்து மடிவதை தடுக்க வேண்டும்.


உலக தமிழ் நண்பர்களே அங்கே செத்து மடிபவர்களின் தியாகங்களையும் ,வலிகளையும் ஆளுகின்றவர்கள் தங்களுடைய மந்த புத்தியில் உணராதவரை விடியல் இல்லை என்பதே நிஜம்.!!

இறந்தவன் பேசுகிறேன்....!!


முடிவற்ற ஒரு நீண்ட பயணத்தின் இடையில் நீங்கள் யார் என்றும் ,நான் யார் என்றும் உங்களுக்கு இப்பொழுது தெரிந்து விடும் !.நான் பலமுறை இறந்திருக்கிறேன் ..ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் கொண்டுவரபட்டிருகிறேன் , நீங்களும் அவ்வாறே பலமுறை இறந்திருக்கிறீர்கள் ஒவ்வொரு முறையும் கொண்டு வரபட்டிருக்கிறீர்கள் !

நீங்கள் பிறப்பதற்கு முன் எங்கிருந்தீர்கள் ? தாயிடமா? தந்தையிடமா? உண்மையில் நீங்களும் , நானும் மட்டற்று பரவி நிற்கிறோம் . தந்தையும் தாயும் நம்முடைய பௌதிக உடலுக்கு வடிவம் கொடுத்தார்கள் !.தாயின் கருமுட்டையும் தந்தையின் விந்து நாதமும் நம்மை பௌதிக உடலுக்கு வடிவத்தை மட்டுமே நல்கியது.

அதிகாலையில் கண் சிமிட்டும் நட்சத்திரங்களை காணும் போதும் ,கோயில் குளக்கரை படிகளிலும், தீண்டி செல்லும் குளிர் தென்றலை உணரும் போதும், மழைக்கு பின் எழும் மண் வாசனையிலும் இவற்றையெல்லாம் நீங்கள் கண்டும், கேட்டும் உணரும் பொழுது என்றோ இவற்றை எல்லாம் நீங்கள் முன்பே கடந்து வந்திருப்பதாக உங்கள் உள் மனது சொல்லும்.

பல நூற்றாண்டுகளாக இவற்றை நீங்கள் அனுபவித்து வருகிறீர்கள் என்பது உண்மை . ஒவ்வொரு முறை நீங்கள் கொண்டுவரப்ப்படும்போதும் இந்த நினைவுகளும், ஆசைகளும் உங்களுக்குள் தேங்கி இருப்பதை நீங்கள் உணர்வீர்கள் !

இன்னும் சற்று உற்று நோக்கினால் நீங்கள் இதுவன்று என்பதை உணர்வீர்கள் ..உங்களுடைய உண்மையான இயல்பு என்னவென்று உங்களுக்கு விளங்கி விடும் .உண்மையில் நீங்கள் இயற்கை எனும் மட்டற்ற சக்தியில் கலந்தே இருக்கிறீர்கள் !



பிறந்து சில மணி நேரங்களில் உங்களுக்கு சிரிக்க யார் கற்று கொடுத்தது ? அந்த உணர்வு எங்கிருந்து வருகிறது ? சற்றே சிந்தித்து பாருங்கள் !.கால்களை பின்னி கொண்டு தூங்குகிறீர்கள் உங்கள் தந்தையை போன்றோ,தாத்தனை போன்றோ !,இது எப்படி நிகழ்கிறது ?

உண்மையில் நீங்களும்,நானும் ,இன்னும் பிறரும் வழி வழியாக கொண்டு வரபடுகிறோம் என்பதே உண்மை .

பௌதிகமான இந்த உடலுக்கு பால்யம்,இளமை, முதுமை என பல வேடங்கள் புனயபடுகிறது. பின்பு அது கலைந்தும் போகிறது ,பின்பு வேறொரு பயணம்,வேறொரு வேடம் ...! நீங்கள் பலமுறை உலகத்தின் பார்வையில் இறந்து போகிறீர்கள் ...மீண்டும் மீண்டும் ஒவொரு முறையும் கொண்டு வரபடுகிறீர்கள் .




வானிலிரிந்து பல கோடி மழை தாரைகள் துளிகளாக பூமியை வந்தடைகிறது...மீண்டும் கடலில் கலந்து ..வான் வெளியை அடைகிறது , மீண்டு மழை துளிகளாக பூமியை அடைகின்றது, இந்த சுழற்சி பல யுகங்களாக நடந்து வருகின்றன!

உண்மையில் நீங்களும் நானும் அந்த மழைத்துளி போன்றவர்கள் தாம் மீண்டும் , மீண்டும் நாம் கொண்டு வரப்பட்டோம் ,கொண்டு வர படுவோம் !!.




முடிவற்ற இந்த நீண்ட பயணத்தில் நீங்கள் யார் என்றும், naan யார் என்றும் இப்பொழுது உணர்ந்திருப்பீர்கள் .அப்படி உணரும் போது உங்களுக்குள் மெல்லிய அமைதி படரும்..அதுவே உங்களுடைய உண்மையான இயல்பு,வடிவம்,ஆழ்ந்த அறிவு எல்லாம்..!

இந்த பயணம் தொடரும்..தொடர்ந்து நாம் பேசுவோம் !!

செவ்வாய், 20 ஜனவரி, 2009

தருமமிகு சென்னை ...!!



வாழ்க்கையில் கரையேற தவிக்கும் எத்தனையோ பேருக்கு எதிர் நீச்சலிட கற்றுகொடுப்பது சென்னை !. படித்தவன்,படிக்கதாவன்,நகரத்தான்,கிராமத்தான் என வாழ்க்கையின் பலதரப்பட்ட மக்கள் சென்னையை வந்தடைகிறார்கள் .எல்லோர்க்கும் ஒரு தேடுதல் ,ஒரு இலக்கு சென்னையை நம்பி அனுதினமும் ஆயிரகனக்கனோர் படையெடுக்கின்றனர்

"திரை கடல் ஓடி திரவியம் தேடு" ,"கெட்டும் பட்டணம் போ" ! என்பதெல்லாம் முதுமொழி.!தொன்று தொட்டு இடம் பெயர்தல் என்பது மனித வாழ்க்கை போராட்டத்தின் ஒரு அங்கமாகி போனது .


வாழ்க்கையில் பலர் போராடி வரலாற்றில் பெயர் பதிக்க சென்னை அநேகம் பேருக்கு உதவியது!. இன்றும் உதவி வருகிறது.


மிக சாமன்யமானவாராய் சென்னையில் அடியெடுத்து வைத்தவர்கள் ..அரியணை ஏறி அரசாட்சி செய்ததும் ,செய்வதும் இன்றைய நிகழ்கால வரலாறு!


சராசரியான மனிதர்களுக்கு சென்னை அரிதாரம் பூசி...திரை நட்சத்த்திரன்காலக பல கோடிகளையும் ,கோடானகோடி மக்களின் மனதிலும் இடம் பிடிக்க வைப்பதும், வைத்ததும் சென்னைதான் !


இன்று மிக பெரும் ஓட்டல் அதிபர்கள்,துணிக்கடை,நகைகடை முதலாளிகள் எல்லாம் பிழைப்பு தேடி சென்னை வந்தடைந்து சாதாரன வாழ்கையை தொடங்கியவர்கள் தான்.


சென்னை உழைப்பை ஏற்று கொள்கிறது, முயற்சி செய்பவனை தட்டி கொடுக்கிறது !




சென்னையின் பரபரப்பு மனித உழைப்பின் அடையாளம் எனலாம். அனுதினமும் தேடுதல்கள் தொடர்க்கின்றன,இன்றும் கூட தென் தமிழ் நாட்டின் பலருக்கு சென்னை ஒரு நியூயார்க் போலவே தெரிகிறது !


எதிர் காலத்தின் மீது நம்பிக்கை வைத்து நிகழ்கால வலிகளை சென்னை வந்தடையும் மக்கள் ஏற்று கொள்கிறார்கள் .




சென்னையின் மற்றொரு முகமாக பலராலும் பேசப்படுவது குறுக்கு புத்தியும்,நயவஞ்சகர்களும் நிறைந்த நகரம் என்பதுதான். எனினும் இவற்ற்றைய்ம் தாங்கி,தகர்த்து மனித உழைப்பிற்கு தனி அங்கிகாரத்தை சென்னை அளிக்க தவறுவதில்லை!.

நீங்கள் மனம் தளர்ந்து ,பாரத்தோடு இருக்கும் பொது சென்னையின் தெருக்களை பாருங்கள்..மனித தன்னம்பிக்கையின் அசைவுகளை நீங்கள் காணலாம்




ஒரு வேலை உணவளித்தால்" தருமம்" என்கிறோம் .ஒரு புதிய வாழ்கையை பலபேருக்கு அளித்து ,உங்களின் நம்பிக்கையை உங்களுக்கு உணர்த்தும் சென்னையை தர்மமிகு சென்னை என்று அழைப்பதில் தவறில்லை தானே ?



வியாழன், 15 ஜனவரி, 2009

அம்மாவ வாங்க முடியுமா..??


இந்த உலகில் பிறந்த எல்லா உயிர்களும் தாய் என்கின்றன ஒப்பற்ற உறவினாலே உயிர்பிக்கபடுகின்றன. ஒருவேளை உங்களுக்கு தங்கை என்கின்ற உறவு இல்லாமல் இருக்ககூடும்,அக்கா,அண்ணன்,தம்பி,மாமா என்று உறவுகள் கூட அமையாமல் இருக்ககூடும் ..ஆனால் தாய் என்கின்ற உறவு இல்லாமல் இந்த உலகில் உயிர்கள் பிறப்பதும் இல்லை..இறப்பதும் இல்லை!!

கரு வயிற்றில் தங்கி மெல்ல மெல்ல வளர்ந்து வரும்போதே உடல் அளவிலும் மனதளவிலும் அதிகமான சுமையை ஒரு தாய் தன்னோடு சேர்த்து வளர்த்து கொள்கிறாள் .

நம்முடைய முதல் உணவு அவளுடைய ரத்ததிளிரிந்து பாலெனும் அமுதமாக,நம்முடைய அடிப்படை உடல் சக்தியாக,அவளுடைய மட்டற்ற கருணையாக நம்மை வளப்படுத்துகிறது .


காலங்கள் பல மாறினாலும் தாய் எப்போதும் தன்னுடைய பிள்ளையை ஒரே மாதிரியே பார்க்கிறாள்.ஒவ்வொரு குழந்தையும் யசோதையின் கண்ணனாக சீராட்டிதான் வளர்க்கபடுகின்றனர்.

மேலே உள்ள படத்திற்கும் இந்த படத்திற்கும் உள்ளார்ந்த அர்த்தம் ஒன்றுதான்.இளமை தொலைந்து முதுமை வந்தாலும் தாய்க்கு தன்னுடைய பிள்ளை அதே பால்ய கண்ணன் தான்!.
அவளுடைய உதிரத்திளிரிந்து நாம் வளர்கிறோம்,அவளுடைய கைகளால் செய்த உணவு நீங்கள் இறக்கும் வரை நிகரற்றதாகவே இருக்கும். பனிக்குடம் உடைந்து உடைந்து இந்த மண்ணில் குழந்தை தோன்றும்போது தாயின் கண்கள் உடைபெடுக்கின்றன,அது வலியினால் ,ஆனந்தத்தினால் ,புதிய பொறுப்பிற்கான மகிழ்ச்சியினால் பிரித்தறிய முடியாத கண்ணிற் துளியது !!
உங்களுடைய ஒவ்வொரு பருவத்தையும் அவள் இரண்டாம் முறை கடக்கிறாள்!. நீங்கள் சிறு வயதில் காய்ச்சலால் கண்ணிற் விடும்போது அவளும் சேர்ந்து கண்ணிற் சுரக்கிறாள்.ஆனால் அவளிடதிரிந்தே நம்பிக்கையையும் ,தாய்மையின் கருணையையும் நாம் பெறுகிறோம் ,வளர்கிறோம் .
காலங்கள் மாறுகிறது நம்முடைய ,உடலும்,உணர்வுகளும் மிக சுதந்திரம் பெறுகின்றன ..நம்மால் நிற்க இயலும் என்று முழுதுமாக நினைக்கும் போது நாம் நம்முடைய ஆதி அந்தத்தை மறந்தே போகிறோம் .
வார்த்தைகளால்,செயல்களால் நாம் அதி அற்புத மேதாவிகளாக நாம் கற்று கொண்ட பாடத்தை வேறு மாதிரியாக நம்முடைய தாய்க்கு தெரிய படுத்துகிறோம் . நமக்கென்று ஒரு குடும்பம் அமையும்போது அவள் முற்றிலுமாக மறக்கபடுகிறாள் ,மறுக்கவும் படுகிறாள்.
பல முதியோர் இல்லங்கள் நாட்டில் பெருகிவிட்டன ,நமது இன்றைய கற்றறிந்த சமுதாயம் வேர்களை உணராமல் கனிகளுக்காக வானத்தை அண்ணாந்து பார்க்கின்றன.இந்த உலகில் எதை வேண்டுமானாலும் பணம் கொடுத்து வாங்கி விடலாம்..ஆனால் தாய் என்ற உயிர்ப்பு நிறைந்த உறவை வாங்க இயலுமா?
நீங்கள் மிகப்பெரிய சாப்ட்வேர் பொறியாளராக இருக்கலாம்,பல லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவராக,பல நாடுகளை அனயாசாமாக கடந்து அறிவு மிக்க வல்லுனாரக இருக்கலாம்!...ஆனால் ஒருகணம் நீங்கள் தவழ்ந்த அந்த மடியை நினைத்து பாருங்கள் ,உங்களுடைய முதல் உலகம்,முதல் படிப்பு அங்கிருத்து வந்தது தானே ??.

நாளைய நம்முடைய சமுதாயம் நன்றி மிக்கதாக, செயல் அளவில், ஆத்மர்த்துவமாய் நம்மை பெற்றவளை மறந்து போகாமல் இருக்கவும் நம்முடைய விழுதுகள் தவறாமல் இருக்கவும் காத்து கடமையை செய்வோம் !!

சந்தனகட்டை வீரப்பன் !!- சில தகவல்கள்


கூஸ் முனிசாமி வீரப்ப கொவுன்டேர் என்பது வீரப்பனின் இயற்பெயர் .கோபினதத்தில் முனிசாமி கொவேண்டேருக்கும் ,புனியத்தம்மாவிக்கும் கோபிநத்தத்தில் பிறந்தார் வீரப்பன் (1952 - 2004) தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார்.
இரண்டாயிரம் யானைகளை சுவாக செய்தார் வீரப்பன்,நூற்றி இருபத்து பேரை போட்டு தள்ளி,பத்தாயிரம் ton சந்தன கட்டைகளை கடத்திய மாமனிதர் வீரப்பன்
தன்னுடைய பத்து வயதில் முதன் முதலாக ஒரு யானை கொன்று பாராட்டுதல்களை பெற்றார் வீரப்பன் .ஆயிரத்தி தொள்ளயிரத்தி எழுபத்தி ரெண்டு மற்றும்,எண்பத்தி ஆறில் போலீசாரால் பிடிக்கப்பட்டும் தப்பித்தவர் வீரப்பன்


நக்கீரன் கோபால் அவர்கள் தூதுவரை அரசு சார்பில் சில முறை பேச்சு வார்த்தைகளை நடத்தினார்.கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை கடத்தி சிம்ம சொப்பனமாக விளங்கினான் வீரப்பன்


2004 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்டாலும், சாவில் மர்மம் நீடிக்கிறது


வீரப்பன் மனைவி முத்துலக்ஷ்மியுடன் வீரப்பன் மகள்கள்


நெற்றியில் குண்டடிபட்டு வீரப்பன் சடலமாக





வெள்ளி, 9 ஜனவரி, 2009

இந்தியா என்றொரு ஏழை நாடு !!

நம்மில் பல பேர் இப்படித்தான் பேசுவோம் " இந்தியர்கள் சாப்பிட மட்டுமே லாயக்கு ". உலகில் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆங்கிலேயர்களும்,இதாலியெர்கலும்,கிரேக்கர்களும் கண்டுபிடித்து உலகுக்கு
சொன்னபோது...இந்தியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? .மரணத்தை எதிர் நோக்கி காத்து கொண்டிருந்தார்கள் மேலே உள்ள புகை படம் அதற்கு ஒரு சான்று.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை வறுமையும் ,அறியாமையும்,அடிமைத்தனமும் பற்றி கிடந்தது .ஒரு வேலை சோற்றுக்கு வழி இல்லாமல் இருந்தபோது ...புத்தியும் அறிவும் உயிரை காத்து கொள்ளவும் அடிப்படை தேவைகளை பற்றி என்னவுமே அன்றைய நமது தாத்தனுக்கும் பாட்டனுக்கும் போதுமானதாக இருந்தது !!

ஒரு பக்கம் மாட மாளிகைகளும் ,பணத்தை ஆடம்பரமாய் செலவு செய்யும் ஒரு கூட்டம் இருந்தாலும் சாமானியர்கள் இன்னும் தெரு முனையில் கையில் தட்டேந்தி நிற்கின்ற அவல நிலைமை நாளைய வல்லரசாகும் இந்தியாவின் இன்றைய நிஜம்.
தங்கம் வேய்ந்த கோபுரங்கள், வைரம் பதித்த கவசங்கள்,பளிங்கு மண்டபங்கள் ,இப்படி ஒரு பக்கம் பட்டியலிட்டாலும் ..முரண்பாடுகளும் சம்நிலயட்ட்ற வாழ்கையின் ஒத்த உருவாய் நமது இந்தியா நம் கண் முன்னே உள்ளது


உலகின் தலை சிறந்த தத்துவங்களும்,தென் கிழக்கு ஆசிய முழுதும் பரவி நிற்கின்ற புத்த மதமும் இந்த அஹிம்சை பூமியிலிரிந்து சென்றது தான் !.கீதையும்,வேதங்களும் இன்னும் பிற கலாசார முத்திரைகளையும் இந்தியா இந்த உலகிற்கு கொடுத்தாலும் அவற்றின் அடிப்படை வறுமையின் வேர்களில் விளைந்த kaநிகலாகவே அறியப்படுகிறது.
செல்வ செழிப்பு மிக்கவனுக்கு உள்முகமாய் மரணத்தை,குறித்தும் ஆத்மாவை குறித்து தீர விசாரிக்கின்ற இயல்பு இல்லாமல் போனதில் வியப்பில்லை.ஆனால் நாம் வாழ்கையின் உள்ளார்ந்த அர்த்தத்தை கண்டு பிடிக்க வறுமையும் ஒரு காரணமாகவே போனது

படிப்படியாய் பொழுது புலர்ந்து இன்றைய விடியலிலும் நேற்றைய சாயலும் பதிவும் நம்மிடையே தேங்கி கிடக்கிறது.வறுமை இன்னும் இந்த பூமியை விட்டு நீங்கிடவில்லை.
இந்தியர்கள் அறிவு சார்ந்த சமுகத்தை சேர்ந்தவர்கள்.தங்களுடைய அறிவாட்ட்ராளால் பல தேசங்களில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வாழ்ந்து காட்டுகிறார்கள்
இன்றைய உலகின் தலை சிறந்த பல துறைகளில் இந்தியர்களின் பங்கு குறிப்பிடகுடிய வகையில் உள்ளது

நாட்டின் வறுமைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் புரையோடி போன அரசியலும், இந்திய சட்ட அமைப்புகளுமே முக்கிய காரணம் .சுய நல அரசியல் ஒரு பணம் கொழிக்கும் தொழிலாக இந்தியாவில் உள்ளது.சமையலறையில் வேலை பார்க்கும் மனைவியை முதலமைச்சராக மாற்றி காட்டும் சட்டமும்,அரசியலும் இன்றைய நிதர்சனம்


புகை வண்டியில் செல்லும் போதும்,பேருந்தில் செல்லும்போதும் நீங்கள் நிஜமான இந்தியாவை காணலாம். பிச்சை எடுக்கும் சிறார்கள், வீதியின் இருமருங்கிலும் வாழ்கை நடத்தும் ஆயிரகணக்கானோர் , வறுமையின் வாட்டத்தை வெளிப்படுத்தும் உருக்கமான பாடல்கள் ,சில்லறை தட்டில் விழும் ஓசை ,அன்ன தானம் பெற்றுக்கொள்ள நீண்ட கூட்டம் இப்படி நிஜ இந்தியாவின் தரிசனம் ....!
உனக்கு இலவச அரிசியும், கட்டிக்கொள்ள வேட்டியும் சட்டையையும் தருகிறேன் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு வருமையோடே இரு என்று சொல்லும் இந்திய அரசியல் தலைவர்கள் உள்ளவரை நமது விடியல்கள் தள்ளி போடப்படும் என்பதே யதார்த்தம் !!