வியாழன், 8 ஜூலை, 2010

நாம் எங்கே தொலைந்தோம் ?

நாம் நன்றாக புரிந்துகொண்டதாக நினைக்கின்ற நமது வாழ்க்கை ,உண்மையில் முற்றிலும் அர்த்தம்மற்று,மனம் மருத்துப்போன,சுயம் இழந்து ,எதனை ? எதற்க்காக?ஏன்? பெற நாம் ஓயாது ஓடி கொண்டிருக்கிறோம் என்று சிந்திக்க கூட விருப்பம் மற்று இந்த வாழ்க்கை அனுதினமும் ஓடி கொண்டிருக்கிறது !

சின்னஞ்சிறு வயதில் நாம் சந்தித்த இனிமையான அற்புதமான மனிதர்களும்,நிகழ்வுகளும் கனவு போல் நமக்கு தோன்றுகிறது.அன்று நாம் பார்த்த தாயும்,தந்தையும் ,பள்ளியும்,தொழர்ர்களும் கூட நமக்கு அந்நியமாய் தோன்றுகிறது,ஏனனில் நாம் மறுத்து போன ஒரு பொருள் பூர்வமான வாழ்கையில் கால் புதைந்து நம்மை தொலைத்து விட்டோம் .



உண்மையில் தொலைந்து போன எத்தனையோ விழயங்களில் அதி முக்கியமான,மனிதர்களின் மீதான அன்பும், விசுவாசமும்,நம்பிக்கையும் மிக முக்கியமானதாகவே எனக்கு தோன்றுகிறது.

பல தேசம் கடந்து,பணம் ஈட்ட சென்றவர்களின் வாழ்கை நிலை மேலும் பரிதாபமானது,இழந்ததும் இழக்க போவதும் ஈடு செய்ய முடியாத ஒன்று எனலாம்.

நம்பிக்கை,வாழ்கையின் மயத்திலிரிந்து விலாகாத ஒரு உறுதி,சுடர் விடும் அறிவு,துன்பம் கண்டு துவளாத தன்மை,போராட்டம் தன வாழ்கை என்று அறிந்தாலும் வாழ்கையின் மயத்திலிரிந்து விலாகாமல்,அதன் அர்த்தம் மாறிடாமல் வாழுகின்ற தன்மை இதுதான் நம்முடைய ஒவொவொரு நாள் சிந்தனயில் இருக்க வேண்டும்!



பணம் மட்டுமே வாழ்கை இல்லை,பணம் இல்லாமலும் இந்த வாழ்கை இல்லை! எனினும் இரண்டின் எல்லைகளையும் உணர்ந்தது வாழ இன்று முதல் சிந்திப்போம்

திங்கள், 12 அக்டோபர், 2009

மரணம் என்றொரு போதி மரம் !!!


பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தை வாழ்க்கை என்றொரு மிக அர்த்தம் பொதிந்த வார்த்தையால் நாம் அடக்கிவிடுகிறோம் .மண்ணில் முளைத்ததெல்லாம் மீண்டும் மண்ணுக்கே சென்று ஒன்றென கலந்து விடுகிற விந்தையை,ஒரு சுழற்சியை பெரும்பாலோர் யாரும் வாழுகின்ற காலத்தில் அவ்வளாவை நுணுகி ஆராய்ந்து பார்த்ததில்லை எனலாம் !.



போராட்டம் நிறைந்த வாழ்க்கையில் முச்சு முட்ட நாம் ஓடி கொண்டே இருக்கின்றோம் ! கல்வி,திருமணம்,பிள்ளைகளின் படிப்பு, எதிர்கால திட்டங்கள் என பல வித தேடல்களில் நாம் பிறழ்ந்து பொய் எதையோ தேடி கொண்டிருக்கிறோம்,


நிறைந்த பணம் சேர்தவனும், அழுக்கு ஆடை தரித்த பிச்சை காரனும் இறுதியில் ஒரே இடத்திற்கே இறுதியில் சென்று சேர்கிறார்கள் .நிலம்,தோப்பு,வீடுகள்,தொழில் என பலதரப்பட்ட செல்வத்தை குவித்து விட்டு உப்பில்லாத உணவும்,நோயுற்று படுக்கையில்,உணர்வற்று அடங்கி கிடப்போர் இறுதியில் கொண்டு செல்வது எதனை?


மரணம் ஒரு மிக சிறந்த போதி மரம் !!.மரணத்தை குறித்து நன்கு அறிந்தவன்,அதை எதிர் கொள்ள தயங்காதவன் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்தவனாகி விடுகிறான்.






இருபத்தி ஆறு வயதில் ஐ.எ.எஸ் கனவுகளோடு இருந்த ஒரு இளைஞ்சன் காய்ச்சல் என்று சோதனைக்கு சென்ற போது ,புற்று நோய் இருப்பதாக அறிந்து அந்த நொடியில் அவனுடைய வாழ்க்கை எதை உணர்த்தி இருக்கும்?
ஒரு மாத கை குழந்தையை தவிக்க விட்டு மரணம் ஒரு தாய்க்கு எதனை சொன்னது?
மரணம் ஒரு மிக சிறந்த போதி மரம்! அதை நன்கு உணர்ந்தவனும்,சிந்திதவனும் என்றும் வாழ்ந்தபடி உள்ளான்