சனி, 11 அக்டோபர், 2008

முதல் மற்றும் இரண்டாம் உலக போர் -அறிய வேண்டிய அரிய தகவல் ,படங்கள்

இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப்போர்

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காணப்பட்ட இரண்டு வெவ்வேறுபட்ட அரசியல்,போரியல் முரண்பாடுகளின் சேர்கைக் காரணமாக உலகின் பெருமாபாலன் பகுதிகளில் நடைபெற்ற பாரிய போர் இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப்போர் 2 என அறியப்படுகிறது.

முதல் முரண்பாடானது 1937 ஆம் ஆண்டு ஆசியாவில் இரண்டாம் சீன யப்பானிய போராகவும் மற்றையது ஐரோப்பாவில் யேர்மனியின் போலந்து மீதான ஆக்கிரமிப்புப் போராகவும் தொடங்கியது. உலகலாவிய அளவில் நடைப்பெற்ற இந்தப்போரின் போது பெரும்பான்மையான உலக நாடுகள் நேச, அச்சு நாடுகள் என இரண்டாக பிளவுபட்டு போரிட்டன.

மனித வரலாற்றில் மிகவும் அழிவுமிக்க சம்பவமான இப்போரின் போது 70 மில்லியன் பேர்வரை பலியானார்கள்

இப்போரில் தான் முதன்முதலாக அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா சின்னப் பையன், கொழுத்த மனிதன் என்று பெயரிடப்பட்ட இரு குண்டுகளை ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்கள் மீது வீசியது




முதல் உலகப்போர்
1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன்.

இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன. போர் விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப் பட்டன.
நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரிய, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி யோடு போரிட்டதே முதல் உலகப்போர் ஆகும்.








போர் மனித குலத்தை துவம்சம் செய்த வரலாறுகள் பல இருந்தும் இன்னும் உலகம் திருந்திய பாடில்லை