சனி, 28 பிப்ரவரி, 2009

மனைவி..! - உயிரின் உயிராய்....!!


ஒரு மனிதனை மனிதனாக வாழ செய்யவும் ,மன நோயாளியாக மாற்ற செய்யவும் மனைவி என்கின்றன ஒப்பற்ற உறவால் இயலும்!.நமது கலாச்சாரத்தில் தொன்று தொட்டே மனைவிக்கு இலக்கணங்கள் வகுக்கப்பட்டு வழி வழியாக சுட்டி காட்டப்படுகின்றன. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள் அது ஆயிரம் மடங்கு அர்த்தம் பொதிந்த வாக்கியம் .!.


இந்த அனுபவ பதிவு ஒரு சிலருக்கு வாய்த்திருக்கும்! வாய்க்கவில்லை எனில் உங்களுடைய மனைவிக்கு இதை அஞ்சல் செய்யுங்கள்.




உடம்பு சில்லிட தொடங்கியது ,சுவாசிப்பது சிரமமாக இருக்க என்னை சுற்றிலும் மருத்துவர்கள் பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்தார்கள் .எனது மங்கி போன பார்வையில் தெளிவற்ற அந்த மருத்துவமனையின் அறை தெரிந்தது . என்னுடைய பிள்ளைகளிடத்தில் மருத்துவர் ஒருவர் ஏதோ சொல்லி கொண்டிருக்கிறார்.




என்னுடைய இறுதி நிமிடங்களா இது ? என்னால் அனுமானிக்க முடியவில்லை !நான் கிளம்ப வேண்டிய தருணம் வந்து விட்டதா ? சிரமப்பட்டு என்னுடைய விழிகள் சுழல்கின்றன .என்னுடைய பாதத்தின் அருகில் என்னுடைய மனைவி அமர்ந்திருக்கிறாள்.






முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக எனக்கு பரிச்சயமான அந்த மங்கலமான முகம் ..இப்போது ஆழ்ந்த மௌனத்தை வெளிப்படுத்துகிறது .அவளுடைய உதடுகள் திரும்ப திரும்ப எதையோ உச்சரித்தபடி இருக்கிறது.நிச்சயமாக அது தெய்வத்தின் பெயராகத்தான் இருக்கும்.
செயலற்று கிடக்கும் எனது கால்களும் கரங்களும் மிக கனமாய் தெரிகின்றன எனது பழைய நினைவுகள் போல.
அந்த பசுமையான நாட்கள் ஞாபகத்தில் உள்ளது..கல்யாணமான புதிதில் ஒரு மழை கால நான் பகலில் ...மழையில் நனைந்த படி நானும் ,அவளும் வீடு வந்து சேர்கிறோம் வீட்டின் வாசற் படி அருகில் மழையில் நனைந்த படி பச்சிளம் ஆட்டு குட்டி நின்று கொண்டிருக்கிறது .நான் உள்ளே சென்று விட்டேன் சற்று நேரம் கழித்து நான் தாழ்வாரம் வந்தபோது என்னுடைய மனைவி ஒரு துவாலையால் அந்த ஆட்டு குட்டியை தொடைத்து கொடுத்து கொண்டிருந்தாள் !
அந்த நிகழ்வில் அவளுடைய தாய்மை அந்த மழை நாளின் ஈரத்தை காட்டிலும் இன்னும் என்னுடைய நினைவிலும் நெஞ்சத்திலும் காயாமல் இருக்கிறது.
என்னையே நம்பி வந்து ..என்னுடைய கோப தாபங்களை,என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து , என்னுடைய சிறு வயது முகத்தை என்னுடைய பிள்ளை களிடத்தில் காண செய்து ..அவர்களை தாலாட்டி, சீராட்டி ஆளாக்கி இன்று வரை ஒரு ஆயாசத்தையும் வெளிபடுதமால் இருக்கும் அவளை..எனது மனைவியை என்றோ என்னுடைய சிறுவயது பள்ளி பருவத்தில் கனவில் வரும் தேவதையை போன்று என்னுடைய நிஜ வாழ்க்கையில் வந்து சேர்ந்து என்னுடைய வாழ்கையை வசந்தமாக்கினாள் .!




சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் குடும்ப வாழ்கை என்கின்றன கட்டுமர பயணத்தை அலைகளின் ஊடே துடுப்பிட்டு கரை சேர்த்த பெருமை அவளை மட்டுமே சேரும்.
என்னுடைய இந்த பிறவியில் பரிச்சயமான எனது தாயின் கருவறையும்,மடியும் பிறிதொரு பிறவிக்கான வாய்ப்பு வழங்க படுமெனில் என்னுடைய மனைவியின் வயிற்றிலே நான் பிறக்க வேண்டும் என்றே விரும்புவேன்,அது ஒரு நன்றியின் அடையாளமாக இருக்கட்டும்.
சுரனயட்ற்ற எனது புலன்களில் அவளுடைய தாய்மை நிறைந்த முகமும்,கனிவு நிறைந்த பார்வையும் என்னக்குள் மெல்லிய அசைவுகளை உண்டு பண்ணுகின்றன..என்னுடைய சுவாசம் சீராகி ..உடலில் மெல்ல உயிர்ப்பு நிறைவதை நான் உணர்கிறேன்.
ஏனெனில் உயிரின் உயிராய் அவள் என்றும் என்னருகில் ..!!





புதன், 25 பிப்ரவரி, 2009

உலகில் வாழ்ந்து காட்டியவர்கள் ..!-- அறிந்து கொள்ளுங்கள் !!


தங்களுக்கு அளிக்கப்பட்ட மனித வாழ்கையை ஒரு வாய்ப்பாக பயன் படுத்தி தங்களுடைய வாழ்கையை உலக சரித்திரத்தில் பதித்தவர்கள் பலர்.


நாட்டின் சரித்திரத்தை மாற்றி,பல அறிவியல் கண்டு பிடிப்புகளை உலகுக்கு வழங்கி . துணிவோடு முன்னின்று வழி நடத்திய அந்த மனிதர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் .


சோதனைகளை கண்டு மனம் தளர்ந்து பின் வாங்கும் இன்றைய இளைஞர்களுக்கு அவர்களை வாழ்கை ஒரு பாடம்.!!


நம் எல்லோருடைய வாழ்கையிலும் விளக்கேற்றி வைத்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் , தன்னுடைய சிறு வயதிலேயே காது கேட்கும் தன்மையை இழந்தவர், முறையான கல்வி அறிவு பெறாதவர்.அனால் எடிசன் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் ஆயிரத்தி தொனூற்றி மூன்று.!! .தளராத உழைப்பிற்கு பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்!



இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் ,தன்னுடைய தனி திறமையால் பல பிரிவுகளாக பிரிந்து கிடந்த இந்திய சமஸ்தானங்களை ஒன்றினைத்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல்
பிரிவு பட்ட இந்தியாவால் பயன் ஏதும் இல்லை என்பதை நன்கு உணர்ந்து இரும்பு கரம் கொண்டு ஐநூற்றி அறுபத்தி இரண்டு சமஸ்தானங்களை ஒன்றினைத்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல்.அதனாலேயே இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கபட்டார்.

வங்காளத்தை சேர்ந்த நேதஜி சுபாஷ் சந்த்ர போஸ் வெகு வெளிப்படையாக இந்திய தேசிய படையை அமைத்து ,அன்றைய பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்திற்கு பெரும் சவாலை உண்டாக்கினார் சுபாஷ்.அன்றைய இளைஞர்களுக்கு சுபாஷ் ஒரு எழுச்சி தீபமாக விளங்கினர்.
ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு அறிய வாய்ப்பாகவே வழங்கப்படுகிறது வெகு சிலரே அதன் நோக்கத்தை நன்கு அறிந்து கொண்டு தங்களுடைய வாழ்கையை உண்மையில் வாழ்ந்து காட்டுகிறார்கள்.

ஒழுக்கம்,ஞானம்,துணிவு என மூன்றின் உருவமாக விளங்கியவர் சுவாமி விவேகானந்தர் .சரித்திரத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் .உனது இலக்கை அடையும் வரை ஓயாதே என்று முழங்கியவர்.

மிக பின் தங்கிய நாடாக அறிய பட்ட இந்தியாவில் இருந்து சிகாகோ சர்வ மத மாநாட்டில் ஒரு ஞான சுடராய் பலரை தன்னுடைய ஞானத்தால் இழுத்தவர் சுவாமி விவேகானந்தர்.



மிக சாதாரன குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அவர்கள் மிக சிறந்த விஞ்ஞானியாக ,நாட்டின் ஜனாதிபதியாக ,பதவி வந்த போதும் எளிமை மாறாத உள்ளம் கொண்டவராக மக்களின் ஜனாதிபதியாக விளங்கியது மற்றுமொரு உதாரணம்
பொருள் சம்பாதிப்பது,பிள்ளைகள் பெற்று அவர்களுடைய வாழ்கையின் பொருட்டு வாழ்வது இவை ஒரு சாதாரன வாழ்கையாகும், இவற்றிலிரிந்து மாறுபட்டு தன்னை சார்ந்த சமுகத்திற்கு,நாட்டிற்கு,உலகிற்கு என வாழ நினைக்கும் போது மனிதன் தன்னுடைய வாழ்கையின் முழு பேற்றினை பெறுகிறான்.
நூறாண்டுகள் வாழ்வது சாதனையாகாது! வாழ்ந்த காலங்களை காட்டிலும் வாழுகின்ற செயல்களின் தன்மை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.


சிறுவயதிலேயே தந்தையை இழந்து தன்னுடைய இசை ஆர்வத்தால் ,படைப்பால்,ஒரு இந்தியானாய்,தமிழனாய் ஆஸ்கார் மேடையில் நின்று பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் இன்றைய வாழும் சரித்திரம் .
நாளைய உங்களுடைய கல்லறை வாசகத்தை இன்று நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள்! அது உங்களின் வாழ்கையின் அர்த்தத்தை சொல்லட்டும்,கால இடை வெளிகளை சொல்வது வாழ்வாகாது.காலத்தை கடந்து நிற்கும் வாழ்வே வாழ்வு
வாழ்வோம் ! வாழ செய்வோம் !!




வியாழன், 19 பிப்ரவரி, 2009

மது...மங்கை...மண்..!! - அழிந்தவர்களும்,மீண்டவர்களும்!!



உலகில் மிக நல்ல நிலையில் இருந்தவர்கள் தங்களுடைய வாழும் காலத்திலேயே அழிந்து தங்களுடைய அஸ்தமனத்தை கண்டவர்களின் பட்டியலை நீங்கள் பார்த்தால் இந்த மூன்று ஆசைகளினாலே அழிந்தார்கள் என்பது நன்கு விளங்கும்.



பண்டைய காலம் தொட்டே மது...மங்கை...மண்.. இந்த மூன்றும் பல அழிக்க முடியாத நிகழ்வுகளை சரித்திரத்தில் அழுந்த பதித்துள்ளதை உலகின் வரலாறு பறை சாற்றுகிறது.



மன்னர்களும்,சக்ரவர்த்திகளும் மண்ணிற்காகவும்,பெண்ணிர்காகவும் படையெடுத்து உயிரை எடுத்தும் இழந்தும் உள்ளார்கள். சுக போகங்களில் திகழ அந்தபுரத்து மஞ்சங்களில் பல தேசத்து பெண்கள்,மதுவை உண்டு மங்கையை சுவைத்து அந்த போதை தந்த மயக்கத்தில் மிக கோரமான போர்கள் நடந்தேறின.




இரண்டு நாட்களுக்கு முன்னால் தொலைகாட்சியில் ஜப்பானிய நிதி அமைச்சர் சோய்ச்சி நக்காகவ G7 நாடுகளின் பொரளாதார சிறப்பு கூட்டதிற்கு வந்தவர் பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அதித போதையில் கண் சொருகி பேச கூட முடியாதவராய் அமர்ந்திருந்ததை உலகம் கண்டது. இப்போது அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது இன்றைய உதாரணம் .
டாக்டர் பிரகாஷ்..நீங்கள் மறந்திராத பெயர்.மிக நல்ல படிப்பாளி,மருத்துவ புத்தகங்களை எழுதியவர்.மிக கேவலமாய் பெண் மோகத்தினால் அவருடைய இருப்பிடம் இப்போது சிறைகம்பிகளுக்கு பின்னால்.படித்தவன் படிக்காதவன் எல்லோரும் இந்த பெண் ஆசையால் நொடியில் தவறி மிக பாதளாதிர்க்கு விழுந்து போகிறார்கள்.
கண்டருறு மோகனரு ...உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? சபரிமலை ஐயப்பனை தொட்டு பூஜை செய்த மேல்சாந்தி!.என்னவானார் தெரியுமா ?.ஒரு வேசியின் வீட்டில் ஏடாகூடமாய் மாட்டி அஸ்தமித்து போனார்.
சதாம் ஹுசைன் ..தனது மிக செல்வம் மிக்க இராக் நாட்டை அழிவின் பாதைக்கு அழித்து செல்ல முக்கிய காரணம் அண்டை நாடான குவைத் மீது படையெடுத்து சென்றதுதான் .இந்த மண் ஆசை இராக்கை நிலைகுலைத்து மட்டுமில்லாமல். சர்வாதிகாரியை உலா வந்த சதாம் பிச்சைகார பரதேசி போல் பதுங்கு குழியில் மறைந்து கிடந்தார்

இந்த ஆசையில் வீழ்ந்து ஞானம் கண்டவர்கள் பலரின் பெயரும் மற்றோர் பட்டியலில் இருக்கவே செய்கிறது.அருணகிரி நாதர் தீவிர பெண் பித்தாராய் அலைந்தவர் நோயினால் புத்தி வந்து மீண்டு திரு புகழை இயற்றி கொடுத்தார்.
கவிஞர் கண்ணதாசன் மது..மங்கை இரண்டிலும் திளைத்தாலும் இந்த தமிழகத்திற்கு பல கருத்தாழம் மிக்க பாடல்களைகவிதைகளை,நூற்களை கொடுத்தார்.
மன்னர் அசோகர் படிஎடுத்தார்,,எல்லை களை விரிவாக்க போர் தொடுத்தார்.போரில் ஏற்பட்ட அழிவை கண்டு முடிவில் அஹிம்சைக்கு தாவினார்.



கள்ளதொடர்பினால் கணவனை மனைவி கொள்வதும்,மனைவியை கணவன் கொள்வதும் இந்த சமுகத்தில் இப்போது நடதேற காரணம்?
அறை அங்குல வாய்க்க தகராறு தலையை வெட்டி கொலை செய்த மனிதர்கள் எத்தனை பேர்?
மதுவின் போதையில் பதவி இழந்து,குடும்பத்தை அழித்தவர்கள் எத்தனை பேர்?
சிந்திப்போம் ..பிறரையும் சிந்திக்க செய்வோம்.!!


ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

இசையும் ஆத்மாவும் ஒன்றென கலந்திடின் ....



இளையராஜா.... மயிலிறகின் மென்மைக்கும், தொட்டு செல்கின்ற காலை தென்றலின் குளுமைக்கும் அர்த்தம் கற்ப்பிக்கும் ஒரு மந்திர சொல் இளையராஜா . இசையின் மூலம் மனித வாழ்கையின் சுகம்,துக்கம்,உறவு,யதார்த்தம் என சகலத்தையும் வெளி கொணர்ந்தவர் இளையராஜா.



தமிழ் சினிமாவை இளையராஜா என்ற அலகு இல்லாமல் அளந்தால் அங்கு வெறும் அர்த்தமற்ற வெற்றிடமே மிஞ்சும்.இளையராஜா ஒரு சகாப்தம் அதை வெறும் வார்த்தைகளால் அடக்கிட முடியாது.



தற்பொழுது வெளிவந்த நான் கடவுள் படத்தில் இடம் பெற்ற ஓம் சிவ ஓம் பாடலின் வெப்பம் இன்னும் அடங்கிய பாடில்லை.இளையராஜா உள்ளுக்குள் இசையின் மூலமாக ஒரு ருத்ர தாண்டவமே ஆடியிருக்கிறார் .உள்ளுக்குள் ஒவ்வொரு அணுவும் அந்த தாண்டவத்தை அனுபவிக்கிறது எனலாம். இந்த பாடலை கேட்ட ஒரு வட இந்திய சாது கண்ணிற் விட்டு அழுததாக கூறுவது உண்மை மட்டுமில்லை அது கண்ணிற் அல்ல ஆன்மாவின் வெளிப்பாடு என்பதே உண்மை!!



சிம்பொனி, திருவாசகம் என இசையின் பரிமாணங்களை தனது ஒப்பற்ற ஆத்ம அறிவால் கொண்டு வந்தவர் இளையராஜா.ஆத்மாவை தொட்டு வெளி கொணர்ந்தவர்க்கு ஆஸ்ஸ்கர் விருது ஒன்றும் தேவை இல்லை.



கிராமத்து வாழ்கையின் யதார்த்தத்தை ,இயற்கையின் இனிய அழகை தனது இசையால் அள்ளி வழங்கிய காமதேனு இளையராஜா.

இசையோடு வாழ்ந்து,இசையையே தெய்வமாய், காணுகின்ற சகலத்திலும் இசையை காணுகின்ற ஒரு மாபெரும் இசை கலைஞரை வெறும் இசை ஞானி என்பது எல்லைகளை சுருக்குவது போன்றதுதான்.




எப்பொழுது ஒரு இசை கலைஞன் தன்னுடைய இசையினால் புலன்களை தாண்டி ஊடுருவி உள்ளுக்குள் சென்று ஆத்மாவை தீண்டி அதனை வெளி கொணர்கிரானோ அப்போதே அவன் ஆத்ம ஞானியாக மாறிவிடுகிறான்.இளையராஜா இசை ஞானி மட்டுமல்ல அவர் ஒரு ஆத்ம ஞானியும் கூட.
இசையும் ஆத்மாவும் ஒன்றென கலந்திடின் அதன் பெயர் இளையராஜா !!.இன்னும் பல யுகங்கள் கழிந்தாலும் இசையின் ஊடே இளையராஜா இந்த நில உலகின் சரித்திரத்தில் இருப்பார்
இந்த சிறிய பதிவு இளையராஜாவின் ஆயிரக்கணக்கான இசை வெளிப்பாடுகளுக்கு ஒரு மிக சிறிய அர்ப்பணம் . வாழ்க இசை ஞானி பல்லாண்டு !!

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

"சோனியா காந்தி" - தேசம் கடந்த காதலின் கதை !!



இந்தியா நன்கு அறிந்த ஒரு பெயர் சோனியா காந்தி . காதல் என்பது மொழி,இனம்,தேசம்,தகுதி இவைகளை கடந்தது என்பதற்கு சோனியா காந்தியின் வாழ்கை ஒரு நிகழ் கால சான்று என கொள்ளலாம் .காதலின் சக்தி தேசங்களை கடந்தது மனம் ஒன்று சேரும்போது மதங்களும்,இனங்களும்,பின் தள்ளப்பட்டு வாழ்கை சக்கரத்தில் நசிந்து போகின்றன



சோனியா காந்தியின் இயற் பெயர் - எட்விகே அன்டோனியா அல்பினா மைனோ என்பதாகும். சோனியா ஒரு ரோமானிய கத்தோலிக்க கிருஸ்தவ குடும்பத்தில் ஆயிரத்தி தொள்ளயிரத்தி நாப்பத்தி ஆறாம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். தந்தை ஸ்டீபானோ ஒரு கட்டிட ஒப்பந்தகாரர்.




இவருடைய தாயும் ,இரு சகோதரிகளும் தற்போதும் இருப்பது இத்தாலியில் .கல்வி பயில்வதர்க்காக கேம்பிரிட்ஜ் சென்றார் சோனியா அது ஆயிரத்தி தொள்ளயிராத்தி அறுபத்தி நான்காம் வருடம் .அதே வருடம் இந்தியாவில் இருந்து ராஜிவ் காந்தி ட்ரினிட்டி கல்லுரியின் மாணவனாக கேம்பிரிட்ஜ் இல் இருந்தார்.


சோனியா வும் ராஜிவும் மூன்று வருட காதலுக்கு பின் ஆயிரத்தி தொள்ளயிரத்தி அறுபத்தி ஏட்டில் .திருமணம் செய்து கொண்டனர். தன்னுடைய் தாய் இந்திர காந்தியின் பூரண சம்மதம் இல்லாமல் அந்த திருமணம் அப்போது நடந்ததாக அப்போது ஊடகங்கள் எழுதின, எனினும் தன்னுடைய பிள்ளையான ராஜிவுக்கு இந்திரா பூரண சுதந்திரம் கொடுந்திருந்தார்




இந்திராவுக்கு மிக பிடித்த மருமகளாக சோனியா இருந்தார் என்பது பின்னாளில் இந்திய கண்ட ஒன்று.

சோனியா மற்றும் ராஜிவின் வசந்தகளாக இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள், முதலாமவர் ராகுல் காந்தி இராண்டாவதாக பிறந்ததவர் பிரியங்கா காந்தி.இருவரும் ராஜிவை நம் கண் முன்னே கொண்டு வர குடிய சிரிப்புக்கு சொந்த காரர்கள்



ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு ஆயிரத்தி தொள்ளயிரத்தி எண்பத்தி நான்கில், இந்திய குடியுரிமை பெற்றார் சோனியா.ராஜிவின் புகழுக்கு களங்கமாக விளங்கிய போபிஒர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம் இத்தாலியின் குட்ரோச்சி என்பவர் சோனியாவின் மூலமாகவே ராஜிவுக்கு அறிமுக மானார் என்பதும் ஊடகங்களின் ஆய்வு.



ராஜிவின் மறைவிற்கு பின் சோனியா அரசியலுக்கு வராமல் விலகியே இருந்தார்.ஆயிரத்தி தொள்ளயிரத்தி தொண்ணுற்றி ஏழில் அடிப்படை உறுப்பினாராக இணைந்த சோனியா தொண்ணுற்றி எட்டில் அதன் (காங்கிரஸின் )தலைவர் ஆனார்.





இன்றைய தேதியில் உலகின் அதிகாரம் மிக்க முதல் பத்து பெண்மணிகளில் சோனியா ஒருவராக உள்ளார்.

கடந்த முறை நடந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் காங்க்றேச்சின் வெற்றி சொநியவல் கிடைத்ததே.





தன்னுடைய காதல், தேசத்தை கடந்து ஒரு உன்னத கலாச்சாரம் நிறைந்த இந்திய திரு நாட்டிற்கு வழி நடத்தி செல்லுகின்ற அளவிற்கு தனக்கு அதிகாரத்தையும்,நம்பிக்கையும் கொடுக்கும் என சோனியா அன்று நினைத்திருக்க மாட்டார் என்பது உண்மை. அதுவே காதலின் பரிசாகவும் வெளிப்பாடகவும் நாம் இன்று காண்கிறோம்


தூய்மையான காதல் வாழ்க பல சரித்திரங்களை அது படைக்கும் .அதற்க்கு சோனியாவின் வாழ்கையும் ஒரு சான்று .


வியாழன், 12 பிப்ரவரி, 2009

இது கனவல்ல நிஜம்-விகடனில் எனது வலை பதிவு !!




தமிழகத்தின் ஜனரஞ்சகமான ஒரு வாராந்திரி விகடன் ,எண்பத்தி ஐந்து ஆண்டுகள் கடந்து இன்றும் கூட பத்திரிக்கை உலகில் தனக்கென்று ஒரு பாணியை கடை பிடிக்கும் விகடன் பத்திரிக்கையின் புதிய வலைத்தளத்தில் என்னுடைய வலை பதிவு ஒன்று கடந்த வாரம் பிரசுரிக்கபட்டுளது.




தரமான படைப்புகளை பிரசுரிக்கும் விகடன் குழுமத்தில் எனது வலைப்புவிளிரிந்து ஒரு பதிவு பிரசுரிக்கபட்டுளது மிக்க மகிழ்வை நல்குகிறது



"எய்ட்ஸ்-சில நியாயங்களும்,சில அநியாயங்களும் "பிப்ரவரி இரண்டாம் தேதி என்னுடைய வலை பூவில் வெளியிட்டேன் அது சென்ற வாரத்தில் விகடனால் பிரசுரிக்க பட்டுள்ளது.


வாசக நண்பர்கள் அனைவர்க்கும் எனது நன்றி...தொடர்ந்து உங்களுடைய கருத்துகளை அறிய எனது வலைப்பூவில் நான் காத்திருப்பேன்

http://youthful.vikatan.com/youth/bcorner.asp

இந்த முகவரியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

நான் கடவுள் எனும் - அகோரி பாபாக்கள் !!!


நான் கடவுள் பார்த்த பிரமிப்பிலிரிந்து மீளாமல் இருக்கும் உங்களுக்கு அகோரி பாபாக்களை குறித்து இந்த பதிவு உங்களுக்கு சொல்லும் .


அகோரிகளையும்..ஊனமுற்ற மனிதர்களையும், பிச்சை காரர்களையும் தனக்கே உரிய மாறுப்பட்ட கண்ணோட்டத்தோடு இயக்குனர் பாலாவும், இசை ஞானி இளையராஜாவும் நமக்கு தமிழ் சினிமா மூலம் காட்டியிருப்பது .வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது எனலாம்.


சற்றேரக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கபாலிக பிரிவிலிறிந்து தோன்றிய ஒரு பிரிவுதான் அகோரிகள் எனப்படும் நர மாமிசம் உண்ணும் அமானுஷ்ய இந்து சாதுக்கள் பிரிவு



இவர்களை மற்ற இந்து பிரிவுகள் அங்கிகரிக்கவில்லை காரணம் இவர்களுடைய பிணங்களை உண்ணும் பழக்கமும், போதை வஸ்துக்களை உபயோகிக்கும் போக்கும்



தீமைகளை அழிக்கும் கடவுளான சிவனையே தங்கள் முதலும் கடைசியுமான தெய்வமாக அகோரிகள் வழி படுகிறார்கள்.இந்த நில உலகில் தென் படுகின்ற கல்லும்,மரமும்,மிருகங்களும் ,தோன்றுகின்ற ஒவ்வொரு எண்ணங்களிலும் சிவன்..சிவனை தவிர வேறொன்றும் இல்லை என்பதுதான்

இறந்து போன மனித உடலை கங்கை கரை ஓரத்தில் எரிப்பதும், கங்கை நீரில் வீசுவதும் இறந்து போன மனிதனை சொர்கத்திற்கு கொண்டு செல்லும் என்பது வழி வழியாக இந்து சமயத்தில் பின்பற்றப்படும் ஒரு நம்பிக்கை
அகோரிகள் இப்படி வீச படும் உடலை கங்கையிளிரிந்து வெளியே இழுத்து அவற்றை உண்கிறார்கள்...எரிந்தும் எரியாத பிணங்களை உண்கிறார்கள் .அவர்களை பொறுத்துவரை இறந்து போன உடல் உலக்கத்திற்க்கு உதவாத குப்பை மற்றவர்களுக்கு வேண்டுமானால் அது மனித உடலாக இருக்கலாம்
அமானுஷ்ய சக்திகளை கடுமையான தாந்தரிக பயிற்சியினாலும்,கடின மன உறுதியினாலும் பெரும் அகோரி சாதுக்களை ..வழி படுவதற்கும் ஆசி பெறுவதற்கும் பலர் காடும் மலையும் தேடி செல்வது வழக்கம்.

நீங்கள் பார்கின்ற இந்த அகோரி சாது தன்னுடைய ஆண்குறியினால் இந்த பளுவினை சுமந்து காட்டுகிறார்.
அகோரி பாபாக்களின் உலகம் வேறு..மனித கபால ஓட்டில் உண்பதும் ,குடிப்பதும் இவர்களுடைய தினசரி நடவடிக்கையில் ஒன்றாக இருக்கும்.உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும் ,இடது கையில் மண்டை ஓட்டையும் ,வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளம் .
ஒற்றை காலில் பலமணி நேரம் நிற்கும் அகோரிகள், நெருப்பில் படுத்து கொண்டு புன்னகைக்கும் அகோரிகள், மனதின் எல்லையற்ற சக்தியை வெளிகொணர்ந்து காட்டும் அகோரி பாபாக்கள் இன்றும் கங்கை கரை ஓரத்திலும், வாரனாசியின் ( காசியின்) உள்ளேயும் காண இயலும் .


திங்கள், 9 பிப்ரவரி, 2009

மூடநம்பிக்கைகள்..


நிலவினை மேகங்கள் சூழ..
வானில் ஒளி குன்றும்

புறத்தே கடின தோலும் ,முள்ளும் இருக்க
அகத்தே தேன் சுவை இனிய பலா

விதைவைக்கு வெள்ளை சேலை என்பார்,
ராகு காலம் என்பார்,எம கண்டம் என்பார்,

செவ்வாய் தோழம் என்பார்,
மூலம் நிர்மூலமாக்கும் என்பார்,

மழை பொழிய நாய்க்கும் , கழுதைக்கும் திருமணம் செய்வர்,
வீட்டு உத்திரத்தில் பல்லியின் ஓசைக்கு செவிகொடுப்பர்,

குட்டியிட்டு திரியும் பூனை குறுக்கே வந்தால் ....
அபசகுனம் என்பர்,தும்மினாலும் அமங்கலம் என்பர்.

அன்பே உருவான இறைவனுக்கு...
ஆடும்,மாடும்,கோழியும் பலி கொடுத்து படையளிடுவர்,

நிலவினை மேகங்கள் சூழ..
வானில் ஒளி குன்றும்!

மூட நம்பிக்கை நிறைத்த சமுகத்து வானில்..
எந்த நிலவும் நிரந்தரமாய் உதிப்பதுமில்லை !

வியாழன், 5 பிப்ரவரி, 2009

பகவான் ரஜ்னீஷ் வாழ்கையும் ,முரண்பாடுகளும் !!



பாரத திருநாட்டில் எண்ணற்ற தத்துவ ஞானிகளும்,மத குருமார்களும் தோன்றினர்.பல ஆயிரம் ஆண்டுகள் தொன்று தொட்டு நிகழ்ந்துவரும் இந்த சுழற்சியில் முற்றிலும் மாறுபட்ட சித்தாந்தங்களையும்,பயிற்சிமுறைகளையும் கொண்டு வந்தவர் ரஜ்னீஷ்.


காமத்திலிறிந்து கடவுள் என்கின்றன சித்தாந்தமும் கொள்கையும் பல கண்டனங்களுக்கும் ,தடைகளையும் கொண்டு வந்து ரஜனீஷின் வாழ்கையை மிக உயரத்திற்கும்..மிக பாதளத்திர்க்கும் கொண்டு சென்றது.


அவருடைய வாழ்கையை குறித்தும் ,அவருடைய பணிகள் குறித்தும் இந்த சிறிய பதிவில் காண்போம்.







இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் ,குச்வாடா என்னும் சிறிய கிராமத்தில் ரஜ்னீஷ் என்கிற சந்திர மோகன் ஜெயின் பிறந்தார். பிறந்த வருடம் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பத்தி ஒன்று டிசம்பர் மாதம்


அவருடைய தந்தை துணி வியாபாரி .பதினோரு பிள்ளைகளின் மூத்த பிள்ளையாக ரஜ்னீஷ் பிறந்தார். தன்னுடைய ஏழு வயது வரை தன்னுடைய தாத்தா ,பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தார்.பெற்றோர்களின் கவனிப்பு இல்லாததும் தன்னுடைய பாட்டியின் மித மிஞ்சிய சுதந்திரமே தன்னுடைய உலக ஞானத்திற்கு வழி கோளியதாக ரஜ்னீஷ் பின்னாளில் நினைவு கூர்ந்துள்ளார் .



கஜூறேகாவின் கோயில் உடலுறவு சிற்ப்பங்களை தன்னுடைய சிறு வயதிலேயே பள்ளி பருவத்திலே பல முறை பார்த்ததாகவும் ,அதன் மூலம் பாலுணர்வு குறித்துதனக்கு உலகத்தின் பார்வை மிக வித்தியாசமாக தெரிவதாகவும் ரஜ்னீஷ் தெரிவித்துள்ளார்.



தன்னுடைய இருபத்தி இரண்டாம் வயதில் தான் ஞானம் அடைந்ததாக ரஜ்னீஷ் கூறுகிறார்.அந்த அனுபவம் எப்படியிருந்தது வெனில்.. ''அந்த மரங்களும்,செடிகொடி களும் உயிர்ப்பு நிலைக்கு வந்து நின்றன ..எங்கும் உயிர்ப்பு நிலையும்,ஒளி வெள்ளமும் நான் கண்டேன் .அவற்றில் ஒரு மரம் ஒளி வெள்ளத்தில் மிதந்தது நான் அதன் அடியில் சென்று அமர்ந்தேன் ..அது என்னை உள் வாங்கி கொண்டது.இந்த பிரபஞ்சமே தெய்விக பிரார்த்தனை போல் தோன்றியது ""



பி .எ .தத்துவம் முடித்தவுடன் இந்திய முழுக்க பல இடங்களுக்கு சென்று சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் ரஜ்னீஷ்.சிறந்த ,வசீகரம் மிக்க தன்னுடைய இந்தி ,மற்றும் ஆங்கில பேச்சுக்களால் ,பலரது கவனத்தை ஈர்த்தார் ரஜ்னீஷ்



தன்னுடைய இயற் பெயரான சந்திர மோகன் மறைந்து ஆச்சார்யா ரஜ்னீஷ் என்று அழைக்கப்பட்டார்.இந்து மதத்தையும், மகாத்மா காந்தியை குறித்தும் வெகு வெளிபடையாக விமர்சித்தார் ரஜ்னீஷ்.இதனால் பலரின் கவனம் அவரின் மீது திரும்பியது.




ஆயிரத்தி தொள்ளயிரதி அறுபத்தி எட்டில் தன்னுடைய ஆசிரிய பணியை உதறி விட்டு.முழு நேர போதகாரக உரு மாறினர்.புதிய தியான வகுப்புகளை மூன்று நாள் முகாம் களாக நடத்தினார் ரஜ்னீஷ்.



காமத்திலிறிந்து கடவுள் என்கின்றன நூல் ஆயிரத்தி தொள்ளயிரதி அறுபத்தி எட்டில் வெளி வந்தது.இந்து சமய தலைவர்கள் பாலுறவு,சுதந்திரத்தை ஆதரிக்க வேண்டும் என்று ரஜ்னீஷ் கருத்து தெரிவித்திரிந்தார்...இது மிக பெரும் கண்டனத்தை இந்து சமய்த்திளிரிந்து வெளி கொணர்ந்தது




ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபதில் மும்பைக்கு குடி பெயர்ந்தார் ரஜ்னீஷ்.முதல் பெண் சீடராக ஒரு செல்வந்த ஜைன பெண்ணை தேர்ந்தெடுத்தார் .ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி நான்கில் புனே வில் ஒரு மிக பெரிய ஆசிரமம் நிறுவப்பட்டது.இந்தியாவில் நிறுவப்பட்டு இன்றளவும் இயங்கும் ஒரு ஆசிரமம் இது


இந்த கால கட்டத்தில் தான் மேற்கத்திய சீடர்கள் இவருடைய கருத்தின் பால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்து தங்கினர். இந்தியாவில் இவரை செக்ஸ் குரு என்றும் புத்தி பிறழ்ந்த மனிதர் என்றும் கருதப்பட்டார்


இந்த ஆசிரமத்தில் பல சட்ட விரோத செயல்கள் அப்போது நிகழ்ந்தேற தொடங்கின.பயிர்ச்சி முறைகளில் பாலுணர்வு வெளிப்படையாக அரங்கேற்றப்பட்டதகவும் தகவல்கள் பரவின


மேலும் ஆசிரம விச்தரிப்புகளுக்காக நிலம் தேடப்பட்டது .ஆனால் மொராஜி தேசாய் அரசு நிலத்திகான அனுமதியை நல்காமல் ரத்து செய்தது. முக்கியமாக மேற்கத்திய நாட்டினருக்கான விசா நடிமுறைகள் கடுமையாக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டது


ஏற்கனவே இந்தியாவில் இருந்த மேற்கத்திய ரஜ்னீஷ் சீடர்கள் விபசாரம்,மற்றும் போதை பயன் பாடுகளுக்காக கைது செய்யப்பட்டனர்



ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பத்தி ஒன்றில் ரஜ்னீஷ் முதன் முறையாக அமெரிக்கா சென்றார், மருத்துவ அறுவை சிகிச்சைக்காக சென்ற பயணம் அது .இந்திய அரசு ஆச்ரமத்திற்கான நிலம் தராத தருணத்தில் அமெரிக்காவில் இருநூற்றி அறுபது சதுர கிலோ meeter பரப்பளவில் நிலம் வங்க பட்டது .




விலை உயர்ந்த ரோல்ல்ஸ் ராய்ஸ் கார்கள் ராஜ்நீஷ்கு பரிசாக குவிந்தன.அப்போது உலகில் எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்ட நேரம் .தங்களுடைய சீடர்கள் பாலுறவின் போது கை உரைகளும் ,ஆணுறை தடுப்பும் செய்து கொள்ள வேண்டும் என்று ஆச்ரமம் கேட்டு கொண்டது




ராஜ்நீச்கு பதில் அவருடைய மேற்கத்திய சீடையான ஷீலா எல்லா காரியங்களையும் மேற்கொண்டார்.ரஜ்னீஷ் இடைப்பட்ட இந்த காலத்தில் மௌன தியானம் செய்ய தொடங்கியதால் எல்லா பொறுப்புகளும் ஷீலாவை சேர்ந்தது





அமெரிக்கா அரசு இந்த ஒரேகான் ஆச்ரமத்தில் பல சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதாக கருதி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.ரஜ்னீஷ் மீது முப்பத்தி ஆறு வழக்குகள் பதிய பட்டன. அவற்றில் இரண்டை சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் தங்கியத்தையும்,தன்னுடைய சீடர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக குடியுரிமை பெறுவதற்கான திருமனகளை செய்ததையும் ஒப்பு கொண்டார் ரஜ்னீஷ்



ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பத்தி ஐந்தில் ரஜ்னீஷ் கைது செய்யப்பட்டு நாடு கடத்த பட்டார், எல்ல நாடுகளும் அவரை ஏற்று கொள்ள மருத்தான,பல நாடுகளில் அவர் விமான நிலையதிளிரிந்து திருப்பி அனுப்ப பட்டார்.





ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பத்தி ஆறு முதல் தான் தொண்ணூறு வரை .தான் இறக்கும் வரை அவர் பூனவிலேயே இருந்தார்.



அவர் வேலீயம் என்கின்றன ரசாயன பொருளை இடைப்பட்ட நாட்களில் பயன் படுத்தினார் என்றும்,எய்ட்ஸ் நோயில் தன்னுடைய ஐம்பத்தி எட்டாம் வயதில் மறைந்தார் எனவும் பல நிரூபிக்கப்படாத தகவல்கள் உலா வந்தன




ஓஷோ பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை இந்த பூமியை பார்வையிட்டது ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பத்தி ஒன்று டிசம்பர் மாதம் முதல் ஜனவரி பத்தொம்பது ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூறு வரை என்று அவருடைய சமாதி பறை சாற்றுகிறது .அவருடைய இறப்பிற்கு காரணம் இதய கோளாறு என வெளி உலகத்திற்கு ஆச்ரமத்தால் தெரிவிக்கப்பட்டது .











செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

நீங்கள் எழுத நினைத்த கடிதம்...!!


இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய பிள்ளைக்கு எழுத நினைக்கும் ஒரு கடிதம் இது..உங்கள் தந்தையின் உணர்வுகளை,ஒரு தகப்பனாக நீங்களும் உணரச்செய்யும் ஒரு கடிதம் இது.நீங்கள் எழுத நினைத்த கடிதத்தை நான் உங்களுக்கு காட்டுகிறேன்


அன்பின் இனிய.....


பச்சிளன்குழந்தயாக முதன் முதலில் கையில் ஏந்தி உன்னை கண்ட அந்த நாள் இன்னும் எனக்கு ஞாபக்கத்தில் உள்ளது. ரோஜா பூவின் மென்மையான உனது பாதங்களில் எனது கன்னங்களை வைத்து பார்த்த அந்த நாட்கள் இனியது !


என்னுடைய கனவுகளையும் ஆசைகளையும், உயிர்ப்போடு நிஜமாக எனது கைகளில் பார்த்த அந்த நாள் இனியது.பிறந்து சில மணி நேரங்களை அயர்ந்து தூங்கிய உனது முகத்தில் எத்தனை சாந்தம் . இனம் புரியாத ஏதோ ஒன்றிற்கு உனது அழகிய முகத்தில் தோன்றி மறைந்தன, சில மின்னல் புன்னகைகள் உன்னை பார்த்து என்னை உணர செய்த அந்த தருணங்கள் இனியது



தாயின் மடி தேடி முட்டி பருகும் கன்று போல் ,உனது முதல் பசியின் வேட்கையை தாய் பால் தொடக்கி வைத்தது !.
உன்னை குறித்தான எனது கனவுகளே என்னுடைய வாழ்கயாகி போகிறது !உன்னுடைய பாதைகளை நான் தீர்மானிக்க விழைகிறேன் , உன்னுடைய ஒவ்வொரு வயதின் காலகட்டத்திலும் உன்னை குறித்தான எனது கனவுகள் நீள்கின்றன


நீ மேலேறி செல்ல எனது உள்ளங்கைகளை நிலத்தில் வைக்கிறேன் , என்னுடைய கரங்களுக்கு கீழே முற்களும் ,கரடுகளும் இருந்தாலும் நான் உன்னை தாங்குகிறேன் ..நீ சிரிக்கிறாய் எனது வலிகள் எனக்கு பழகி போகின்றன
என்னுடைய சந்தோழத்திற்காக அன்று எனக்காக கரம் பதித்த என்னுடைய தந்தையை குறித்தான எண்ணங்களை நீ எனக்கு மறை முகமாக ஞாபகபடுத்துகிறாய் !. நாளை உனது பிள்ளைகளுக்காக கரம் பதித்து தாங்கும் போது ,நான் உன்னால் நினைவு கூறப்படுவது உண்மை.!!



நீ மேலேறி செல்ல செல்ல எனக்கும் உனக்குமான இடைவெளி நீண்டு போகிறது!. உனக்கென்று ஒரு உலகம் ,அது என்னுடைய கனவுகளிளிரிந்து வேறுப்பட்டதாய் இருக்கிறது ,எனது கனவுகள் உனக்கு விளங்காமலே போகிறது

எனக்கும் எனது தந்தைக்கும் இருந்த கனவுகளின் இடைவெளியை மீண்டும் நீ எனக்கு ஞாபகபடுத்துகிறாய்!

வாழ்கையில் புரிபடாத பல விழயங்கள் உன்னால் எனக்கு விளங்க வைக்கப்படுகிறது . இருப்பினும் உன்னை குறித்தான எனது கனவுகள் இந்த நெஞ்சின் ஓரத்தில் உயிர்ப்போடு உள்ளது , அவ்வாறே எனது தந்தைக்கும், நாளை உனக்கும் இருக்கும் என்பதை நான் உணர்கிறேன் ...நீ..??

அன்புடன்
தந்தை


திங்கள், 2 பிப்ரவரி, 2009

எய்ட்ஸ் - சில நியாயங்களும் சில அநியாயங்களும் !!


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக மக்களின் கவனத்தை கவராமல் ஒரு ஆட்கொல்லி நோய் உலகை ஊடுருவியது. ஆப்பரிக்க கண்டத்தில் தென் சகாரா பகுதியில் இந்த ஆட்கொல்லி நோய் ஊடுருவியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன .ஆயிரத்தி தொள்ளயிரத்தி ஐம்பதாம் ஆண்டு தொடஙகி..மெல்ல மெல்ல இனம் புரியாத இந்த நோயை குறித்து ஆய்வுகள் நடந்தன



அதிகார பூர்வமாக ஆயிரத்தி தொள்ளயிரத்தி எண்பத்தி ஒன்றாம் ஆண்டு இந்த பேராபத்தான நோய் உலகிற்கு அறிவிக்கப்பட்டது.அன்று தொடஙகி இராண்டயிரத்தி ஆறு வரை இருபத்தி ஐந்து வருடங்களில் இருபத்தி ஐந்து மில்லியன் மக்களை கொன்றது அந்த நோய்- அதுவே இன்றைய எய்ட்ஸ்!

நீங்கள் மேலே பார்க்கின்ற அந்த பந்து எய்ட்ஸ் வைரஸ் இன் தோற்றம்


சிம்பன்சீ மனித குரங்கிளிரிந்து இது மனிதர்களுக்கு பரவியதாக (HUNTERS THEORY)ஒரு அனுமானம் உண்டு. வேட்டையாடும்போது மனித குரங்கின் ரத்ததிளிரிந்து மணித் ரத்தத்தில் உள் புகுந்து கொண்டது எய்ட்ஸ் வைரஸ் என்பது HUNTERS THEORY
இந்த நோய் பரவ மிக முக்கிய காரணியாக கண்டறியப்பட்டது பாதுகாப்பட்ட்ற பாலுறவு ,ரத்தத்தின் மூலம்,தாய் பாலின் மூலமும் பரவுகிறது
இந்த நோய் தாக்கி இதுவரை இராண்டயிரத்தி ஆறு வரை ஐந்து லட்சத்தி எழுபதாயிரம் குழந்தைகள் இறந்து பொய் உள்ளனர்.இது எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோயின் அநியாய பசியின் வேட்கை .
மேலே நீங்கள் பார்ப்பது நெஞ்சை உருக்கும் ஒரு ஆந்திர மாநில பச்சிளம் குழந்தையின் தோற்றம்.ரோஜா பூவை சிரிக்க வேண்டிய இந்த குழந்தை இப்படி நோயினால் கதற என்ன பாவம் செய்தது ??

பாவத்தின் சம்பளம் மரணம் என்பார்கள் பாவம் செய்பவர்களுக்கு எய்ட்ஸ் இறைவன் அளித்த பரிசு எனில் அது ஒரு வகையில் நியாயமே ஆனால் ஒரு பாவம் செய்யாத பச்சிளம் குழந்தைகளும்,பிற மனிதர்கள் இறப்பதும் அநியாயம் அன்றோ!
இன்றைய மத்திப்பிடுகளின் படி ஆப்பிரிக்க கண்டம் எய்ட்ஸ் நோய் தாக்கத்தில் முதலிடம் வகிக்கிறது .ஏறக்குறைய தொண்ணுறு மில்லியன் மக்களை அது விழுங்கும் என்பது ஆய்வுகளின் முடிவு.

இவற்றின் ஊடாக பதினெட்டு மில்லியன் குழந்தைகள் ஆனதயக்க படுவார்கள் !.இப்பொழுது தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டாலும் அது எல்லா நாடுகளையும் இன்னும் முழுமையாக சென்றடைய வில்லை !.இந்த மருந்துகளின் மூலம் மரணத்தை தள்ளி போட இயலுமே ஒழிய நோயை குனபடுத்த இயலாது
ஒரு மனிதன் தவறு செய்தால் அதற்க்கான தண்டனை அவனுக்கு மட்டுமே..இது சட்டத்தின் கோட்பாடு! இது நியாயமானது . எய்ட்ஸ் நோயின் கோட்பாடு முற்றிலும் வேறுபட்டது தவறு செய்தவனை அது தண்டிக்கிறது! அவனுடைய குடுமபத்தை நிராதரவக்கி நிர்மூல படுத்துகிறது ..பின்னர் சமுதாயத்தில் பரவி மெல்ல மெல்ல மரண பரிசுகளை அள்ளி தருகிறது





இளமையின் வேகத்தில் தவறுகள்..இறுதியில் இளமைன் அடையாளம் இழந்து வாழும் போதே பிணமாக..மரணத்தை எதிர் நோக்கி ..தன்னுடைய குடும்பத்தை ,சமுகத்தை சகலத்தையுன் அழித்து மண்ணுக்குள்...!!!




இந்த கண்களில் தெரிவது என்ன? உங்களில் யாருக்கேனும் எதாவது புரிகிறதா...வார்த்தைகள் தேவையா இந்த கண்கள் என்ன சொல்கிறது என அறிய??
உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன !!