ஞாயிறு, 4 ஜனவரி, 2009

கடவுளை காப்பாற்றுங்கள்!!

உலகை இறைவன் சமநிலையில் படியாத்தான் என்பது ஏற்று கொள்ள இயலாத கூற்று !.ஆடம்பரமான வாழ்கை கொண்ட மனிதர்கள் ஒரு புறம்,வயிற்றுக்கு உணவில்லாமல் இறக்க காத்திருக்கும் மனிதர்கள் ஒரு புறம், அடர்ந்த கருப்பில் மனிதர்கள் ஒரு புறம்,மஞ்சளும்,சிகப்பும்,வெளுப்பும் கொண்ட மனிதர்கள் ஒரு புறம்.இறைவன் உலகை சமநிலையில் படைக்கவில்லை

இளமையில் வறுமை,இளமையில் வறுமை இவை இரண்டும் மிக கொடியது.உலகில் அனுதினமும் இருபத்தி எழாயிரதிலிருந்து முப்பதாயிரம் குழந்தைகள் ஏழ்மையால் இறந்து போகின்றனர்! இது உலக குழந்தைகள் நல அமைப்பின் கணக்கு !!
இருபத்தி ஆறு சதவிதம் வளரும் நாடுகளில் பிறக்கு குழந்தைகள் ஆப்ரிக்கா மற்று ஆசியாவை சேர்ந்த குழந்தைகள் குறைந்த எடியுடனும் வலுவட்ட்ரும் பிறக்கின்றன!


தெற்காசியாவில் குழந்தை தொழிலாளர்கள் பெருமளவில் உள்ளார்கள்.வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில்,குழந்தைகள் பலவித கடின தொழில்களில் ஈடுபடுத்தபடுகிறார்கள் .

உலகின் தொண்ணுறு சதவித மலேரியா சாவுகள் ஆபிரிக்காவில் நிகழ்கிறது .



உலகில் நூற்றி இருபத்தி ஒரு மில்லியன் குழந்தைகள் படிக்க வசதி இல்லாமல் உள்ளார்கள்.


இப்படி ஏழ்மை ,கொடிய நோயான Yஎய்ட்ஸ் பாதிப்பிலும் ஒன்டுமரியாத அப்பாவி குழந்தைகள் மடிந்தபடி உள்ளார்கள்.குழந்தைகள் அவர்களுடைய கனவுகள் சிதைக்கபடுகிண்டறன!. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள்.அந்த அருமை நிறைந்த குழந்தைகளின் உலகளாவிய நிலை குறித்து இந்த பதிவு ஒரு சிறு அடையாளத்தை மட்டுமே காட்டுகிறது


மலரும் பருவத்தில் தங்களுடைய கனவுகளையும்,வாழ்க்கையையும் தொலைத்து நிற்கின்ற இந்த இனிய கடுவுளர்களுக்கு இந்த பதிவு ஒரு கண்ணிற் துளியாகும்!



பிட்சை எடுத்து அதில் உயிர் வாழும் அவலம் ..இந்த கொடுமை ..ஒன்றுமறியாத இவனுடைய வாழ்கையை எங்கு கொண்டு பொய் சேர்க்கும்?



"உலகம் சமநிலை பெறவேண்டும் ..உயர்வு தாழ்விலா நிலை வேண்டும் " இந்த பழைய பாடல் உண்மை ஆகவேண்டும்.அருமை குழந்தைகள் அவர்குளுடைய எதிர்காலம் சிறக்க வேண்டும்!
இந்த கடவுளர்களை காப்பற்ற அந்த கடவளால் முடியுமா?